என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

அழகி ஆகலாம்

கண்: கண்ணைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க வெள்ளரிக்காய் ஜூஸை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் போட்டு வரவும்.
உதடு: உதடு வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர், பால் இம் மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரில் கழுவி எடுக்க வேண்டும்.
முகத்தின் எண்ணைப் பசை நீங்க: முட்டையின் வெண்கரு 7 ஸ்பூன், தேன் கால் ஸ்பூன், மாதுளை ஜூஸ் அரை ஸ்பூன் மூன்றையும் கலந்து அரை மணி நேரம் பூசிவிட்டு முகம் கழுவினால், எண்ணைப் பசை நீங்கிவிடும்.
முக வறட்சி நீங்க: பச்சை கொத்த மல்லி அல்லது புதினாவை நன்றாக அரைத்து முகத்தில் பூசி பிறகு சிறிது நேரம் கழித்து அலம்ப வேண்டும்.
கரும்புள்ளி மறைய: முகப்பருவால் ஏற் படும் ஜாதிக்காயை அரைத்துப் போடவும். முகப்பரு நீங்க: பூண்டு அல்லது கருந் துளசியை அரைத்துப் போட நாளடைவில் பருக்கள் மறையும்.
வாய் நாற்றம்: புதினா கீரையைக் காய வைத்து பொடி செய்து பல் துலக்குவதால் வாய் நாற்றமின்றிப் பல் பளிச்சென்றிருக்கும்.
வெண்மையான பல்: இரவு நேரத்தில் பச்சை கேரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன், பல் வெண்மை பெறும்.
உதடு: உதட்டில் தேங்காய் எண்ணை தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும்.
கை: பாத்திரம் தேய்ப்பதால் ஏற்படும் கை வெடிப்புகளுக்கு உருளைக்கிழங்கை வேக வைத்து பொடித்து கைகளில் தேய்த்து வந் தால் கை மிருதுவாக இருக்கும்.
நகம்: நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண் ணையை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்.
மார்பகங்களைப் பாதுகாக்க: வெள்ளைக் குன்றிமணி வேரை எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்றாக அரைத்து மார்பகங்களின் மீது பூசிவர, தளர்ந்த மார்பகம் சரியான வடிவம் பெறும்.
வியர்வை நாற்றம்: ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி, சமமான அளவு பயத்தம் மாவு கலந்து அரைத்து தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் அகலும்.
உடல் பருமன்: பப்பாளிக் காயை பொறியலோ, குழம்பு வைத்தோ வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
பாதம்: பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந் நீரில் பத்து நிமிடம் காலை ஊறவிட்டு, பின்பு இக்கலவையைப் பூசிவர வெடிப்பு நீங்கும்.
 

வறண்ட சருமம் பொலிவு பெற

தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும். தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் அரை மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். வெயிலின் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளான உங்கள் வறண்ட சருமம் பொலிவு பெறும்.

அழகு தரும் ஆப்பிள் பழம்

* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர்,
1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.

* ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து,
பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.

* ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால்
முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

* ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து
தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்

சிக்கன் பஃப் (Chicken Puff)

தேவையான பொருட்கள் :
பஃப்
(Chicken Puff) பேஸ்ட்ரி -ஒரு பாக்கெட்
எலும்பில்லாத கோழி-அரை கிலோ
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி- 20 கிராம்
பூண்டு- 20 கிராம்
கிராம்பு-  4                                                             
பட்டை-1
மஞ்சள் தூள் -அரை ஸ்பூன்
மிளகுத்தூள்  -ஒரு ஸ்பூன்
மிளகாய்த்தூள் -ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் -1 ஸ்பூன் 
சோம்பு அரை- ஸ்பூன்
கரம் மசாலா -1 ஸ்பூன்

அரைக்க வேண்டியவை :

இஞ்சி, பூண்டு, கிராம்பு, மஞ்சள்தூள், பட்டை அனைத்தையும் நன்கு அரைத்துக்கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் சோம்பு போட்டு சிவந்ததும், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அரைத்த கலவையை இதனுடன் சேர்க்கவும். பிறகு தக்காளி, கரம் மசாலா, மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூளை இதனுடன் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய கோழித்துண்டுகளை தேவையான அளவு உப்புடன் சேர்த்து  ஈரப்பசை போக, சுக்கா வறுவலாக வறுத்தெடுக்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளை இதனுடன் கலந்து இறக்கவும். இறக்கியபின் ஒரு ஸ்பூன் மிளகுத்துளைச் சேர்த்து நன்றாக குலுக்கிவிடவும்.  இப்போது பஃப்-க்குள் வைக்கவேண்டிய சிக்கன் கலவை ரெடி.  இந்தச் சிக்கன் கலவையை பஃப்-க்குள் வைப்பதற்கு ஏதுவாக, கிட்டத்தட்ட கைமா செய்வதுபோல் சிறுசிறு துண்டுகளாகப் பொடி செய்து கொள்ளவும்.

Image

அழகு குறிப்புகள் -தேன்

டோநர்  (Toner )

வெள்ளரிக்காய் ஜூஸ் 2   டீஸ்பூன்  + தேன் 1 டீஸ்பூன்  இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி  15  நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் போர்ஸ்  (pores ) எல்லாம் போய் முகம் நல்ல மெதுவாக (soft)  இருக்கும் .

ஸ்கரப் (scrub)

ஒட்ஸ்( oats)  2  டீஸ்பூன் + தேன் 2 டீஸ்பூன் + பாதாம் பவுடர் 1 டிஸ்பூன் +  தயிர்  2 டிஸ்பூன்  நான்கையும்  நன்றாக மிக்ஸ் செய்து  முகத்தில் தடவி  10  நிமடத்திற்கு சர்குலர் மோஷனில் தேய்க்கவும் .பிறகு 10  நிமிடம்  ஊறவைத்து கழுவவும்.இப்படி இரண்டு  வாரம் ஒரு  முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத டெட் ஸ்கின் (deadskins) எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும்  .

 ப்ளீச் (Bleach)

 தேன்  2டீஸ்பூன்  + லேமன் ஜூஸ் 2டீஸ்பூன்  இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து   முகத்தில் தடவி  15  நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு  முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத தழும்புகள்  எல்லாம் போய் முகம் சிவந்து  தெரியும் .

க்லன்சர் (cleanser)

1/4 cup  தேன் + சோப் (liquid soap)  1 டீஸ்பூன் + கிளசரீன் (glycerin)  1 டீஸ்பூன்  மூன்றையும்  நன்றாக மிக்ஸ் செய்து   முகத்தில் தடவி  15  நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு  முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத  கரும் புள்ளிகள்,  முகப்பறு எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும் .

உலர்ந்த திராட்சை

திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.

இந்த பழங்களை உலரவைத்து எடுக்கப்படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். ஆரம்ப காலத்தில் அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்ததால் இதற்கு கிசுமுசுப் பழம் என பெயரிட்டனர்.

பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயசம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

குழந்தைகள் வளர்ச்சிக்கு

வளரும் குழந்தைகளுக்கு ஏற்றபழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான். கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.

இரத்த விருத்திக்கு

எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

உடல் வலி குணமாக

பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு

கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.

பெண்களுக்கு

மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம்.

வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் சீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சனை தீராது. இதனால் மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி என பல உபாதைகள் உருவாகும்.

இந்தப் பிரச்சனைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.

தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும்.

குடல்புண் ஆற

அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.

இதயத் துடிப்பு சீராக

சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.

சுகமான நித்திரைக்கு

தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.

தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

பட்டர் சிக்கன்

தேவையான  பொருட்கள்:
கோழி  - அரை கிலோ , பெரிய வெங்காயம்  -1 கப்  நறுக்கிய தக்காளி -1 கப்
மஞ்சள் தூள்-அறை ஸ்பூன்,மல்லி தூள்-1 டீ ஸ்பூன்,மிளகாய் தூள் -தேவையான அளவு,உப்பு - தேவையான அளவு,இஞ்சி பூண்டு விழுது - டீ ஸ்பூன்,வெண்ணை -3 டீ ஸ்பூன்,சிகப்பு கலர் பவுடர் சிறிது .
Image


தாளிக்க :

சோம்பு,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,கறிவேப்பிலை,எண்ணெய்
அரைக்க :
தேங்காய் -அரை கப்,முந்திரி பருப்பு -10
(இவற்றை  தனித்தனியாக அரைத்து கொள்ளவும் )

செய்முறை :
வாணலியில் எண்ணெய் + வெண்ணை விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த இஞ்சி பூண்டு விழுது ,மஞ்சள் ,மிளகாய்த் தூள் ,மல்லித்தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு கோழி,கலர் பவுடர் , அரைத்த தேங்காய் , இரண்டு டம்லர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். கோழி நன்றாக வெந்தவுடன் அரைத்த முந்தரி விழுதை சேர்த்து நன்கு கிளறி குறைந்த தீயில் சிறிது நேரம் வேக விடவும் . அடுப்பை அணைத்து மல்லித் தலை தூவி இறக்கவும்.

ஆட்டுக்கறி மிளகாய்ச் சுக்கா

தேவையான பொருட்கள்

ஆட்டுக்கறி - 250 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 3/4 கோப்பை
உப்பு - தேவையான அளவு
Image
செய்முறை
ஆட்டுக்கறியைச் சிறு சிறு துண்டுகளாக்கி மஞ்சள் தூள் உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து நன்கு கழுவி எடுக்கவும். ஆட்டுக்கறியுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துப் பிசறிக் குக்கரில் முக்கால் வேக்காடு வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, நன்கு காய்ந்தவுடன், கறித்துண்டுகளைச் சேர்த்து நன்கு வறுத்தெடுக்கவும். துண்டுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வரும் வரை வறுக்க வேண்டும். தற்போது 'சும்மா கும்முனு' ஆட்டுக்கறி மிளகாய்ச் சுக்கா ரெடி.
குறிப்பு
இளங்கறியாக இருந்தால் அரை வேக்காடு போதும். காரம் அவரவர் விருப்பத்துக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சற்றுத் தாரளமாக இருப்பதுதான் சுக்காவுக்கே சுவை. (எப்போதாவது ஒரு தடைவை என்றால் பாதகம் இல்லை). கரம் மசாலா தேவையென்றால் சேர்த்துக் கொள்ளவும்.

பேரிச்சம்பழ உருண்டை

தேவையான பொருட்கள்

வெண்ணை                            :  1/2 கப்
வெள்ளம்                                 :  1/2 கப்
பேரிச்சம்பழம்                        :  1 1/2 கப் (கோட்டை நீக்கி பொடியாக நறுக்கி  கொள்ளவும்)
முட்டை                                  :  1 (லேசாக அடித்து கொள்ளவும்)
வெணிலா எசன்ஸ்              :  1 டீ ஸ்பூன்
தோல் நீக்கிய பாதம்
அல்லது வால் நட்ஸ்          :  1/2 கப்
ரைஸ் சீரீயல் அல்லது
கான் பிளேக்ஸ்                      :  2 கப் (கான் பிளேக்ஸ் பொடி பண்ணிக்கொள்ளவும்)
Image

செய்முறை


வெண்ணை, வெள்ளம், பேரிச்சம்பழம், முட்டை, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கிகொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொட்டி  குறைந்த சூட்டில் 8 நிமிடத்திற்கு கிண்டவும். கலவை, அல்வா பதத்திற்கு  வந்தவுடன்  அடுப்பை நிறுத்தி, பாதாமை அதில் சேர்த்து  நன்கு கிளறவும். சூடு ஆரியதும் வெணிலா எசன்ஸ், ரைஸ் சீரீயல் இரண்டையும் சேர்க்கவும். சிறிய சிறிய உருண்டைகளாக பிடிக்கவும். இது குழுந்தைகளுக்கு ரொம்ப நல்லது.

கிச்சன் டிப்ஸ் ;

* தேங்காய் துருவலுடன், ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து, தேங்காய் பர்பி செய்தால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

* தோசை மாவுடன், சிறிதளவு சோளமாவு சேர்த்து தோசை வார்த்தால், தோசையின் சுவை அபாரமாக இருக்கும்.

*இட்லிப் பொடி தயாரிக்கும் போது, சிறிதளவு கருவேப்பிலையை வறுத்து சேர்த்து அரைத்தால், ருசியாக இருக்கும்.

*தயிர் வடை செய்யும் போது வடையை பொரித் ததும், அதை சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறும்.

*ஜவ்வரிசி பாயசம் செய்யும் போது, இரண்டு டீஸ்பூன் வறுத்த கோதுமை மாவை பாலில் கரைத்து ஊற்றி செய்தால், பாயசம் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும்.

*இட்லிக்கான அரிசியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போல இருக்கும்.

*முள்ளங்கி சாம்பார் செய்யும் போது, சிறிதளவு எண்ணெயில் முள்ளங்கியை வதக்கிய பின் சாம்பார் செய்தால் ருசி கூடும்.

*கட்லெட் செய்யும் போது, அவை எண்ணெயில் போட்டதும் உதிர்ந்து போகாமல் இருக்க, கலவையில் சிறிது முட்டையை ஊற்றி பிசைந்து செய்யலாம். முட்டை விரும்பாதவர்கள் அதற்கு பதில் பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து கட்லெட் கலவையுடன் சேர்த்து செய்யலாம்.

*கட்லெட் செய்ய ரொட்டி தூள் இல்லையென்றால், அரிசியை பொரித்து தூளாக்கி பயன்படுத்தலாம்.

*வெங்காய பஜ்ஜிக்கான வெங்காயத்தை, தோலை உரிக்காமல் வட்டமாக வெட்டி விட்டு பின் தோலை உரித்தால், வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும்.

*உளுந்தம்பருப்பு வடைக்கு அரைக்கும் போது, சிறிதளவு பச்சரிசியையும் சேர்த்து அரைத்தால், வடை மொறுமொறுப்பாக இருக்கும்.

*உளுந்தம்பருப்பு வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமாகி விட்டதா? அதில், சிறிது பச்சரிசி மாவை தூவினால் தண்ணீரை அரிசி மாவு உறிஞ்சிவிடும்.

*உருளைக்கிழங்கை சீவியதும் சிறிதளவு பயத்தம்பருப்பு மாவை தூவி, சிப்ஸ் செய்தால் மொறுமொறுவென்று இருக்கும்.

*பருப்பில் சிறிதளவு நெய் விட்டு வேக வைத்தால், விரைவாக வேகும். அதோடு சுவையும் மணமும் அதிகரிக்கும்.

*மோர் குழம்பு செய்து இறக்கும் போது சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் வாசனையாக இருக்கும்.

*கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை போன்றவற்றில் சமையலுக்கு தேவையானதை, முதல் நாள் ஊறப் போட மறந்து விட்டால், அவற்றை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்து பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்கு வெந்து விடும்.

*தோசை மாவு அரைக்கும் போது சிறிதளவு கடலைப் பருப்பை சேர்த்து அரைத்தால், தோசை பொன்னிறமாக வரும்.

*தோசை மாவில் வெந்தயப் பொடி சிறிதளவு சேர்த்து தோசை வார்த்தால் வாசனையாக இருக்கும்.

*மிளகாயை வறுத்து பொடி செய்யும் போது, சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வறுத்தால், அவை கமறாமல் இருப்பதோடு, பொடியும் மணமாக இருக்கும்.

*வற்றல் குழம்பு தாளிக்க நல்லெண்ணெய் பயன் படுத்தினால், வாசனை நன்றாக இருக்கும்.

உடல் எைடையக் கூட்டலாம், குைறக்கலாம்

உடல் எைடையக் கூட்டவும், குைறக்கவும் திராட்ைசப்
பழம் உதவுகிறது.
உலர்ந்த திராட்ைசயில் சாதாரண திராட்சைய விட 8
மடங்கு அதிக சர்க்கைரச் சத்து உள்ளது.
ெதாடர்ந்து உலர்ந்த திராட்சைய சாப்பிட்டு வந்தால்
உடல் எைடைய அதிகரிக்கும்.
அேத திராட்ைச உடல் எைடையக் குைறக்கவும்
உதவுகிறது
அதாவது, கருப்பு திராட்ைச பழச்சாறு 200 மில்லிைய
தினமும் 2 ேவைள குடித்து வந்தால் அதிகப்படியான
ெகாழுப்புச் சத்து குைறந்து விடும்.
எனேவ உங்களது உடல் எைட கட்டுப்பாட்டுக்குள்
வரும்.
உடல் எைடையக் கூட்டவும், குைறக்கவும் திராட்ைசப்பழம் உதவுகிறது.உலர்ந்த திராட்ைசயில் சாதாரண திராட்ைசைய விட 8மடங்கு அதிக சர்க்கைரச் சத்து உள்ளது.ெதாடர்ந்து உலர்ந்த திராட்ைசைய சாப்பிட்டு வந்தால்உடல் எைடைய அதிகரிக்கும்.அேத திராட்ைச உடல் எைடையக் குைறக்கவும்உதவுகிறதுஅதாவது, கருப்பு திராட்ைச பழச்சாறு 200 மில்லிையதினமும் 2 ேவைள குடித்து வந்தால் அதிகப்படியானெகாழுப்புச் சத்து குைறந்து விடும்.எனேவ உங்களது உடல் எைட கட்டுப்பாட்டுக்குள் வரும்.

அழகு டிப்சுகள்


* சந்தனம், முல்தானிமட்டி கலந்த, “பேஸ் பாக்’ உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.
* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள்,
// எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.
* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ
வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக
மாறும்.
* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால்
ஏற்படும் கருமை நிறம் மாறும்.
* 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி,
ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி
செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி
மறையும்.
தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால்
ஏற்பட்ட வடு மறையும்.
* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் //
சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
* பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு,
கரும்புள்ளி ஆகியவை மறையும்.
* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம்
பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன்
கிடைக்கும்.
* முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய்
எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.
* தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து
தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை
நிறம் மறையும்.
தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ
வேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.
* முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும்
கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ
வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும்.
* சுண்ணாம்பை தண்ணீர் கலந்து காலையில் தடவினால், மாலைக்குள் முகப்பரு
மறைந்து விடும்.
* வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் தக்காளி
சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில்
கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு
நிறப் புள்ளி மறையும்.
* உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும்
எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.
* முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை
அரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து
முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.
* கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ //
வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின்
முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்
மறையும்.
* கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து
பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.
* வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து
முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக
இருக்கும்.
* ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு நீங்கும்.
* நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் காட்டலாம்.
பேலன்ஸ்டு டயட் என்பது மிக மிக அவசியம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும்.
புருவங்களை சீர்திருத்தி கொண்டால் முகம் அழகாக இருக்கும். மிக மெல்லிய
புருவம் முகத்தை குண்டாகக் காட்டும். மிக அடர்த்தியான புருவம் வைத்துக்
கொள்வதும் தற்போது நாகரிகம் இல்லை.
*நெயில் பாலிஷ் வாங்கும்போது, நம் நிறத்திற்கு ஏற்ற வகையில்
தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.
*லிப்ஸ்டிக் போடும் போது, மெல்லிய உதடு உடையவர்கள் இளம் வண்ணங்களையும், பருமனான உதடு உடையவர்கள் ஆழ்ந்த வண்ணங்களையும் உபயோகப் படுத்த வேண்டும்.
// *காலை நேரங்களில் லைட் பிரவுன் அல்லது லைட் ப்ளு நிறமுள்ள ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். மாலை அல்லது இரவு நேர ரிஸப்ஷன், பார்ட்டி போன்றவைகளில் கலந்து கொள்ளும் போது டிரஸ்ஸிற்கு ஏற்ற நிறத்தில் பச்சை, நீலம், பிங்க்
போன்ற நிறங்களை பயன்படுத்தலாம்.
நம் அழகை வெளிப்படுத்துவதில் ஆடைக்கு முக்கிய பங்குண்டு. ஒல்லியாக
இருக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக்கூடாது. பிளவுசும் இறுக்கமாக
இல்லாமல் சிறிது தொள தொளவென அணிய வேண்டும். பருமனான உடல்வாகு கொண்டவர்கள் இறுக்கமாக உடையணிவது பருமனைக் குறைத்து காட்டும்.
*சேலை லேசான வண்ணமுடையதாக இருந்தால், பிளவுஸ் சற்று அழுத்தமான
வண்ணமுடையதாக இருப்பது நல்லது. சேலையின் வண்ணம் அழுத்தமாக இருந்தால், பிளவுஸ் லேசான நிறத்தில் இருப்பது நல்லது. ஒரே நிறத்தில் சேலை, பிளவுஸ்
என பார்த்து வாங்குவதை விட, இவ்வாறு அணிவது அழகை மேம்படுத்திக் காட்டும்.
*ஷாப்பிங் போகும்போது சிறிய பூக்கள் போட்ட இளம் வண்ண நைலான் சேலைகளையே பயன்படுத்துங்கள். கோவில், கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது ஆழ்ந்த வண்ணம் கொண்ட காட்டன் சேலைகளே ஏற்றது.
*உயரமாக உள்ள பெண்கள், தங்கள் உயரத்தை சற்றுக் குறைத்துக் காட்ட குறுக்கு
கோடு போட்ட சேலைகளை தேர்தெடுத்து அணிய வேண்டும். குள்ளமான பெண்கள் உயரத்தை சற்று அதிகரித்து காட்ட நேர்வாக்கில் கோடு போட்ட சேலைகளை அணிய வேண்டும்.
*மூக்கு பெரிதாக உள்ள பெண்கள் தங்கள் கூந்தலை தூக்கி
// சீவ வேண்டும்.
கூந்தலை அழுத்தி வாரக்கூடாது. தூக்கி சீவினால் மூக்கு அளவுடன் இருப்பதை
போல் தோற்றம் கிடைக்கும்.

நோய் தீர்க்கும் காய்கனிகள்

மாம்பழம்

மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகாpக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

கொய்யா பழம்

சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

பப்பாளி

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப் பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சாpயான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நோpடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

அன்னாசி

அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அhpய மருந்தாகவும் இருக்கிறது.
தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றhக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

விளாம்பழம்

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.
பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜPரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

மாதுளம் பழம்

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிhpல் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

வாழைப்பழம்

மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜPரண சக்தி உண்டாகும்.
எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசாp உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தௌpவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தாpக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தாpக்க வாய்ப்பாகும்.
ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் …ஏ† உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் …ஏ† உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றhது.

ஆரஞ்சுப்பழம்

ஆரஞ்சில் வைட்டமின் …ஏ அதிகமாகவும், வைட்டமின் …சி-யும், …பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.
இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றhக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

திராட்சைப் பழம்

எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சாpயாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றhக பசி எடுக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளாpல் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். இருமல் நின்று விடும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும். தலைவலி இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது.
தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தினை இரண்டாக பிளந்து ஒரு பாதியை கொட்டிய இடத்தில் நன்றhக தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும்.
எலுமிச்சம் பழத்தினை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகாpப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜPரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவு கள் வராது.

பேரீச்சம்பழம்

தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.

எலுமிச்சம்பழம்

அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீhpல் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்

நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

பழங்களைப் போலவே காய்கறி களும் மனிதர்களுக்கு உடல்நலக் கோளாறுகளை தனிக்கும் வகையில்தான் உள்ளது. நோய்களை முழுது மாக குணப்படுத்து கிறதோ இல்லையோ ஆனால் நோய்வரா மல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது. நமது முன்னோர்களும், சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும். காய்கறிகள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. உடனே நீங்கள் இந்த நோய்க்கு இந்த காயை சாப்பிட்டால் இந்தக் குறிப்பிட்ட நோய் குணமாகிவிடுமா என்று கேள்வி கேட்கக் கூடாது.
பொதுவாக காய்கறிகளில் நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கிய முடன் வைத்திருக்க உதவுகிறது. நீரழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. காய் கறிகளில் இருக்கும் பைபர் எனப்படும் நார்சத்து வயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜPரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிhpத்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது. இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

உடலை பொன்னிறமாக மாற்றும் ஆவாரம்பூ

ஆவராரம்பூவை உணவில் அடிக்கடி சேர்த்துச் சமைத்து வந்தால் உடல் பொன்னிறமாக மாறும். சிலரது தோலில் உப்பு பூத்தாற்போல் வரண்டு இருக்கும் வியர்வையில் துர்வாடை வீசும் அடிக்கடி நாக்கு வறன்டுவிடும் இதை அனைத்தையும் போக்க சிறந்த மருந்து ஆவராம்பூ.
ஆவாரம்பூவைக்கொண்டு செய்யப்படும் சர்பத்தால் ஆண், பெண் மர்ம உறுப்புகளில் ஏற்படும் எரிச்சல் குணமடையும். உறக்கத்தில் விந்து வெளிப்படுதல் மற்றும் உடல் நமைச்சல் அடங்க ஆவாரம்பூ சர்பத் மிகவும் உகந்தது.

கண்நோய் உள்ளவர்கள் இதை வதக்கி இரவில் கண்களில் கட்டிக்கொண்டு படுத்தால் விரைவில் குணமடையும்.

சீரண உறுப்புகளை வலுப்படுத்தும் அன்னாசி

மஞ்சல் காமாலையை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் அன்னாசி சாறுக்கு உண்டு. இரத்தமிழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி மிகசிறந்த மருந்து. பித்த சம்பந்தமான கோளாறுகள் காரணமாக காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் போன்றவற்றை நீக்குவதில் அன்னாசி சூரன். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாக அன்னாசி உதவும். ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி கண், காது, பல், தொண்டை சம்பந்தமான அனைத்து நோய்களையும். வாய்ப்புண், மூலைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை தேனும் அன்னாசிப்ழமும் சேர்த்து செய்யப்படும் அன்னாசிப்பழ சர்பத்தை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் விரைவில் குணம் தெரியும்.

அன்னாசிப்பழம் அதிக சூடு, சீதபேதி, வயிற்றுவலி ஏற்படுத்தும் எனபது மூட நம்பிக்கை, மாம்பழம், ஆரஞ்சு பழங்களில் உள்ள அதே 14 கலோரி தான் அன்னாசியிலும் உள்ளது இது நாம் தினமும் பயன்படுத்தும் புலியின் அளவான 82 கலோரியைவிட மிகக்குறைவு. இரத்தத்தைச் சுத்தி செய்வது, சீரண உறுப்புகளை வலுப்படுத்துவது, மலக்குடலைச் சுத்தப்படுத்துவது அன்னாசியின் சிறப்பு.

தக்காளியின் சிறப்பு

நாம் எல்லோரும் கட்டாயம் தக்காளி பயன்படுத்த வேண்டும் . அதில் பல சிறப்பம்சங்கள உண்டு . பல வருத்தங்களுக்கு மருந்தாகவும் , நமது அழகாய் மெருகேற்றவும் தக்காளி பயன்படுகின்றது . அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் தக்காளியை .

தக்காளி  சமையலிற் காயாகவும் பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறிச் செடியினமாகும். தக்காளியின் தாயகம் தென் அமெரிக்கா . நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளிப் பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது . இதில் விட்டமின்  ஏ- சுமார் 91 மில்லி கிராம் உள்ளது.  நமது உடலில் இரத்த  உற்பத்திக்குப் பயன்படுவதோடு மட்டுமின்றி, இரத்தத்தை  சுத்திகரிப்பதட்க்கும் சீரான  இரத்த  ஓட்டத்திற்கும் இது பயன்படுகிறது.

தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் அனைத்தும் குறையாமல் நமக்குக் கிடைக்கும்.  தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது. அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம் தருகிறது.

இன்னும் சொல்லப்போனால், உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு இது மிகவும் சிறந்தது . குறிப்பாக இதை காலையிலும், மாலையிலும் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் வராது என்பதை விட, தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும் தன்மை இதற்கு உண்டு.

தக்காளியை சாப்பிடும் முன்போ அல்லது கறிகளுக்கு உபயோகிக்கும் போதோ நன்றாக கழுவ வேண்டும் .  மென்மைத் தன்மை இல்லாது முரட்டுத் தன்மையாக இருக்கும் முகத்திற்கு ஒரு தக்காளியை கூழாக்கி அதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்து முகத்தில் பூசி 5 நிமிடத்திற்கு பிறகு கழுவினால் முகம் மிருதுவாகி பிரகாசமாக காணப்படும்.
தக்காளி சோஸ் எல்லோரும் விரும்பி சாப்பிடுகிறார்கள் . மிகவும் நல்லக இருக்கும் . எல்லோருக்கும் சிறந்தது .

நாம் அன்றாடம் நமது உணவில் பயன்படுத்தும் தக்காளி விதைகளில் இருதய நாய் பாதிப்பை தடுக்கும் திறன் கொண்டவை என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தக்காளி விதையில் இயற்கையாக ஜெல் போன்ற திரவம் காணப்படுகிறது. அந்த திரவமானது ரத்தம் உறைவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும், சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதும் இந்த ஆய்வில் மேலும் தெரிய வந்துள்ளது.

ஒரு வெள்ளரித் துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்து இமைகளின் மேல் பூசி 2 நிமிடத்தின் பிறகு கழுவவேண்டும். இதை இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து செய்து வந்தாலே கருவளையம் ஓடிவிடும். முயற்சி செய்து பாருங்கள் . அழகுக்கும் தக்காளி பயன் படுகின்றது .

வியர்க்குருவை விரட்ட வெள்ளரி

ஒருவருக்கு வியர்த்தல் என்பது ஆரோக்கியமான நிகழ்வே. ஆனால், தற்போது கொளுத்தும் வெயிலினால் ஏற்படும் அதிகப்படியான வியர்வையால், பெரும்பாலானவர்கள் வியர்க்குரு போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். முதுகு, கழுத்து அல்லது தலை போன்ற பகுதிகளில் தோன்றும் வியர்க்குருக்கள் அரிப்பை உண்டாக்கும்.

* கோடை காலத்தில் வியர்க்குரு தோன்றாமல் இருக்க அடிக்கடி குளிக்க வேண்டும். குளிக்கும் போது மூலிகையினால் தயாரிக்கப்பட்ட சோப்புகளை பயன்படுத்துவதே சிறந்தது.

* வெள்ளரிக்காயை வெட்டி, வியர்க்குருவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 15 முதல் 20 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறைகள் செய்யலாம். இதை வியர்க்குரு மறையும் வரை தொடர்ந்து செய்யலாம்.

* சோற்றுக் கற்றாழை ஜெல்லை, வியர்க்குருவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்தால், நாளடைவில் குணமாகும்.

* வியர்க்குரு தோன்றியுள்ள பகுதிகளில், சாமந்தி பூவின் சாறு தடவினால் குணமடையும். சாமந்தி பூவை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட பவுடர்கள் மற்றும் ஆயின்மென்ட் போன்றவையும் கடைகளில் கிடைக்கின்றன.

* அதிக காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அதிக நறுமணம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுவதை தவிர்ப்பதே நல்லது.

* மூலிகைகளின் சாறுகளால் தயாரிக்கப்பட்ட தன்வந்த்ரம் தைலத்தை உடலில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம். இவ்வாறு தொடர்ந்து மூன்று வாரங்கள் செய்து வந்தால் வியர்க்குரு மறைந்து விடும்.

உதடுகளை பராம‌ரியு‌‌ங்க‌ள்

உ‌ங்க‌ள் உதடுகள் இளஞ்சிவப்பு நிறத்தை‌ப் பெற வே‌ண்டுமெ‌னி‌ல், உதடுக‌ளி‌ன் ‌மீது பீட்ரூட் சாறு தட‌வி வரவு‌ம்.

உதடுகள் வழுவழுப்பாகவும், இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்க ரோஜா இதழ்களை அரைத்து தடவவுது சிறந்தது.

வெந்நீரால் உதடுகளைக் கழுவி, வாஸலின் மற்றும் தேன் கலந்து குறைந்தது வாரத்திற்கு இரு முறை உதடுகளில் தடவி வரவும். உதடுகளில் வெடிப்புகள் மறையும்.

உதடுகள் பிளவுபடாமல் தடுக்க தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவவுவது நல்லது.

ரோஜா இதழ்களை வெண்ணெயில் கலந்து அதை அரை‌‌த்து உதடுகளில் தடவலாம்.

இரண்டு துளி கிளிசரின் மற்றும் 1/4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து உதடுகளில் தடவவும். உதடுகள் பிளவுபடாமல் இருக்கும்.

நாம் உண்ணும் உணவில் வைட்டமின் பி மற்றும் ஸி ஆகியவற்றை அதிகம் உட்கொள்வதால் உதட்டு வெடிப்பைத் தடுக்கலாம்.

இரண்டு துளி கிளிசரின் மற்றும் ஒரு தேக்கரண்டி பாலாடை உதடுகளில் தடவி வரவும். உதடுகள் வழுவழுப்பாக, மாறும்.

உட‌ல் எடையை குறை‌க்கு‌ம் உணவு

பொதுவாக வெள்ளை பூசணி அதிக நீர் உள்ள ஒரு காயாகும். ஆகவே வாரத்துக்கு இரு முறை பூசணிக்காய் சாறு பல்லது பயத்தம்பருப்பு போட்டு பூசணிக்காய் கூட்டோ செய்து உண்பது ந‌ல்ல‌து.

காய்கறி சாலட் அதிகம் உண்பது நலம். குடைமிளகாய், கோ‌ஸ், வெங்காயத்தாள், வெள்ள‌ரிக்காய் ஆகியவற்றை மெல்லியதாக வட்ட வடிவில் நறுக்கவும். சுவைக்கு உப்பு, மிளகு, எலுமிச்சை பிழியவும்.

இந்த வகை சாலட்களை மோருடன் வாரத்துக்கு இருமுறையேனும் மதிய உணவாக்கிக் கொள்ளவும். ஆனால் உணவுமுறை மட்டும் மாற்றினால் போதாது.

நாள்தோறும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சிக்கு ஒதுக்கினால் உடல் எடை கண்டிப்பாகக் குறையும்.

ஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை

சொர சொரப்பான சருமத்திற்கு, முட்டையின் மஞ்சள் கருவை பாதி தேக்கரண்டி தேனுடன் ஒரு தேக்கரண்டி பால் பவுடர் போட்டு கலந்து ‌விழுதா‌க்‌கி முகத்தில் சீராகத் தடவவும். 20 நிமிடத்திற்கு பிறகு முகத்தைக் கழுவவு‌ம்.

எண்ணெய்ப் பசை சருமத்திற்கு, முட்டையின் வெள்ளைக் கருவை பாதி தேக்கரண்டி தேனுடன், அ‌தி‌ல் பாதி தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து ‌விழுதா‌க்‌கி, அதனை முகத்தில் சீராகத் தடவவும். 20 நிமிடத்திற்குப் பிறகு முகத்தை கழுவவு‌ம்.

ஆழமான துளைகள் கொண்ட சருமத்திற்கு சோள மாவுடன் பால் கலந்து அடி‌த்து‌, அ‌தில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து “பேஸ்ட்” செய்து அதை முகத்தில் உடனே தடவிக் கொள்ளவும்.

கருப்பு மருக்களைக் கொண்ட சருமத்திற்கு, முட்டையின் வெள்ளைக் கருவை சோள மாவுடன் கலந்து பேஸ்ட் ஆக்கி இதைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது அரை மணி நேரம் வரை தடவவும். பிறகு தூய்மையான நீரில் தேய்த்துத் தேய்த்துக் கழுவவும்.

எல்லாவித சருமத்திற்கு‌ம், வெள்ளரி பேஸ்ட்டை செய்து முகத்தி‌ல் தடவவும். வெள்ளரி சாறு கண்களின் ஓரங்களில் உள்ள கரு வளையங்களை நீக்க உதவும். இது பொலிவை ஊட்டுவதோடு குளிர்ச்சியையும் தருகிறது.

பேரீச்சம்பழ கேக்

மைதா- இரண்டரை கப்,
வெண்ணெய்- ஒன்றேகால்கப்
பால்- ஒன்றரைகப்
கண்டன்ஸ்டு பால்- 1 டின் (400 மிலி
பேரீச்சம்பழம் (பொடியாக நறுக்கியது)- அரைகப்
ஆப்ப சோடா-1 டீஸ்பூன் (தலைதட்டி)
பேக்கிங்சோடா- 2 டீஸ்பூன் (தலை தட்டி)
வெனிலா எசன்ஸ்- 1 டேபிள்ஸ்பூன்
பொடித்த சர்க்கரை- 5 டேபிள்ஸ்பூன். 
 
மைதா 2டீஸ்பூன் தனியே எடுத்து வைத்து விடுங்கள்.பின்னர் 
மீதி இருக்கும் மைதாவுடன் சோடா,பேக்கிங் பவுடர் சேர்த்து 
சலியுங்கள்.பேரீச்சம்பழத்தில் 2டீஸ்பூன் மைதா சேர்த்து பிசறி 
வையுங்கள்.சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு 
குழையுங்கள்.பின்னர் கண்டன்ஸ்டு பால் சேருங்கள்.அத்துடன் 
பாலையும் மைதா,எசன்ஸையும் சேர்த்து நன்கு கலந்து 
கொள்ளுங்கள்.கடைசியில் பேரீச்சம் பழம் சேர்த்து கலந்து,
வெண்ணெய் தடவி,மைதா தூவிய ஒரு ட்ரேயில் ஊற்றி 180 
டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யுங்கள்.கடாயிலும் செய்யலாம்.

சைனீஸ் சில்லி சிக்கன்

தேவையானப் பொருட்கள்
கோழிக்கறி 400 கிராம் முட்டை2 கார்ன்ஸ்டார்ச் 2மேசைக்கரண்டி 
சோயாசாஸ் 2மேசைக்கரண்டி சில்லி சாஸ் 2மேசைக்கரண்டி 
பெரிய வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய்: 7 குடை மிளகாய் 3 
வினிகர் 2மேசைக்கரண்டி அஜினோமோட்டோ கால்தேக்கரண்டி 
மிளகுத்தூள் அரைத் தேக்கரண்டி உப்பு தேவையான அளவு
 
கோழி இறைச்சியினை நன்கு கழுவி சுத்தம் செய்து, விரல் நீளத் 
துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 
முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் 2 மேசைக்கரண்டி 
கார்ன்ஸ்டார்ச், 1மேசைக் கரண்டி சோயா சாஸ்,
1மேசைக்கரண்டி சில்லி சாஸ், தேவையான உப்பு சேர்த்து கலந்து, 
அதில் சிக்கன் துண்டுகளைப் போட்டு பிரட்டி அரை மணி நேரம் 
ஊறவிட வேண்டும்.வெங்காயத்தை குறுக்கு வாட்டில் இரண்டாக நறுக்கி, 
இதழ்களைப் பிரித்துக் கொள்ள வேண்டும். பூண்டினைத் 
நறுக்கிக் கொள்ள வேண்டும்.பச்சை மிளகாயின் காம்பு 
நீக்கி, நறுக்கிக் கொள்ள வேண்டும். குடை மிளகாயையும் 
கழுவி, விதைகளை நீக்கி சற்று பெரிய துண்டுகளாக 
நறுக்கிக் கொள்ள வேண்டும்.2தேக்கரண்டி கார்ன்ஸ்டார்ச் 
எடுத்து 3மேசைக்கரண்டி தண்ணீரில் கரைத்துக் கொள்ள 
வேண்டும். ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி, சிக்கன் 
துண்டங்களைப் போட்டு நன்கு பொரித்து எடுக்க வேண்டும். 
பிறகு எண்ணெய் உறிஞ்சு காகிததில் போட்டு எண்ணெய்யை 
சுத்தமாக வடித்து விட வேண்டும்.வாணலியில் 1மேசைக்கரண்டி 
எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டினைப் போட்டு 
இலேசாக வதக்க வேண்டும். பிறகு வெங்காயம், பச்சை 
மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.அதன் பிறகு 
குடை மிளகாய்த் துண்டங்களைச் சேர்த்து வதக்க 
வேண்டும். பிறகு மீதமுள்ள சோயா சாஸ், சில்லி சாஸ், 
அஜினோமோட்டோ, உப்பு, மிளகுத்தூள், கார்ன்ஸ்டார்ச் 
ஆகியவற்றைச் சேர்த்து கலந்து, அத்துடன் சிக்கன் துண்டங்களைச் 
சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். சிக்கன் துண்டங்களுடன் 
சாஸ் நன்கு படிந்ததும், இறக்கி சூடாகப் பரிமாற வேண்டும்.

பிஸ்தா ஐஸ்கிரீம்.

பால் - 3 கப்
சர்க்கரை - முக்கால் கப்
கார்ன்ஃப்ளார் - 5 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன்
யெல்லோ + க்ரீன் கலர் - ஒரு சிட்டிகை
க்ரீம் - ஒரு கப்
பிஸ்தா பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 
பிஸ்தா பருப்பை பொடியாக உடைத்துக் கொள்ளவும். ஒரு கனமான 
பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். 5 நிமிடம் கழித்து கார்ன்ஃப்ளாரை
சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொதிக்கும் பாலில் சேர்த்து கெட்டியாகும் 
வரை கொதிக்கவிடவும். சர்க்கரையையும் சேர்த்துகரையும் வரை 
கொதிக்கவிட்டு அடுப்பில் வைத்து இறக்கி நன்றாக ஆறவிடவும். 
எசன்ஸும் கலரும் சேர்க்கவும். இந்தக் கலவையை முட்டை அடிக்கும்
கருவியால் நன்றாக அடித்து க்ரீமை சேர்க்கவும். பிறகு இந்தக் கலவையை
ஃப்ரீஸரில் வைக்கவும். ஒரு மணிநேரம் கழித்து வெளியே எடுத்து 
மறுபடியும் ‘பீட்’ செய்யவும். உடைத்த பிஸ்தா பருப்பு களை சேர்க்கவும்.
ஐஸ் ட்ரேயில் கொட்டி பிளாஸ்டிக் ஷீட்டால் நன்றாக மூடிஃப்ரீஸரில் 
வைக்கவும்.

பண்டிகை பலகாரம்

நெய் அதிரசம்

வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுப் பாகு எடுத்துக் கொள்ளவும். வெல்லப் பாகை தண்ணீரில் விட்டுத் திரட்டி உருண்டு வரும் போது எடுத்து தட்டில் போட்டால் Ôடங்Õகென்ற சத்தம் ...
ரவை அல்வா

அகலமான ஒரு பாத்திரத்தில் பாதி நெய்யை விட்டுக் காய்ந்ததும் பிரிஞ்சி இலை போட்டு வதக்கவும். பிறகு ரவையை கொட்டி, பொன்னிறத்துக்கு வறுக்கவும். பிறகு 2 பங்கு தண்ணீர் ...
Previous
1 2 3

பேஷியல்






உடல் எடையைக் கூட்ட...

கொழுப்பு சத்து அதிகரிக்காமல் உடல் எடையைக் கூட்டுவதற்கான உணவுப் பழக்கம் (குறைந்தபட்சம் 21 நாட்கள் கடைப் பிடிக்க வேண்டும்).

* அதிகாலை மிதமான உடற்பயிற்சிக்கு முன்னதாக ஐந்து பாதாம் பருப்புகளை தினமும் உட்கொள்ளுங்கள். தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* பாஸ்ட் ஃபுட், க்ரீம் வகைகள் கலந்த உணவு மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

* வெண்ணெய் தடவிய நான்கு பிரட் டோஸ்ட், ஒருவித கொழுப்புச் சத்துள்ள பாலில் கலக்கப்பட்ட ஒரு கிளாஸ் ஹார்லிக்ஸ் அல்லது காம்ப்ளான்!

* உலர் பழங்களுடன் ஒரு பெரிய கிண்ணம் நிறைய அவித்த பயறு வகைகள், கொஞ்சம் முந்திரி, சர்க்கரை கலந்த திராட்சைப் பழரசம்.

* மூன்று இட்லி, சர்க்கரை கலக்காத வாழைப்பழ மில்க்ஷேக்.

* எண்ணெய் குறைவாக மூன்று தோசை, சர்க்கரை இல்லாத சப்போட்டா மில்க் ஷேக்.

* ரவா அல்லது சேமியா உப்புமா, சர்க்கரை இல்லாத ஃபைன் ஆப்பிள் ஜூஸ்.

* ஒரு கைப்பிடி உலர் பழங்கள் (அ) ஒரு கப் தயிர் (அ) அவித்த சோளம் (அ) கொஞ்சம் சீஸ். இவற்றுள் ஏதேனும் ஒன்றை மதிய உணவுக்கு முன்னர் நண்பகலில் சாப்பிடலாம்.

* மதிய உணவுக்கு மூன்று கரண்டி சாதம், சாம்பார், தயிர், மிக மிகக் குறைவான எண்ணெயில் பொரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு.

* இனிப்பான பிரெட் (அ) சர்க்கரை இல்லாத மில்க்ஷேக் (அ) பால், முட்டை கலந்த ஃப்ரூட் சாலட் இவற்றுள் ஏதேனும் ஒன்றை சாயங்கால ஸ்நாக்ஸ் ஆக உட்கொள்ளலாம்.

* இரவு உணவுக்கு முன்னர் காய்கறி அல்லது சிக்கன் சூப் குடிக்கலாம். நான்கு சப்பாத்தி, காய்கறி குருமா, தயிர் (அ) குறைவான தேங்காய் இல்லாத குருமாவுடன் நான்கு ஆப்பம்.

அரிசி மற்றும் அசைவ உணவு வகைகளை இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது!

இளமையாகத் தோன்ற ஆசையா?

முடிகொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும்:-

புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும்.

கண்ணில் கருவளையம் மறைய...

சில பெண்களுக்கு கண்களைச் சுற்றிகருப்பு வளையம் இருக்கும். இதை நீக்க வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

முகத்தை பாதுகாக்கும் முறை:-

ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணை வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.
உதடு உலர்ந்து விட்டதா?

உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும் இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.

கழுத்தில் உள்ள கருவளையம் மறைய:-

சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்படலாம். இதைப் போக்க. கோதுமை மாவில் வெண்ணையைக் கலந்து கழுத்தைச் சுற்றி பூசவும் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தினசரி செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் அகன்றுவிடும்.

இடுப்பில் காய்ப்புத் தழும்பு அகல:-

இடுப்பில் இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து லூசான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணையை இடுப்பைச் சுற்றி தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் போதும். மெதுவாக கறுப்புத் தழும்பு மறைந்து விடும்.

காது அழகை பராமரிப்பது எப்படி?

பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்தைத்தான் அடிக்கடி கழுவி பராமரிக்கிறோமே தவிர காதுகளை கண்டு கொள்வதே கிடையாது. இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும்... காதுகள் இரண்டும் முக அழகுக்கு வேட்டு வைத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும்.

ஆகவே பெண்மணிகளே காதை மிளிர வைப்பது எப்படி? என்பது பற்றிய யோசனையைகேளுங்க.

உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும், 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகிவிடும். முகத்திற்கு பூசும் பேஸ்- பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது.

சிறிது சூடாக்கப்பட்ட நல்ல எண்ணையினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்தும் பளபளவென பளிச்சிடும்.

குழந்தை நலம்

ஜுரம் - குழந்தைகளுக்கு அடிக்கடி வரும்

ஜுரம் - குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் ஜுரம் - குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் அன்றாட நோய் ஆகும் . ஜுரம் குறித்து சில உண்மைகளை இங்கே பார்க்கலாம்
உடல் வெப்பத்தை அளவிட இரண்டு அலகுகள் உள்ளன :
செல்சீயஸ் & பாரன்ஹீட்
நமது உடலின் சாதாரண வெப்பநிலை
36.7-37.2* C OR 98-99* F
எனவே நாம் எந்த அலகு கொண்டு உடல் வெப்பத்தை அளவிடுகிறோம் என்பதை கவனிக்கவேண்டும் .
சராசரி வெப்பம் --- 36.7-37.2* C OR 98-99*F
மித ஜுரம் ----37.2-37.8*C OR 99-100*F
ஜுரம் ----37.8-39.4*C OR 100.-103*F
அதிக ஜுரம் ----39.4-40.5*C OR 103-105*F
விஷ ஜுரம் ---->40.1*C OR >106*F
சுரத்தை அளவிடும் இடங்கள் :
வாய்: அக்குள் ; ஆசன வாய்
குழந்தைகளுக்கு அக்குள் மற்றும் அசன வாயில் பார்ப்பதே நல்லது .
ஜுரம் என்பதே ஒரு வியாதி அல்ல , ஒரு அறிகுறி மட்டுமே .
எதனால் ஜுரம் வந்துள்ளது என பார்த்து மருந்து தந்தால் மட்டுமே ஜுரம் குறையும் .
சுரத்தை குறைக்க PARACETAMOL சிறந்த மருந்து . குழந்தயின் எடைக்கு ஏற்ப தரவேண்டும் . 15 MG PER KG.
அதாவது பத்து கிலோ குழந்தைக்கு 150 Mg தரவேண்டும் . ஜுரம் குறையவில்லை என்றால் ஆறு மணிக்கு ஒரு முறை தொடர்ந்து இதே அளவு தர வேண்டும் .
சிரப் மருந்துகள் - இரண்டு அளவுகளில் சிரப் வருகிறது .. 125 AND 250
125 என்றால் 5 ML இல் 125 MG இருக்கும்
ஒரு ML இல் 25 MG இருக்கும் .
பத்து கிலோ குழந்தைக்கு ஆறு மிலி தரவேண்டும்
250 என்றால் 5 ML இல் 250MG இருக்கும்
ஒரு ML இல் 50 MG இருக்கும் . பத்து கிலோ குழந்தைக்கு மூன்று மிலி தரவேண்டும் .
மாத்திரை அளவுகள் : 125, 250, 325, 500, 650, 750, 1000MG ஆகிய அளவுகளில் கிடைக்கும் .
8 கிலோ குழந்தைக்கு 125MG ஒரு மாத்திரை ஆறு மணிக்கு ஒரு முறை தரவேண்டும்
15 கிலோ குழந்தைக்கு 250 MG ஒரு மாத்திரை ஆறு மணிக்கு ஒரு முறை தரவேண்டும்
20 கிலோ குழந்தைக்கு 325MG ஒரு மாத்திரை ஆறு மணிக்கு ஒரு முறை தரவேண்டும்
30கிலோ குழந்தைக்கு 500MG ஒரு மாத்திரை ஆறு மணிக்கு ஒரு முறை தரவேண்டும்

குழந்தைக்கான இயற்கை டானிக்..

தினமும் வாழைப்பழம், இரவு உலர்ந்த திராட்சை, மாலையில் நிலக்கடலை உருண்டை, ராகி-சம்பா கோதுமை சேர்த்து செய்த கருப்பட்டி கலந்த கஞ்சி, பசு நெய் ஊற்றிய பருப்பு சாதம், கடைந்த கீரை, மசித்த உருளைக்கிழங்கு, பசும்பால் இவையெல்லாம் உடலின் எடையைச் சீராகப் பராமரிக்கும். குழந்தைக்கு நல்ல போஷாக்கையும் தரும். இதை தொடர்ந்து கொடுத்து வந்தாலே மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

கருப்பான பெண்கள் நிறமாக மாற



கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, அப்படிக் காட்டிக் கொள்ள என்னவெல்லாம் அழகு சிகிச்கைகள் உள்ளன....? பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் பற்றி விளக்குகிறார் …இந்தியன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் பியூட்டி தெரபியின் இயக்குனர் ஹசீனா சையத்.
பழ பேஷியல்
முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும்.
காய்கறி பேஷியல்
முதலில் சொன்ன மாதிரி பச்சைப் பாலால் முகத்தைத் துடைக்கவும். முட்டைக் கோஸை பச்சையாக மசித்து வைத்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் சாறும் எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும்.
மேற்சொன்ன இரண்டு பேஷியல்களையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.
சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம்.
நன்கு அடித்த பூவன் வாழைப் பழத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, ஊற விட்டுக் கழுவி வர, நிறம் கூடுவதைக் காணலாம்.
குங்குமப் பூ சாப்பிட்டால் நிறம் கூடுமா என்பது பலரது சந்தேகம். அதை அப்படியே பாலில் கலந்து குடிப்பது பலன் தராது. சூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும்.
ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிறம் நிச்சயம் கூடும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டியது முக்கியம்.
வெயிலில் செல்கிறபோது எஸ்.பி.எஃப் 20 முதல் 30 வரை உள்ள சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, டூ வீலரில் செல்கிற போது கைகளுக்கு கிளவுஸ் அணிவது, நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

மசாலா குருமா

தேவையானவை:

விரும்புகிற காய் (கலந்ததாகவோ, தனியாகவோ) நறுக்கியது - 2 கப், வெங்காயம் - 3, தக்காளி - 4, உப்பு - தேவைக்கு. தாளிக்க: சோம்பு - அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 1, எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 5 பல், சோம்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள் - இரண்டரை டீஸ்பூன், தனியா தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - அரை கப், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1.

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்க உள்ளவற்றைப் போட்டுத் தாளியுங்கள். இதனுடன் வெங்காயம் சேர்த்து, நிறம் மாறும்வரை வதக்குங்கள். பின்னர், தக்காளி, காய்(கள்), அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில் வதக்குங்கள். காய்கறி(கள்) வெந்து, பச்சை வாசனை போன பிறகு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்குங்கள்.
மசாலா, குருமா... இரண்டின் சுவையையும் அனுபவியுங்கள்.

சில்லி சிக்கன்

தேவையான பொருட்கள்:
_______________________
எலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ
மிளகாய்த்தூள் : 2 தே. கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப)
சோளமாவு: 1 தே. கரண்டி
முட்டை : 1
பச்சை மிளகாய்: 6 (உங்கள் தேவைக்கேற்ப)
இஞ்சி : ஒரு சிறு துண்டு
டொமாடோ சாஸ்: 4 தே.கரண்டி
சோயா சாஸ் : 2 தே. கரண்டி
சில்லி சாஸ்: 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் : சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணை பொரிக்க, தாளிக்க வெண்ணை 2 தே. கரண்டி
அஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தே.கரண்டி
செய்முறை
__________
*கோழி இறைச்சியை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக்கி வைத்துக்கொள்ளவும்.
*ஒரு முட்டையுடன் ஒரு தே. கரண்டி சோளமாவை நன்றாகக் கலந்து இறைச்சியுடன் சேர்க்கவும் உடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ஒரு தே. கரண்டி சோயா சாஸ் ஆகியவற்றை கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும்.
*ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி ஊறின இறைச்சியை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுக்கவும்.
*பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். இஞ்சியை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
*ஒரு வாணலியில் வெண்ணை போட்டு அது காய்ந்ததும் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும் இறைச்சியையும் சேர்த்து கிளறவும்.
* சிறிது நேரம் சென்றபின் ஒரு தே.கரண்டி சோயா சாஸ்,சில்லி சாஸ், 4 தே. கரண்டி டொமாடோ சாஸ் போட்டு கிளறிவிடவும்.
சில்லி சிக்கன் தயார். பரோட்ட, சப்பாத்திக்கு சூப்பரா இருக்குங்க.
குறிப்பு:
_______
உங்களுக்கு விருப்பமானால் பச்சை மிளகாய்க்கு பதில் வரமிளகாய் போட்டுக்கொள்ளலாம்.
இஞ்சியை ஓரளவு சிறிதாக நறுக்கினால் போதும்.. உண்ணும்பொழுது அவ்வப்பொழுது சிக்கும் இஞ்சி துண்டுகளின் சுவை அலாதியாக இருக்கும்.
மிகவும் டிரையாக இருக்கவேண்டாமென்றால் பச்சை மிளகாய் வதக்கும் பொழுது சிறிது வெங்காயமும் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
உங்களுக்கு தேவையான அளவுக்கு காரத்தை போடுங்க.

கண்கள் அழகாக, பளிச்சென்று இருக்க…

“கண்களின் வார்த்தைகள் புரியாதா” என்று கண்கள் நமது உணர்ச்சிகளை வெளிகாட்டும் ஒரு உறுப்பாக இருக்கிறது. கண்களை பராமரிப்பது என்பது மிகவும் கவனமாக செய்யவேண்டிய ஒன்று. கண்களை சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. எந்த கெமிக்கலையும் உபயோகிக்கும் முன் அது தரமானதா என்று பரிசோதித்துவிட்டு கண்களுக்கு போடுவது மிகவும் அவசியம். கண்கள் என்றதும் கருவளையம்தான் பலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கண்களைச் சுற்றி கரு வளையம் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் சரியான தூக்கம் இல்லாததே முழு முதற்காரணம் என்று சொல்லலாம். நல்ல தூக்கம் மிகவும் அவசியம். பகல் தூக்கத்தை விட இரவு தூக்கம் மிகவும் முக்கியம். இரவு தூக்கம் என்பது தொடர்ச்சியாக 8 மணி நேரமாவது இருக்குமாறு உங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுங்கள். கருவளையம் போக்குவதற்கு இயற்கை மருத்துவத்தில் தயிர் பரிந்துரைக்கப்படுகிறது. தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனம் கலந்து தினமும் கண்ணுக்கு அடியில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கண்ணின் கருவளையம் நீங்கும். உருளைக்கிழங்கின் சாறும் நல்ல பலன் தரும். உருளைக்கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி சருமம் வெளுப்பாகும். பன்னீரை பஞ்சில் தோய்த்து இரவு படுக்கும் முன் கண்ணில் வைத்துக் கொண்டால், நாளடைவில் கருமை நீங்கி கண்கள் பளிச்சென்று இருக்கும். அதே போல் தரமான Under Eye க்ரீம்களும் நல்ல பலனை தரும். வயதானால் வரக்கூடிய கருவளையத்திற்கும் இப்போது தரமான க்ரீம்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன. பிரபலமான பிராண்டுகளில் இருக்கும் க்ரீம்களாக வாங்குவது நல்லது. தரக்கட்டுப்பாடு, பரிசோதனை என்று எல்லா கட்டங்களையும் தாண்டி வருவதால் கெடுதல் விளைவிக்க வாய்ப்பில்லை.
பேஷியல் செய்யும்போது கண்களை சுற்றி உள்ள தசைகளை மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிப்பதற்கு முன்பு, சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால் கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி செய்வதால் கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும். கண்களின் சோர்வு நீங்க மற்றுமொரு அருமையான இயற்கை மருந்து வெள்ளரிக்காய். இதன் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். அலோவேரா ஜெல்லும் கண்ணின் கருவளையத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாகும். அலோவேரா சூரியனால் ஏற்பட்ட கருமைக்கும் தீப்புண்ணிற்கும் கூட சிக்கிச்சையளிக்க பயன்படுகிறது. கண்ணாடி தொடர்ந்து அணிவதால் கருப்பான சருமத்திற்கும் அலோவேரா மற்றும் உருளைக்கிழங்கு நல்ல பலனை அளிக்கும்.
கண் புருவம், இமை இவைகள் அழகாக இருந்தால்தான் கண்களும் எடுப்பாக அழகாக இருக்கும். கண் புருவத்தை த்ரெட்டிங் அல்லது வாக்சிங் மூலம் ஷேப் செய்து கொள்வது நமது கண்ணை கவர்ச்சியாக தெரிய வைக்கும். புருவத்தில் குறைந்த முடியே இருந்தாலும் லேசாக த்ரெட்டிங் செய்யும்போது நல்ல எடுப்பாக இருக்கும். கூடிய மட்டும் புருவத்திற்கு பென்சில் உபயோகிப்பதை தவிருங்கள். அது சாயங்கால பார்ட்டி மேக்கப் மற்றும் விசேஷங்களுக்கு மட்டுமே நன்றாக இருக்கும். போட்டோக்களிலும் அழகாக தெரியும். ஆனால் மற்ற நேரங்களில் அது முகத்திற்கு ஒரு செயற்கையான தோற்றத்தை உருவாக்கும்.
கண் இமைகளை பொறுத்த வரை அதிக முடி மற்றும் மேல் நோக்கிய இமை முடிகள் அழகான தோற்றத்தை அளிக்கும். கண் இமைகள் குறைவாக இருப்பின் அதன் அடர்த்தியை அதிகப்படுத்திக் காட்டும் மஸ்காராக்களை உபயோகிக்கலாம். செயற்கை கண் இமைகளை ஒட்டும்போது அது தரமானதா, அதற்கு உபயோகப்படும் க்ளூ தரமானதா என்று பார்த்து வாங்குங்கள். இப்போதைய பேஷன் கண் இமைகளின் மேல் கறுப்பு ஐலைனர் கொண்டு வரைந்து முனைகளை பழங்கால ஸ்டைலில் சிறிது மேல் நோக்கி வளைத்து விடுவதுதான். ஐலைனர் போட்டு கீழேயும் மை போடுவது எல்லோருக்கும் எடுப்பாக இருக்காது. கண்ணின் கீழே அதிக சுருக்கம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாது. ஐஷேடோ முக நிறத்திலேயோ, பிரவுன் நிறத்திலேயோ போடுவது இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஐ ஷேடோவில் மூஸ், க்ரீம், ஜெல், பவுடர் என்று பல ரேஞ்சுகளில் உள்ளது. மஸ்காராவிலும் பல நிறங்கள் கிடைக்கின்றன. அவரவர் சருமத்திற்கு தகுந்த நிறத்தை காஸ்மெட்டிக் கடை கன்சல்டண்டின் உதவியுடன் தேர்ந்தெடுங்கள். சிறிதாக இருக்கும் கண்களையும் மஸ்காரா, ஐலைனர் மூலம் கவர்ச்சியாக எடுப்பாக காட்ட முடியும்.
கண்களுக்கு உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் உதாரணமாக மஸ்காரா, காஜல் பென்சில், ஐ லைனர் போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வாங்குவது அவசியம். பழைய காஸ்மெட்டிக்ஸ் கண்களை பாதிக்கும். இரவு உறங்கும் முன் கண் மேக்கப்பை முழுதுமாக நீக்க வேண்டும். கண் மேக்கப்பை நீக்கவென்றே Eye Make up Remover என்று கடைகளில் கிடைக்கின்றது. பேபி ஆயில் கொண்டும் கண் மேக்கப்பை நீக்கலாம். தினமும் உறங்க செல்லும் முன் முகத்தை கழுவி விட்டு செல்வது கண்களுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது. அவ்வாறு இரவில் முகம் கழுவிவிட்டு படுப்பதால் கண்ணில் வரும் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் அறவே அண்டாது. கண்களை அழுத்தித் தேய்ப்பது, தூசு விழுந்தால் கசக்குவது போன்றவற்றை தவிர்த்து கண்களை தண்ணீர் கொண்டு கழுவுவது நல்லது. இப்படி சில அடிப்படை விஷயங்களை ஒழுங்காக கடைபிடித்தோமென்றால் நமது கண்கள் அழகாக, பளிச்சென்று இருக்கும்.



டிப்ஸ்

1. பபிள்கம் ஒட்டிக் கொண்ட ஆடைகளை ஒரு மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து எடுத்தால் எளிதில் பபிள்கம் கறையை நீக்கலாம்.

2. ஒரு கையளவு வெந்தயத்தை இரவு நீரில் ஊற வைத்து காலையில் வெந்தயத்தையும், ஊற வைத்த நீரையும் குடிக்க, அல்சர் சரியாகும்.

3. எறும்புத் தொல்லையிலிருந்து விடுபட, வெள்ளரித் தோலை எறும்புக் குழிக்கு அருகில் வைக்கவும்.

4. சுத்தமான ஜஸ் கட்டிகளைப் பெற, ஃபிரீஸரில் காயச்சி ஆறிய நீரையே ஜஸ் ஆக்க வைக்கலாம்.

5. வெள்ளை நிறத் துணிகளை துவைக்கும் முன் எலுமிச்சைச் சாறு கலந்த வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து துவைக்க, துணிகளின் நிறம் பளிச்சிடும்.

6. எலுமிச்சையில் அதிக சாறு எடுக்க, பழத்தை சற்று நேரம் வெந்நீரில் ஊற வைத்து பிழியவும்.

7. புரை ஊற்றிய பால் சீக்கிரம் தயிராக, காய்ந்த மிளகாய் ஒன்றை பாலில் போட்டு மூடி வைக்கவும்.

8. மீன் வாசம் உங்கள் கைகளிலிருந்து போக, ஆப்பிள் வினிகரை கைகளில் தேய்த்துக் கொள்ளவும்.

9. முட்டைக்கோஸ் சமைக்கும் போது வரும் வாசனை பிடிக்கவில்லையென்றால் அதனுள் ஒரு சிறிய பிரட் துண்டைச் சேர்த்து சமைக்கவும்.

10. முட்டைகளை சீக்கிரம் வேக வைக்க, தண்ணீருடன் சிறிது உப்பு சேர்க்கவும்.

11. குறும்பு சுட்டிகளின் கையெழுத்து வீட்டுச் சுவரெங்கும் இருக்கிறதா? டூத் பேஸ்ட் போட்டு தேய்க்க, சுவர் பளிச்சோ பளிச்!

12. எலிகளை விரட்ட, அவை வரும் பாதையில் மிளகுப் பொடியை தூவி வைக்கலாம்.

13.வெங்காயம் உரிக்கும் போது, பபிள்கம் மென்றால் கண்ணீர் வராது.

14. ஊற வைத்த கறுப்பு சுண்டலுடன் ஒரு பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட, கொலஸ்ட்ரால் கட்டுப்படும்.

15.வேக வைத்த உருளைக் சில நொடிகள் குளிர்ந்த நீரில் போட்டு பின் தோலுரிக்க, எளிதில் வரும்.

சிக்கன் ட்ரை கறி

சிக்கன் (1/2 கிலோ)., நன்கு சுத்தம் செய்து துண்டுகள் செய்து கொள்ளவும். சின்ன
வெங்காயம் (50 கிராம்), தக்காளி (1) நறுக்கிக்
கொள்ளவும், இஞ்சி (1″), பூண்டு (4 பல்) தட்டிக்
கொள்ளவும்.
வெங்காயத்தை சிறிது எண்ணையில் நன்கு
வதக்கி.,அரைத்து கொள்ளவும்.
வாணலியில் 50 கிராம் எண்ணை ஊற்றி.,
பட்டை(1), கிராம்பு(2), கறிவேப்பிலை சிறிது
போட்டுத் தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது
போடவும். பின்பு அரைத்த வெங்காயம் சேர்த்து
வதக்கி, தக்காளி சேர்த்து எண்ணை பிரியும்
வரை நன்கு வதக்கி, சிக்கனைச் சேருங்கள்.
பின்பு மஞ்சள் தூள் (1/4 தேக்கரண்டி), மிளகாய்
தூள் (1 தேக்கரண்டி), தேங்காய் பால் (1 மேசைக்
கரண்டி), தேவையான உப்பு சேர்த்து, 1/2 கப் நீர்
ஊற்றி சிக்கன் நன்கு வெந்து, நீர் வற்றி கெட்டியான
உடன் இறக்கவும்.

பேரீட்சை முந்திரி லட்டு

முந்திரி பருப்பு  - 200 கிராம்
பாதாம் பருப்பு  - 100 கிராம்
பிஸ்தா பருப்பு  - 50 கிராம்
பேரீட்சை       - 250 கிராம் (கொட்டை நீக்கியது)
உலர் திராட்சை - 100 கிராம்
ஏலம் தூள்      - சிறிய அளவு
கொட்டை இல்லாத பேரீட்சை மற்றும் உலர் திராட்சையை நல்லா தண்ணியில போட்டு கழுவிக்கணும்.

முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, எல்லாத்தையும் மிக்ஸியில போட்டு அரைச்சி அத்தோட இந்த பேரீச்சை, உலர் திராட்சையை போட்டு அரைச்சி எடுக்கணும்.

கடைசியில ஏலம் தூளையும் கலந்து லேசா அரைக்கணும். இந்த கலவை சூடா இருக்கும் போதே சின்ன சின்ன உருண்டையா பிடிக்கணும்.

முடிகளை நீக்க

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை,
சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும்.
காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில்
வரும்.

தோல் சொர சொரப்பு நீங்க

சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் தேன் கலந்து வாரம் ஒரு முறை உடல்
முழுவதும் பூசினால் தோல் சொர சொரப்பு தானாகப் போகும்.

கண்கள் பிரகாசமாக இருக்க

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்

தலைக்கு ஹென்னா

நெல்லிக்காய் பொடி, மருதாணி, டீ டிக்காஷன் அனைத்தையும் தண்ணீர்
சேர்த்து கலந்து இரும்பு கடாயில் முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் இந்த கலவையோடு முட்டையின் வெள்ளைக்கரு, தயிர் சேர்த்து கலந்து
தலையில் தேய்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க வேண்டும். தயிர்
கலப்பதினால் பொடுகு தொல்லை இல்லாமல் இருக்கும். ஹென்னா போடும் நாள்
மட்டும் முடிக்கு ஷாம்பு போடாமல் வெறும் தண்ணீரில் அலசினால் தான் அதன்
சாரம் தலையில் தங்கும்.

எடை குறைய

பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர்
வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து
அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

இயற்கை பழச்சாறுகளின் மகத்துவம்...

Fresh Fruit Juices - Food Habits and Nutrition Guide in Tamil

தர்பூசணிப்பழச் சாறு:
கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும்.
நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.
அத்திப்பழச்சாறு:
அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம்.
இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும்.
அத்திப்பழமும் தேனும் கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..
ஆப்பிள் பழச்சாறு:
ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும்.
மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.
திராட்சைச் சாறு:
திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும்.
திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.

ஆரஞ்சுச் சாறு:
தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம்.
இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.
சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.
எலுமிச்சைச் சாறு:
பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.
தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.
இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.
உடல் களைப்புகள், கை, கால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.
பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.
தக்காளிச் சாறு:
தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.
மேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...