என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

தேங்காய் பர்பி

தேங்காய் துருவல் - 1 கப் (நன்கு அழுத்தியது
சர்க்கரை - 1 கப் (200 கிராம்)
ஏலக்காய் - 4 (பொடி செய்தது)
முந்திரி, பாதாம் - தலா 1 தேக்கரண்டி (பொடியாக சீவியது)
நெய் - 1 தேக்கரண்டி (வறுக்க)

செய்முறை
1. முதலில் தேங்காய்த் துருவலை லேசாக வெறும் வாணலியில்
வறுத்துக் கொள்ளவும்.
2. அரை கப் தண்ணீரில் சர்க்கரையைக் கொட்டி அடுப்பில் வைத்து
கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.
3.பதம் வந்ததும் தேங்காய்த் துருவலைக் கொட்டி கிளறவும்.
4.நன்றாக கிளறி கெட்டி பதம் வந்ததும், வாணலியில் ஒட்டாமல்
வரும் போது, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து
இறக்கி விடவும்
5.ஒரு தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் 
கொட்டி பரப்பி ஆற வைக்கவும்.
6.ஒரு தேக்கரண்டி நெய்யில் சீவிய முந்திரி, பாதாமை 
போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் கொட்டிய தேங்காய்
கலவையில் கொட்டி லேசாக அழுத்தி விடவும்.
7.லேசாக சூடு ஆறியதும் கத்தியால் விருப்பமான வடிவில் 
வில்லைகளாக போட்டு நன்கு ஆற விடவும்.
குறிப்பு
1.அடுப்பில் தொடர்ச்சியாக விடாமல் கிளற வேண்டும் 
இல்லையெனில் அடிபிடித்துவிடும்
2.கம்பி பாகு என்பது சர்க்கரைப் பாகை ஆள்காட்டி விரல் 
மற்றும் பெருவிரலினால் எடுத்து விரலைப் பிரித்தால், இரு 
விரல்களுக்கிடையே ஒரு கம்பி போல் வரும்.
3பாகு பதம் தாண்டி விட்டால் பர்பி மிகவும் கெட்டியாகி விடும்.
4.தேங்காய்த் துருவலை வறுத்துப் போடுவதால் பர்பி சீக்கிரம் 
கெட்டுப் போகாது

அழகு குறிப்புகள்

எலுமிச்சம் பழத்தில் ஒரு பாதியை முகம் முழுவதும் தேய்த்துவிட்டு, சற்று நேரம் கழித்து முகத்தை கழுவினால் எண்ணெய்ப் பசையுள்ள முகம் உலர்ந்து பளீரென இருக்கும்.
வீட்டிலேயே பின் வருமாறு ‘பிளீச்சிங்’ செய்து கொள்ளலாம். பாலேட்டையும், எலுமிச்சம் பழ ஜூஸையும் கலந்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும். இம்மாதிரி தினமும் செய்தால் முகம் பளிச்சென இருக்கும்.

வெயிலில் அலைந்ததால் ஏற்படும் கருமையைப் போக்க எலுமிச்சம் பழ ஜூஸில் ரோஸ் வாட்டர் கலந்து கை, கழுத்து ஆகிய பகுதிகளில் தடவலாம்.

குளிர்காலத்தில் சருமம் உலர்ந்து காணப்படும். இதைப் போக்கச் சோப்புக்குப் பதிலாகக் கடலை மாவைக் குழைத்து உபயோகிக்கலாம்.

முகத்திலுள்ள சுருக்கங்களைப் போக்க, ஒரு ஸ்பூன் தேனில், காரட் ஜூஸை கலந்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும்.
முகத்திலுள்ள தழும்புகளை மறைக்க, சருமத்திற்கேற்றவாறு ஃபவுண்டேஷனை உபயோகிக்கலாம்.

களைப்பாயிருக்கும் போதும், வெயிலில் அலைந்து வந்தவுடனும் உணவு உட்கொள்ள வேண்டாம்.

உதடுகள் வெடித்திருந்தால், ‘பெட்ரோலியம் ஜெல்லி’யை உதடுகளில் இலேசாக மசாஜ் செய்யவும்.

பாலீஷ் போட்டதும், விரைவில் காய்வதற்கு, ஐஸ் வாட்டரில் நகங்களை வைத்தால் உங்கள் நெயில் பாலீஷ் சீக்கிரம் உலரும்.

அடிக்கடி டென்ஷன் ஆகாமல், எதையும் ‘ஈஸி’யாக எடுத்துக் கொள்வது நல்லது. டென்ஷன் அதிகமானால், உடல் அசதி, மனச்சோர்வு படப்படப்பு, பசியின்மை, கண்ணுக்குக் கீழே கருவளையங்கள், குடற்புண்கள் ஆகியன ஏற்பட வாய்ப்பு உண்டு.

பனானா கேக்

செய்முறை: தேங்காய்ப்பாலில் உப்பு, சர்க்கரை, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து கொதிக்க விடவும். இட்லி மாவு பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். வாழைப்பழத்தை, 2 இஞ்ச் நீளத்துக்கு துண்டுகளாக நறுக்கவும். அவற்றை, ஒவ்வொன்றாக மாவு கலவையில் நனைக்கவும். அந்தத் துண்டுகளை வாழை இலையில் வைத்து மெதுவாக மடித்து, இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும். செர்ரிப் பழம் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்

கோக்கோ ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்

  • பால் -- 1 லிட்டர்
  • கோக்கோ -- 4 டீஸ்பூன்
  • சாக்லேட் எசன்ஸ் -- 4 துளி
  • சர்க்கரை -- 1/2 கிலோ

செய்முறை

  1. பாலை நன்றாக சுண்ட காய்ச்சி குளிரவைக்கவும்.
  2. அதிலிருந்து பாதி பாலை எடுத்து கோக்கோபவுடர், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
  3. மீதமுள்ள பாலை மீண்டும் சூடாக்கி மேலே உள்ள கரைசலை அதில் ஊற்றி கலக்கவும்.
  4. 10 நிமிடம் அடுப்பில் வைத்து கிளற வேண்டும்.
  5. பிறகு ஆறவைத்து எசன்ஸ் சேர்த்து ஃப்ரீசரில் வைத்து கெட்டியானதும் பறிமாறலாம்.

பால்கோவா

தேவையான பொருட்கள்

பால் - 1 லிட்டர்
தயிர் - சிறிதளவு
சக்கரை - 100 கிராம்
நெய் - 5 தேக்கரண்டி
முந்திரி - 5 கிராம்

செய்யும் முறை



வாய் அகண்ட இரும்பு வாணலியில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். ஒரு கொதி வந்ததும் சிறிது தயிரை பாலில் விடவும்.

பால் பொங்கி வரும்போது ஒரு கரண்டி வைத்து பாலை நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். அடியிலும், ஓரத்திலும் பால் கட்டிவிடக் கூடாது. கிளறிக் கொண்டே இருக்கவும்.

பால் சிறிது சுண்டி மஞ்சள் நிறத்திற்கு வரும்போது சர்க்கரையைத் தூவி கிளறி விடவும்.

முந்திரியை நெய்விட்டு பொறித்து அதனை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து, அந்த பொடியையும் பாலில் போட்டு கிளறி விடவும்.

சர்க்கரை பாலுடன் நன்கு சேர்ந்ததும் பால் சிறிது கெட்டியாகத் துவங்கும். அப்போது 3 தேக்கரண்டி நெய்யை பாலில் விடவும்.

10 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருக்கவும். பால்கோவா சிறிது தளதளவென்று இருக்கும்போதே இறக்கிவிடவும். நெய் சேர்த்துள்ளதால் பின்பு இது இறுகும். எனவே தளதளவென்று இறக்கினால் பின்பு இறுகி கோவா பதமாக இருக்கும்.

தற்போது ஒரு கிண்ணத்தில் நெய்யை ஊற்றி அதில் சுடான பால்கோவாவை எடுத்து வைத்துக் கொள்ளவும். வேண்டுமென்றால் வறுத்த முந்திரியை அதன் மீது பரப்பி அழகுபடுத்தலாம்.

சிக்கன் மஞ்சூரியன்(டிரை)

தேவையான பொருட்கள்:
  • எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
  • ரெட் கலர் - 1 சிட்டிகை
  • மைதாமாவு - 2 டீஸ்பூன்
  • முட்டை - 1
  • சோளமாவு - 4 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது - 3/4 டேபிள்ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • வெங்காயம் - 1 சிறியது
  • குடமிளகாய் - 1 சிறியது
  • வெங்காயத்தாள் -4
  • சோயாசாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
  • உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :

  1. சிக்கனை சுத்தம் செய்து அதில் உப்பு+மைதாமாவு+சோளமாவு+இஞ்சி பூண்டுவிழுது+ரெட் கலர்+மிளகாய்த்தூள் கலந்து 1/2 மணிநேரம் ஊறவைத்து அவனில்க்ரில் செய்யவும் அல்லது எண்ணெயில் பொரிக்கவும்.
  2. வெங்காயம்+பச்சை மிளகாய்+குடமிளகாய்+வெங்காயத்தாள் அனைத்தையும் பொடியாக அரியவும்.

  3. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

  4. பின் குடமிளகாய் போட்டு லேசாக வதங்கியதும் சோயா சாஸ் ஊற்றவும்.உப்பு சேர்க்கவும்.சாஸில் உப்பு இருக்கும், கவனமாக போடவும்.பின் க்ரில் செய்த சிக்கனை போட்டு கிளறவும்.

  5. பின் வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

குறிப்பு:

1.
விரும்பினால் இதனுடன் தக்காளி கெட்சப்பை சோயாசாஸ் சேர்க்கும் போது சேர்க்கலாம்

கச்சான் அல்வா


தேவையான பொருட்கள்:
கச்சான் முத்து 1/4 கிலோகிராம்
சீனி 1/4 கிலோகிராம்
மாஜரின் 2 தே.க
அப்ப சோடா 2 சிட்டிகை
கோதுமை மா 2 தே.க

செய்முறை:

1. கச்சான் முத்தை பொன்னிறமாக வறுத்து, ஆறிய பின்னர் கசக்கி புடைத்து பாதி முத்துக்களாக்கி கொள்க.
2. தட்டிற்கு மாஜரின் பூசி வைத்து கொள்க.
3. ஒரு சட்டியில் சீனியை போட்டு இடைவிடாது வறுத்துகொள்ளுங்கள்.
4. சீனி முழுவதும் இளகி பாகாக வரும் போது , அதனுள் 1 தே.க மாஜரீன், அப்பச்சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்க.
5. பின்பு சீனி பாகில் கச்சான் முத்தை சிறிது சிறிதாக தூவி நன்றாக கிளறியெடுக்கவும்.
6. உடனடியாக அடுப்பில் இருந்து இறக்கி, மாஜரின் பூசிய தட்டில் கொட்டி துண்டுகளாக வெட்டியெடுக்கவும்.

ஜிலேபி

தேவையான பொருட்கள்:
  • மைதா - கால் லிட்டர்
  • சீனி - முக்கால் லிட்டர்
  • மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
  • நெய் - அரை லிட்டர்
  • தயிர் - 2 தேக்கரண்டி

செய்முறை:
  1. முதல் நாள் இரவே மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. காலையில் சீனியை கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்னர் வாணலியில் நெய்யைக் காய வைத்து பிசைந்து வைத்திருக்கும் மாவில் ஒரு கரண்டி எடுத்து ஜாங்கிரி பிழிவது போல பிழிந்து எடுத்து சீனிப் பாகில் போட்டு எடுக்க வேண்டும்.

சாக்கலேட் பர்பி

தேவையானப்பொருட்கள்:

  • மைதா - 1 கப்
  • சர்க்கரை - 2 கப்
  • கோக்கோ பவுடர் அல்லது சாக்கலேட் பவுடர்- 1 டேபிள்ஸ்பூன்
  • பால் பவுடர் - 1/2 கப்
  • நெய் - 4 அல்லது 5 டேபிள்ஸ்பூன்
  • பால் - 1/2 கப்

செய்முறை:
  1. நெய்யைவாணலியில் போட்டு, உருகியதும் அதில் மைதாவை வாசனை வரும் வரை (2 அல்லது 3 நிமிடங்கள்) வறுத்து எடுத்து, அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, அதில் பால்பவுடரைச் சேர்த்துக் கிளறி வைத்துக் கொள்ளவும்.
  2. சர்க்கரையுடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு நல்ல பதம் வந்ததும் தண்ணீரில்சிறிது பாகை விட்டால், அது கரையாமல் அப்படியே இருக்க வேண்டும். விரல்களால்எடுத்தால் மிருதுவாக முத்து போல் வர வேண்டும்.
  3. அத்துடன் வறுத்து வைத்துள்ள மைதாவைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் அதில், வெதுவெதுப்பான பாலில் கோகோவைக் கலந்து ஊற்றி, மீண்டும் நன்றாகக் கிளறவும்.
  4. வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது, இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும். சற்று ஆறிய பின் துண்டுகள் போடவும்.

கிறிஸ்துமஸ் கேக்

தேவையானப் பொருட்கள்:
  • மைதா - ஒன்றரை கப்
  • சீனி - ஒரு கப்
  • முட்டை - 3
  • முந்திரி - 10
  • திராட்சை - 15
  • வெண்ணெய் - 75 கிராம்
  • டூட்டி ப்ரூட்டி - 2 மேசைக்கரண்டி
  • ஆரஞ்சு தோல் - 2 மேசைக்கரண்டி
  • கேக் விதை - அரை மேசைக்கரண்டி
  • ஜாதிக்காய் தூள் - அரை தேக்கரண்டி
  • வெனிலா எசன்ஸ் - அரை மேசைக்கரண்டி
  • பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
  1. தேவையானப் பொருட்களை தயாராய் வைத்துக் கொள்ளவும். நல்ல தரமான மைதாவை உபயோகிக்கவும்.
  2. கேக் விதை (cake seed) என்பது சீரகம் போன்று மிகவும் சிறியதாக இருக்கும்.தமிழில் கருஞ்சீரகம் என்று அழைக்கப்படுகின்றது. ஆரஞ்சுத் தோல் என்று இங்கேகுறிப்பிட்டுள்ளது, தோலைத் துண்டுகளாக நறுக்கி பதப்படுத்தப்பட்டது.கடைகளில் ரெடிமேடாக பாக்கெட்டுகளில் கிடைக்கும்.
  3. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும். அதில் 2 மேசைக்கரண்டி சீனியை போட்டு ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி ப்ரெளன் கலர்வரும் வரை கலக்கவும். சற்று புகை வரும். கவலை வேண்டாம்.
  4. சீனி கரைந்து ப்ரெளன் கலர் ஆனதும் மேலும் அதில் 2 மேசைக்கரண்டிதண்ணீர் ஊற்றவும். ஊற்றியதும் ப்ரெளன் கலர் மாறி டார்க் ப்ரெளன் கலராகமாறியதும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
  5. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி முட்டை அடிக்கும் கருவியால் சுமார் 5 நிமிடங்கள், நன்கு நுரைத்து வரும் வரை அடிக்கவும்.
  6. அதனுடன் சீனியை போட்டு சீனி கரையும் வரை மேலும் 5 நிமிடம் அடிக்கவும்.மின்சாரத்தில் இயங்கும் கலக்கியைப் பயன்படுத்தினால் மிதமான வேகத்தில் ஒரேசீராக கலக்கவும்.
  7. சீனி கரைந்ததும் அதனுடன் வெண்ணெய் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் நன்கு அடிக்கவும்.
  8. பிறகு அதில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியை வைத்து வட்டமாக கலக்கவும்.
  9. மாவினை கலக்கும்போது இடமிருந்து வலமோ அல்லது வலமிருந்து இடமோஉங்களின் வசதிக்கு ஏற்றார்போல் ஒரே பக்கமாககலக்கவும். மைதா கட்டியில்லாமல் கரையும் வரை கலக்கவும். மிகுந்த வேகம்கூடாது.
  10. பின்னர் ஒரு டம்ளரில் பேக்கிங் பவுடரை போட்டு அதில் ஒரு மேசைக்கரண்டிசூடான பால் ஊற்றி கலக்கவும். கலக்கும் போது நுரைத்து வரும். அதையும்மாவுடன் சேர்த்து வட்டமாக கலக்கவும்.
  11. மாவின் பதம் ஒரு கரண்டியால் மாவை எடுத்து பார்க்கும் போது கீழே விழவேண்டும். பிறகு அதில் கரைத்து வைத்துள்ள ப்ரெளன் கலர் சீனி தண்ணீரைஊற்றி வட்டமாக கலக்கவும்.
  12. கேக் விதையை அம்மியில் வைத்து நுணுக்கிக் கொள்ளவும். அதன் பின் கலக்கியமாவில் எசன்ஸ், நுணுக்கிய கேக் விதை, ஜாதிக்காய் தூள், டூட்டி ப்ரூட்டிமற்றும் ஆரஞ்சு தோல் ஆகியவற்றை போட்டு மீண்டும் வட்டமாக கலக்கவும்.
  13. கேக் விதையின் சுவை பிடிக்காதவர்கள் குறைவாக சேர்த்துக் கொள்ளலாம். அல்லதுதவிர்த்துவிடலாம். மாவைக் கலக்கும் போது ஒரே மாதிரி சுற்றிக் கலக்கவும்.அப்போதுதான் மாவு பதமாக கிடைக்கும். இயந்திரங்கள் மூலம் வேகமாக சுற்றிக்கலக்கினால், அதனால் உண்டாகும் சூட்டில் மாவின் தன்மை மாறுபட்டுவிடும்.கேக் நன்றாக வராது.
  14. வீடுகளில் கேக் செய்வதற்கென்று சிறிய அளவிலான ஓவன்கள் கிடைக்கின்றது.அதில் மாவு வைப்பதற்கான பாத்திரத்தில், கலக்கிய மாவை ஊற்றவும்.பாத்திரத்தின் மத்தியில் வைப்பதெற்கென ஒரு டம்ளர் (அல்லது குழல்) போன்றபாத்திரம் ஓவனுடன் வரும்.
  15. குழல் போன்ற அந்த சிறிய பாத்திரத்தை மையத்தில் வைத்து அதனை சுற்றி மாவைஊற்றவும். அப்போதுதான் வெப்பம் கேக்கின் அனைத்து பாகத்திற்கும் சென்று, முழுமையாக வேக வைக்கும். மாவின் மேல் முந்திரி மற்றும் திராட்சையை தூவிஅலங்கரிக்கவும்.
  16. அலங்கரித்ததும் பாத்திரத்தை ஓவனில் வைத்து மூடி விடவும். சுமார் 45 நிமிடங்கள் வேகவிடவும். ஓவனின் மேல்புறம் உள்ள கண்ணாடியின் வழியாகப்பார்த்தால் கேக்கின் நிறம் தெரியும்.
  17. அனைத்து பாகமும் சீராக வெந்திருந்தால் கேக் முழுமையும் ஒரே வண்ணத்தில்இருக்கும். ஓரங்கள் சற்று அதிகமாக சிவந்து இருக்கும். பொன்னிறமாகவெந்தவுடன் ஓவனில் இருந்து கேக்கை எடுத்து, சிறிது நேரம் ஆறவிடவும்.

லட்டு

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு - 2 கப்
  • தண்ணீர்-3/4கப்
  • சீனி - 11/2 கப்
  • தண்ணீர்-3 கப்
  • முந்திரி பருப்பு 8
  • கிஸ்மிஸ் -8
  • ஏலக்காய்பொடி- 1/4தேக்கரண்டி
  • சோடா உப்பு-ஒரு சிட்டிகை
  • நெய் - 2தேக்கரண்டி
  • உப்பு- சிட்டிகை
  • மஞ்சள் வண்ணப் பொடி - ஒரு சிட்டிகை
  • எண்னைய் - அரை லிட்டர்

செய்முறை:

  1. கடலை மாவில் உப்பு. சோடா உப்பு சேர்த்து தண்ணீர்-3/4கப் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சாதாரண கண் கரண்டியை வாணலியில் நேரடியாக, பிடித்து பரவலாக கரைத்த மாவை ஊற்றவும்.பூந்தி ரெடி.
  3. இன்னொரு சட்டியை அடுப்பில் வைத்து 3 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சீனி,ஏலக்காய்பொடி,மஞ்சள் கலர் பொடிபோட்டு சீனிநன்கு கரையும் வரை கிண்டவும் அதில் செய்து வைத்த பூந்தியை போட்டுகிளரவும்
  4. பின்னர் ஒரு சிறிய சட்டியில் நெய் ஊற்றி அதில் கிஸ்மிஸ்,முந்திரி வறுத்து பூந்தியில் போட வேண்டும்
  5. சூடு ஆறியது மிக்சியில் ஒரு சுத்து விட்டு அரைத்து கையில் நெய் தடவி உருண்டை பிடிக்கவும்.

 

ரவை‌யி‌ல் மைசூ‌ர்பாகு

தேவையானவை
வறுத்து பொடி‌த்த ரவை - 100 கிராம்
நெய் - 100 கிராம்
ஏலக்காய் - சிறிதளவு
சர்க்கரை - 400 கிராம்
பால் - 800 மி.லி.
செ‌ய்யு‌ம் முறை
வாண‌லி‌யி‌ல் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌த்தது‌ம் பா‌ல் ம‌ற்று‌ம் ச‌ர்‌க்கரையை‌ப் போ‌ட்டு ‌கிளறவு‌ம். ச‌ர்‌க்கரை கரை‌ந்தது‌ம் ரவை மாவை‌க் கொ‌ட்டி ‌கிளறவு‌ம். ரவை ந‌ன்கு வெ‌ந்து வரு‌ம் போது நெய், ஏலக்காய் சேர்த்து மைசூர்பாகு பதத்தில் கிளறி இறக்கவும். நெய் தடவிய தட்டில் ஊற்றி ஒன்று போல் பரப்பி வில்லைகளாக போடவும். சுவையான ரவை மைசூ‌ர் பாகு தயா‌ர்.

மைசூ‌ர்பாகு

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு - 1 கப்
  • சர்க்கரை - 2 கப்
  • நெய் - 1 கப்
  • பால் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

  1. கடலை மாவுடன் பொடித்த சர்க்கரை, நெய் கலந்து கட்டிகளின்றி நன்றாகப்பிசைந்து, மைக்ரோவேவ் பாத்திரத்தில் கலவையை எடுத்துக் கொள்ளவும்.
  2. மைக்ரோவேவில் இரண்டரை நிமிடம் அதிக வெப்பநிலையில் வைக்கவும்.
  3. பின் பாத்திரத்தை வெளியில் எடுத்து பாலை ஊற்றி நன்றாக கிளறிக் கொள்ளவும்.
  4. மீண்டும் இரு நிமிடங்கள் மைக்ரோவேவில் வைத்து, பின் ஒரு தட்டில் கலவையை ஊற்றவும்.
  5. கலவை மீது சில தேக்கரண்டி நெய் விட்டு, சற்று ஆறியபின் துண்டுகளாக்கவும்.
நொடியில் ரெடியாகும்

 

மருத்துவ குறிப்புகள்

இரத்த சோகையை போக்க: பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.
வெட்டுக்காயம் குணமாக: நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.
வயிற்று நோய் குணமாக: சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும்.
மலச்சிக்கல் சரியாக: அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
இரத்த பேதியை குணப்படுத்த: அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை ஆகியவற்றை சமஅளவு பொடிசெய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீத பேதி குணமாகும்.
மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த: வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400 மில்லி, அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி வீதம் ஆறு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
வயிற்றுவலி குணமாக: குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.



இனிப்புச் சீடை

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 ஆழாக்கு.
வெல்லம் - 2 ஆழாக்கு (பொடித்தது)
பொட்டுக் கடலை - கால் ஆழாக்கு.
ஏலக்காய்த் தூள் - 6 (பொடித்தது)
தேங்காய் - 1 மூடி.
எண்ணை - தேவையான அளவு.

செய்முறை:


பச்சரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியை நீரை வடித்து விட்டு ஈர அரிசியை மெஷினில் கொடுத்து மாவாக அரைக்கவும்.

பொட்டுக் கடலையை மிக்சியில் மாவாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு தண்ணீர் ஊற்றி பாகு வைக்கவும்.

பாகில் ஈர அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டுக் கிளறவும். அதனுடன் பொட்டுக் கடலை மாவு, துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணை ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளைப் போட்டு பொன்னிறம் வருமாறு பொரித்து எடுக்கவும்.

'கரக் மொறுக்' ஸ்வீட் சீடை ரெடி!

நக பராமரிப்பு


  தரமான
நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அப்போது தான் நகத்திற்கு
எவ்விதபாதிப்பும் வராது. நெயில் பாலீஷ் வாங்கும் போது உங்கள் நிறத்திற்கு
ஏற்ற கலராக பார்த்து தேர்ந்தெடுங்கள்.

* சிலருக்கு நகம் கடினத்தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு
கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால்,
நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய்
எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.


* நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்
 

பெண்களின் முகம் மிருதுவாகவும் அழகாகவும் இருக்க…

ஆரஞ்சுப் பழச்சாற்றில் ஒரு சில துளிகளை ஈரமான பஞ்சின் மேல் பிழிந்து அந்தப் பஞ்சை முகத்தில் தடவிக் கொண்டால் பெண்களின் முகம் மிருதுவாகவும் அழகாகவும் இருக்கும். அடிக்கடி இப்படிச் செய்துவர வேண்டும்.

சிறிது கடலைமாவைப் பால் ஏட்டுடன் குழைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதைத் தினமும் இரவு படுக்கப் போகும் முன் முகத்தில் தடவித் தேய்த்து வாருங்கள். இப்படித் தினமும் செய்வதால் நாளடைவில் பருக்கள் மறைந்துவிடும். கறுப்புப் புள்ளிகள் மறைந்துவிடும்
.
பெண்கள் தங்கள் அழகை அதிகமாக்கிக் கொள்ள வெள்ளரிக்காயை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். வெள்ளரிக்காய்ச் சாறை உடம்பில் தேய்த்துக் கொண்டால் உடல் குளுமையாக இருக்கும். தோல் அழகாக இருக்கும்.

பெண்கள் தினமும் வெள்ளரிக்காய்ச் சாற்றை உடம்பில் தேய்த்துக் கொண்டு அது உலர்ந்ததும் குளித்தால் தோல் மிருதுவாகும். கொஞ்சம் சிவப்பாக மாறும்.
ஆப்பிளை நன்றாக மாவுபோல அரைத்து அதைப் பெண்கள் தங்கள் முகத்தில் லேசாகத் தடவி விட்டுக்கொண்டு கால் மணி நேரம் பொறுத்து முகத்தைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். இப்படிச் சில நாள்களுக்குச் செய்து வந்தால் போதும் முகம் பார்ப்பதற்குப் பளபளப்பாக இருக்கும். அழகாக இருக்கும்.

பேஷியல் டிப்ஸ்

பாதாம் எண்ணெய்

உலர்ந்த சருமத்திற்கு பாதாம் எண்ணெய் தேய்த்து வந்தால் நல்லது.பருக்கள் குழி அடையாளங்களையும் பாதாம் ஆயில் நாளடைவில் நீக்கிவிடும்.ஆயில் கிடைக்காவிடில் பாதாமின் தோல் 3 - 5 எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் தேய்க்கலாம்.


கடலை எண்ணெய்
1 தேக்கரண்டி கடலெண்ணெயில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வந்தால் பரு,கரும்புள்ளிகள் வரவே வராது.

பச்சை நிற ஆப்பிள்
பச்சை நிற ஆப்பிளின் சாறு தோல் சுருக்கம்,அரிப்பு,வெடிப்பு அனைத்திற்கும் மிக நல்லது.

 

பழங்கள்,கிழங்குகள் ,மற்றவை -பண்பு & குணங்கள்

வாழைப்பழம் :- இதனால் பாண்டு பித்தப்பிணிகள் முதலியன தீரும். அதிகமாக உண்ணில் மந்தத்
தை உண்டாக்கும். மலத்தைப்போக்கும்.

பலாப்பழம் :- இதனால் வாதபித்த கபப்பிணிகள் யாவும் உண்டாகும். மிக்க உஷ்ணத்தையும், கரப்
பானையும் உண்டாக்கும்.

மாம்பழம் :- இதனால் சொரி, சிரங்கு , கரப்பான், சீதபேதி, வயிற்றுவலி முதலியன உண்டாகும்.
பசிதீபனம் மட்டாகும்.

மாதுழம்பழம் :- இதனால், வாந்தி, கபம், விக்கல், தாகம், மாந்தம், சுரம், உஷ்ணாதிக்கம், பித்தாதிக்
கம்,இரத்தக்குறைவு, முதலியன நீங்கும். மலத்தைக்கட்டும்.

உலர்ந்ததிராட்சைப்பழம் :- இது மேக அழலையை தணிக்கும். மலத்தை இளக்கும், உதிரப்பெருக்
கையுண்டாக்கும்.

ஆழ்வள்ளிக்கிழங்கு :- இதனால் வாதாதிக்கம் ,திரிதோஷதொந்தம், குன்மம்,மந்தம், அக்கினி
முதலியனஉண்டாகும்.

உருளைக்கிழங்கு :- இது பலத்தை தரும். வாய்வைக்கண்டிக்கும், மந்தத்தையுண்டாக்கும்.

காராக்கருணைக்கிழங்கு :- இதனால் வாதநோய், இரத்தமூலம், அக்கினிமந்தம் முதலியன
குணமாகும். பத்திய உணவாம்.

சேப்பங்கிழங்கு :- இது கபத்தை விரித்திசெய்யும், மருந்தின் குணத்தை கெடுக்கும்.

இஞ்சி :- இதனால் சந்நிசுரம், வாந்தி, பேதி,சூலை, வாதாதிக்கம்,காசம்போம், பசிதீபனத்தையும்,
ஜீரணசக்தியையும், உண்டாக்கும்.

மஞ்சள் :- இதனால் தலைவலி, ஜலதோஷம், வலி, வீக்கம், வாந்தி,விரணம் முதலியன போம், பசி
தீபனமும், புருஷ வசியமும் உண்டாகும்.

முள்ளங்கி :- இதனால் குன்மம்,சூலை, குடல்வாதம், வாய்வு,கரப்பான், மூலகடுப்பு,கபம், முதலியன
குணமாகும். பசிதீபனமும், சிறுநீரையும் அதிகரிக்கும்.

வாழைக்கிழங்குஅல்லதுதண்டு :- இது சிறுநீரைப்பெருக்கும், கல்லடைப்பு, மகோதரம், மூத்திரக்
கிரிச்சரம், சோபை முதலிய நோய்கட்கு சிறந்தது.

வெங்காயம் :- இது தேக உஷ்ணம், மூலம், இரத்தபித்தநோய், சிரங்கு முதலியன குணமாகும்.

ஆல்பகோராப்பழம் :- இது உஷ்ணத்தையும், பித்தத்தையும், அரோசகத்தையும் நீக்கும். மலத்தை
இளக்கும்.

இளநீர் :- இது சூட்டைத்தணிக்கும்,சிறுநீரைப்பெருக்கும், பித்தகோபத்தையும்,கபாதிக்கத்தையும்
அடக்கும்.

எலுமிச்சம்பழம் :- இதனால் பித்தாதிக்கம், பைத்தியம்,கண்ணோய், வாந்தி, தாகம், பசியின்மை,
அஜீரணம், பேதி முதலியன குணமாகும்.

பழம்புளி :- பழைய புழியினால், திரிதோஷம்,வாதநோய், சூலை, வாந்தி, உஷ்ணாதிக்கம் முதலியன
குணமாகும்.

பிரண்டை :- பசிமந்தம், அஜீரணம் , சூன்மம், அதிசாரம், கபதோஷம், இரத்தமூலம், முதலியன
குணமாகும்.

பச்சைமிளைகாய் :- இதனால் வாதாதிக்கம், துத்திரோகம், இடுப்புவலி, சீதள சைத்தியம்,
முதலியன குணமாகும்.

விழாம்பழம் :- விழாம்பழத்தினால் சுவாசம்,காசம், பித்தாதிக்கம், பித்ததாகம், முதலியன குணமாகும்.
பசிதீபனமுண்டாகும்.

வெள்ளைப்பூண்டு :- இதனால் வாதம், சன்னிபாதம், கபாதிக்கம், சீதபேதி, நீரேற்றம், முதலியன
குணமாகும்.

கரும்பு :- கரும்பின் சாற்றால் வாய்க்குமட்டல், வாந்தி,விக்கல், பித்தநோய்கள்முதலியன குணமாகும்.

சர்க்கரை :- இதனால் பித்ததோஷம், வமனம், அரோசகம், குணமாகும். கபத்தை இளக்கும். மருந்து
களுக்கு சிறந்த அனுபானமாகும்.

கற்கண்டு : - இதனால் கபதோஷம், வாந்தி, காசம், வெப்பம் முதலியன குணமாகும்.

பனங்கற்கண்டு : - இதனால் வெப்பம், மூத்திரகிரிச்சரம்,உஷ்ணதாகம் முதலியன குணமாகும்.

பனைவெல்லம் :- இதனால் குன்மம், வாந்தி, அரோசகம், திரிதோஷதொந்தம். முதலியன குணமாகும்

இருமலுக்கு இயற்கை வைத்தியம்

குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கு வந்தாலும் பாடாய்ப்படுத்தும் இருமலால் அவதியுறும்பொழுது நீங்கள் இந்த இயற்க வைத்திய முறைகளை பயன்படுத்தி பயன் காணலாம்.


கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் ங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேநில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.

வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துஆயில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.
சூட்டினால் வரும் இருமலை வறட்டு இருமல் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட இருமலுக்குச் சீரகத்தை அரை தேக்கரண்டி கலந்து தூள் செய்து வந்ஃருடன் தேன் கலந்து பருகி வர விரைவில் வறட்டு இருமல் விலகிவிடும்.

தொடர்ச்சியான இருமல் - இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்ல அளிக்கும்போது, பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் ஃர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கிக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.

சிற்றிருமல்
ஃங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது ணிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் குணமாகும்

இரைப்பு இருமலுக்கு
இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுணிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.

கோழை இருமல்
நாய் துளசியைக் கொண்டு வந்து தினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் கோழை இருமல் போன்ற குறைகளை அகற்றும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல போஷாக்கு பெறும்.
 
வறட்டு இருமல்
வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு ணிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல் குணமாகும்.

உடல் சூட்டினால் இருமல்
உடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். ணிளகுத் தூளையும் பனை வல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.

எந்த வகையான இருமலுக்கும்
பொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்ணியில் வைத்துத் தூள் பண்ஆ அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்ஃர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.

கக்குவான் இருமலுக்கு
கக்குவான் இருமலின்போது வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை வீதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.

ஜலதோஷம் காரணமாக இருமல்
ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால் ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு ணிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். ணிளகு வறுபட்டு சிவந்து வருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும். மறுபகுதியை ணிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்துவிட வேண்டும். இருமல் குணமாகும்.

வெல்ல சீடை

பச்சரிசி மாவு மற்றும் உளுத்த மாவு

வெல்லம் - மாவு 1 கப் என்றால் பாகு வெல்லம் - 1 கப்
ஏலக்காய் - 4
எள் - 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் அல்லது பற்களாக கீறிக் கொள்ளவும்
பொரிக்க எண்ணெய்

வெல்லத்தை சீவிக் கொண்டு, ஒரு பால் கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொண்டு, வடிகட்டி வைக்கவும்.

வாணலியில், ஒரு கப் தண்ணீர் வைத்து கொதித்த பின், வெல்லக் கரைசலை ஊற்றி, ஒரு கம்பி பதத்தில் வந்ததும், அடுப்பை அனைத்து விடவும்.

பச்சரிசி மற்றும் உளுத்த மாவை போட்டு எள், ஏலம், தேங்காய் துருவல் போட்டு, தண்ணீர் விடாமல் கரண்டியால் பிசறிக் கொள்ளவும்.

மாவில் கொஞ்சம் , கொஞ்சமாக வெல்லப் பாகை ஊற்றி பிசைவும். கையில் கொஞ்சம் வெண்ணையோ, நல்லெண்ணையோ தடவிக் கொண்டு பிசைந்து கொண்டு, சிறிது பெரிய உருண்டைகளாக உருட்டவும்.

கண்டிப்பாக மாவை வறுத்துதான் செய்ய வேண்டும். இல்லையெனில் சீடைகளை எண்ணையில் போட்டவுடன் விரிந்து கொண்டு, கரைந்து விடும்.

இளமையும், மினுமினுப்பும்

பெரும்பாலான பெண்கள் சற்று குண்டாக இருக்கிறார்கள் அல்லது ரொம்ப ஒல்லியாக இருக்கிறார்கள். கல்யாணம் நெருங்கும்போது ஒல்லியாக இருப்பவர்கள், கொஞ்சமாவது சதை போட்டால் தேவலை என்று கருத, குண்டாக இருக்கும் பெண்களோ அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறார்கள். எப்படியாவது தங்கள் உடல் எடையை குறைத்தே ஆகவேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.
 
அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறை பட்டினி. தொடர்ந்து பட்டினி கிடக்கும்போது சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு விடுகிறது. அந்த சுருக்கத்தைப் போக்க பின்பு, அழகு சிகிச்சையும் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள்.
 
உடல் எடையைக் குறைக்க பட்டினி கிடப்பதைவிட சிறந்தது தேவையான உடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும். இவைகளை தொடர்ந்து இளம்பெண்கள் கடைபிடித்தால் உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். சருமத்தில் சுருக்கம் ஏற்படாது. கவர்ச்சியான அழகையும் தக்கவைத்துக் கொள்ளலாம்.
 
உடல் எடையை அதிரடியாகக் குறைத்தால் உடலில் இருக்கும் கொழுப்பு கரைந்து முகம், கழுத்து, கைவிரல் பகுதிகளில் சுருக்கம் தோன்றும். முகம், கழுத்துப் பகுதியில் உள்ள சுருக்கங்களைப் போக்க வாரத்திற்கு ஒரு முறை `டைட்னிங் பேஷியல்' செய்ய வேண்டும். டைட்னிங் பேக்குகளும், டைட்னிங் மாஸ்க்குகளும் சரும சுருக்கங்களைப் போக்க உதவுகின்றன.
 
சருமத்தின் அழகைப் பாதுகாக்க கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு போன்ற உணவுகள் தேவை. முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், கீரை வகைகள், முளைவிட்ட பயறு வகைகள் போன்றவை சருமத்திற்கு இளமையையும், மினுமினுப்பையும் தரும். அதோடு தினமும் பத்து டம்ளர் தண்ணீரும் குடித்தால் சருமம் வறண்டு சுருக்கம் தோன்றுவது தவிர்க்கப்படும். கன்னங்கள் உள் அமுங்கி காணப்பட்டால் தினமும் பத்து நிமிடங்கள் வாய் நிறைய தண்ணீரை வைத்து கொப்பளிக்கும் பயிற்சியை மேற்கொண்டால் போதும்.
 
உடல் எடையைக் குறைக்க பட்டினி கிடந்தால், முடி உதிர்வது அதிகரிக்கும். புரோட்டீன் கலந்த உணவுகளை உண்ணுவதோடு ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால், சருமத்திற்கு வயதான தோற்றம் ஏற்பட்டுவிடும். அதனால் பெண்கள் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
 
சரும அழகை மேம்படுத்தும் டைட்னிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலே தயாரிக்கலாம்.
 
முட்டையின் வெள்ளைக் கரு, முல்தானிமிட்டி, தேன் மூன்றையும் கலந்தாலே போதும். வறண்ட சருமமாக இருந்தால் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளலாம். இதை பயன்படுத்தினாலே போதும்.
 

கோடைக்கால அழகு குறிப்புகள்



மற்ற எந்த நாட்களையும் விட கோடையில்தான் நமது சருமமும், கூந்தலும் அளவுக்கதிகமாக பாதிக்கப்படும். எனவே அவற்றுக்குப் பிரத்யேகக் கவனிப்பும், பராமரிப்பும் தேவை. மிக அதிக நேரம் வெயிலில் அலைபவர்களது சருமம் சீக்கி ரமே முதுமைத் தோற்றத்தை அடையவும், சருமப் புற்று நோயால் பாதிக்கப் படவும் வாய்ப்புகள் அதிகமாம்.
வெயிலில் எங்கே செல்ல நேர்ந்தாலும் தலைக்குத் தொப்பி அணிந்து போவது பாதுகாப்பானது
.
கோடையின் பாதிப்பைத் தடுக்க சில அழகுக் குறிப்புகள் இதோ உங்களுக்காக
 
 சன் ஸ்க்ரின் லோஷன் உபயோகிக்கவும்:
மேக்கப் போட ஆரம்பிப்ப தற்கு முன்பே சன் ஸ்க்ரின் லோஷன் அல்லது கிரிம் தடவ வும்
.வெயிலின் பாதிப்பைத் தடுக்க இது மிக முக்கியம். எந்த சன் ஸ்க்ரினை உபயோகித்தாலும் அதன் பலன் மூன்று மணி நேரத்திற்கு மேல் நீடிக்காது. எனவே மறுபடி தடவ வேண்டும். முகத் தில் மட்டும் என்றில்லாமல் உடலில் வெயில் படக்கூடிய எல்லா இடங்களிலும் அதைத் தடவிக்கொள்ள வேண்டும்.
 
Related Posts Plugin for WordPress, Blogger...