என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

குழந்தை பிரசவமும் பராமரிப்பும்


குழந்தை பிரசவமும் பராமரிப்பும்பிரசவம் எவ்வாறு நிகழ்கிறது

பிரசவம் என்பது கர்ப்பமுற்ற  பெண்; தன் வயிற்றுக்குள்ளேயே பத்துமாதங்கள் பொத்தி வைத்து பாதுகாத்த  குழந்தையை இப்பூவுலகில் பிரசவித்தல் எனப் பொருள்படும். சில சந்தற்பங்களில் ஒரு தாய் ஒன்றிற்கு பேற்பட்ட குழந்தைகளை பிரசவிப்பதும் உண்டு. ஒரு தாய் தன் யோனிவழியாக குழந்தையை பிரசவித்தல் என்பது மிகவும் வேதனைகளும் சோதனைகளும் நிறைந்த நிகழ்வாகும். "அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்" என்பது பழமொழி. தற்பொழுது வைத்தியசாலைகளில் நவீன வசதிகள் இருப்பதனால் பிரசவத்தின் போது ஏற்படுகின்ற ஆபத்துக்கள் குறைந்துள்ளன.

சாதாரணமாக யோனிவழிப் பிரசவம்   (normal Vaginal Delivery) என்பது கருப்பைச் சுருக்கத்துடன் (Uterine Contraction) கருப்பைக் கழுத்து திறக்கப்பட்டு (Cervical dilatation) குழந்தை வெளியே வரும் சாதாரண முறையாகும். பிரசவ குத்து வந்தவுடன் பிரசவ அறைக்குள் கற்பிணியை கூட்டிச் சென்று வைத்தியர், தாதிகளின் உதவியுடன் பிள்ளையை பிறக்க வைப்பது என்பதாகும்.

சில கர்ப்பவதிகளுக்கு பிரசவ குத்து ஆரம்பமாகியும் பிள்ளை பிறப்பதில் தாமதம் ஏற்படுகிகின்றது. சிலருக்கு பிரசவ அறிகுறிகள் தென்பட்ட போதிலும் பிரசவ குத்து குறைவாக இருக்கும். அப்போது பிரசவலி (Oxytocin) எனப்படுகின்ற ஓமோன் வகை மருந்தை ஊசி மூலம் ஏற்றி பிரசவ குத்தை உண்டு பண்ணி (Induced Labour) குழந்தையைப் பிறக்க செய்கிறார்கள்.

பிரசவ வலி எப்போது எடுக்கும் என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. அதிகமாக வலி எடுத்தால் சில மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளை குளிப்பாட்டுவர். இளஞ்சூடான நீரில் குளித்தால் ஆரம்பகால பிரசவ வேதனையை சற்று தணிக்கும் என்பதால் இவ்வாறு செய்கிறார்கள். தாங்க முடியாத வலி ஏற்படும்போது சில குறிப்பிட்ட வலி நிவாரணிகளை மருத்துவர் தருவார். பேறு காலத்தில் ஏற்படும் வேதனையை நினைத்து கவலைப்படுவதால் வலி அதிகரிக்கும். எனவே, வலியைக் குறைக்க மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சுவாசிக்கும்போது மார்பகச்சுவர் விரிவடைந்து, உதரவி தானம் அதிகளவு கீழ் இறங்குவதுதான் முழுமையான சுவாசம். நீங்கள் சரியான வழியில் சுவாசித்தால் குழந்தைப்பேற்றின்போது மிகச்சுலபமாக குழந்தை வெளித்தள்ளப்படும்.

சாதாரணமாக கருவுற்ற பெண்ணுக்கு 280 நாட்களின் முடிவில் குழந்தை பெறுவதற்கான குத்து ஏற்படலாம். இது இரு வாரங்கள் முன்னால் அல்லது பின்னால் நிகழ்வதும் சாதாரணமானது. கருவுற்ற பின் கருப்பை விரிவடையும் போது தாயானவள் ஒரு சிறு அசௌகரியத்தை உணரக் கூடும். மேலும் கருப்பை விரிய விரிய அங்கே காணப்படும் நரம்புகள் முறுக்கப்பட்டு அழுத்தப்படுவதால் வயிற்று நோவு சற்று அதிகமாக நிகழக் கூடும்.

கர்ப்பகாலம் 35 வாரங்களை (245-நாட்கள்) அண்மிக்கும் போது (கர்ப்பகாலம், கடைசி முதல் மாதவிடாய்த் திகதியிலிருந்து கணிக்கப்படும்) விட்டு விட்டு ஏற்படும் “பிரக்ஸ்ரஸன் கிரிக்“ எனப்படும் குத்துவலி எழும்பும். இவ்வாறான நோக்கள் பல காணப்படும் போது எவ்வாறு உண்மையான பிரசவ வலியை உணர்வது என்று நீங்கள் கேட்கலாம். பிரசவ வலியின் போது கடுமையான கருப்பைச் சுருக்கத்துடன் வேதனை அதிகரித்துச் செல்வதுடன் இரு குத்து வலிகளுக்கிடையிலான நேர இடைவெளி (The Interval between the contraction) குறைந்து

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...