என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

முகச் சுருக்கம் மறைய சில வழிகள்

1 சந்தனப்பொடியுடன், பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வர சுருக்கம் நீங்கும்.

2முட்டையின் வெள்ளைக்கருவுடன் தேனை கலந்து, பூச முகச்சுருக்கம் குறையும். அப்படி செய்யும் போது, கண்களை சுற்றியுள்ள பகுதிகளை தவிர்ப்பது நல்லது.

3வெள்ளரிச்சாறுடன், தேன் கலந்தும் முகத்தில் பூசினால் முகச்சுருக்கம் குறையும்

4ஓட்’மாவுடன் சந்தனப் பொடி மற்றும் பால் கலந்தோ அல்லது வெள்ளரி விதையை நன் றாக அரைத்து அத் துடன் பன்னீர் கலந்தோ முகத்தில் பூச சுருக்கம் மறையும்.

4பாதாம் பருப்பை பவுடராக்கி, அத்துடன் சிறிதளவு சோயாமாவு மற்றும் பன்னீர் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ சுருக்கம் நீங்கும்.

5வெங்காயத்தை அரைத்து அத்துடன் தேன் கலந்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்தாலும் முகச்சுருக்கம் மறையும்.

6அடிக்கடி நெற்றியை சுருக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. இதனால், நெற்றியில் சுருக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது

7அடிக்கடி தக்காளி சாறு அல்லது பாதாம் எண்ணெய் அல்லது நன்றாக பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால், விரைவில் சுருக்கம் உண்டாவது தாமதமாகும்.

8அதிகமாக கோபப்படுபவர்களுக்கு விரைவிலேயே சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது எனவே கோபப்படுவதை குறைத் துக் கொள்ளுங்கள். முகச்சுகுக்கம் வருவதை தடுக்கலாம் 

இறால் பஜ்ஜி




இறால் பெரியது - 500 கிராம்
மைதா மா- 250 கிராம்
சோள மாவு - 1மேசைக்கரண்டி
பேக்கிங்பவுடர் - 1 தேக்கரண்டி
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
பூண்டு பல் -6
மிளகு தூள் -1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை

முதலில் மா,பேக்கிங் பவுடர் இரண்டையும் சேர்த்து சலித்துக்
கொள்ளவும், பின் உப்பு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல்
கரைத்து 2 மணி நேரம் புளிக்க வைக்கவும். இறாலை தோல்
நீக்கி சுத்தம் செய்து அதில் பூண்டு, உப்பு, மிளகு தூள்,
அஜினமோட்டோ போட்டு பிசறி வைக்கவும். வாணலியில்
எண்ணெய் காய்ந்ததும் இறாலை மாவில் தோய்த்து
எண்ணெயில் போடவும். மிதமான தீயில் பஜ்ஜிகளை
பொரித்து எடுக்கவும். இது சில்லி சாஸ் உடன் சாப்பிட
சுவையாக இருக்கும்.

முகம் பளபளக்க புரூட் மசாஜ்


பாலை உபயோகப்படுத்தி முகம் முழுவதும் பூசி மெதுவாக
பஞ்சைக் கொண்டு துடைக்க வேண்டும். இதனால் தோலினுள் படிந்திருக்கும் அழுக்கு நீங்கிவிடும்


மசாஜ் செய்ய தயிரை, தேனை  உபயோகப்படுத்த வேண்டும். 
இது சூரியக்கதிர்களின் தாக்குதலால் ஏற்படும் சருமக் 
கருப்பைப் போக்கும். அதிக சத்தும் சருமத்திற்கு கிடைக்கும். 

பப்பாளி விழுதைச் சேர்த்து வறண்ட மற்றும் சாதாரண 
சருமத்தினர் மசாஜ் செய்ய உபயோகப்படுத்தலாம். 

தக்காளி, ஆரஞ்சு, கொய்யா, வாழைப்பழம் கலவையைக் 
கொண்டு மசாஜ் செய்தால் முகம் மிகவும் பளபளப்புடன் 
இருக்கும்.

பழுத்த வாழைப்பழத்தை கூழாக்கி ஒரு ஸ்பூன் தேன் 
கலந்து முகத்தில் பூசினால் முகம் பொலிவாக 
இருக்கும் இதனை அனைத்து சருமத்தினரும் 
உபயோகப்படுத்தலாம்.

சருமத்தில் அதிக கருப்பு வெள்ளை இருந்தால் சர்க்கரையைப்
பொடித்து அத்துடன் சிறிது பப்பாளி விழுதை சேர்த்து முகத்தில் 
அழுத்தி தடவ வேண்டும்.

நீங்கள் ஏதேனும் மசாஜ் செய்து  முடிந்தவுடன் சிறிய 
டவலைக் கொண்டு வெந்நீரில் நனைத்துபொறுக்கு
மளவு சூட்டுடன் முகத்தின் மேல் போட்டு மூன்று 
நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும். இவ்வாறு 
இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டும். 
அவ்வாறு செய்ய இயலாதவர்கள் சிறிய 
பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து ஆவி பிடிக்க
வேண்டும் வேப்பிலைகள் சிறிது சேர்த்து ஆவி
பிடித்தால் மிகவும் நல்லது.

பேக் போட கேரட், ஆப்பிள், ஆரஞ்சு, உருளைக்

கிழங்கு, தேன், வெள்ளரி, ஸ்ட்ராபெரி, பேரீச்சம் 
பழம், எலுமிச்சைச்சாறு சிறிதளவு இவற்றை அரைத்து 
பேக் போட்டு அரைமணி நேரம் கழித்து முகம் கழுவ 
வேண்டும். மேற்கூறியவற்றில் ஏதாவது இரண்டு 
அல்லது மூன்று சேர்த்து அரைத்தும் உபயோகப்படுத்திக் 
கொள்ளலாம். இந்த பேசியல் செய்த உடனேயே
கண்கள் குளிர்ச்சியடையும். முகம் பளபளப்பாகவும் 
அழகாகவும், பொலிவுடனும் மாறும்.

ஸ்ட்ராபெரி பழம் சருமத்தை இலேசாக வெளுக்கச் 
செய்யும் தன்மை  கொண்டது.முகத்திலுள்ள பருக்களின் 
வடுக்களை விரைவில் மறையச்செய்யும் குணம் 
கொண்டது. 

வெயிலினால் ஏற்படும் சருமப் பராமரிப்பிலிருந்தும், 
சூரியக்கதிர் வீச்சிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும். 
ப்பத்தைக் கொண்டு மசாஜ் செய்தால் முகத்தில் நல்ல
மாற்றம் காணலாம் 


விளாம்பழ அழகு குறிப்புகள்

சருமப் பொலிவுடன் கேச ஆரோக்கியத்துக்கும் விளாம்
பழம் வழி சொல்கிறது. பயத்தம்பருப்பு ,விளாங்காய் 
விழுது சம அளவு எடுத்து அதனுடன் பாதாம்பருப்பு 2 
இவை அனைத்தையும் முந்தின நாள் இரவே ஊற 
வைத்து மறுநாள் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். 
இந்த கிரீம்-ஐ முகத்தில் பூசினால் நாள்பட்ட பருக்கள்
கூட மாயமாக மறைந்து விடும். தழும்பும் இருந்த 
இடம் தெரியாமல் போய்விடும்.
 
விளாம்பழத்தின் சதைப் பகுதியைத் தனியே எடுத்துக் 
காய வைத்து அதனுடன், பார்லி, கஸ்தூரி மஞ்சள்,
 பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு.. 
எல்லாவற்றையும் சம அளவு எடுத்து அரைத்துக் . 
இதை குளியல் பவுடராக பயன்படுத்தி வர, முரடு 
தட்டிய தோல் மிருதுவாவதுடன், கரும் புள்ளிகளும்
 காணாமல் போகும்.  

பருக்கள் முற்றி அதிலிருந்து ரத்தம் வடிந்தாலும் இந்த
 கிரீம் ஆன்டிசெப்டிக்காக செயல்பட்டு மருத்துவ 
பலனை தரும்). விளாங்காயும் பாதாம்பருப்பும் தோலை
 மிருதுவாக்கும். பயத்தம்பருப்பு சருமத்தை சுத்தப்படுத்தும்.

ப்ரெட் சமோசா



  • தேவையான பொருட்களை
  • ப்ரெட் - 8 பீஸ்
  • மைதா - ஒரு கப்
  • கேரட் - 3 (பொடியாக நறுக்கியது)
  • பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
  • உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)
  • கொத்தமல்லி தழை - சிறிது
  • இஞ்சி - பொடியாக நறுக்கியது
  • வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
  • கரம் மசாலா, மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • செய்முறை 
  • கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,
  • பச்சைமிளகாய்,இஞ்சி ஆகியவற்றை வாசனை
  • வரும் வரை வதக்கவும் பின்னர், அதில் கேரட்,
  • பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின்
  • உருளைக்கிழங்கு,கரம் மசாலா,மிளகாய் தூள், 
  • உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.கலவை நன்கு 
  • வாசனை வரும் போது உதிர்த்து வைத்து 
  • இருக்கும்ப்ரெட் துண்டுகளை போட்டு நன்கு 
  • கிளறவும் பின் மைதா மாவை, சப்பாத்தி
  • மாவு பதத்திற்கு பிசைந்து தேவைப்படும் வடிவில் 
  • தேய்த்து கொள்ளவும். அதன் நடுவே கடாயில் 
  • இருக்கும் கலவையை வைத்து ஓரங்களை சுருட்டி 
  • விடவும்.பின்னர், எண்ணெயில் போட்டு பொரித்து 
  • எடுக்கவும். இப்போது ப்ரெட் சமோசா தயார்   

தேமல் மறைய சில வழிகள்

வேப்பிலைகளை அரைத்துத்  தேமல் மீது தடவிவர  தேமல் குறையும்

குப்பை மேனிக் கீரையை எடுத்து அதனோடு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மை போல அரைத்து தேகத்தின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.

தேமல் மறைய சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலை அடையும்

கை, மார்பு, தொடைப் பகுதிகளில் ஆங்காங்கே தேமல் இருக்கிறதா? மணத்தக்காளிக் கீரையின் சாற்றை எடுத்து உடம்பில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் குளித்து வர தேமல் மறைய தொடங்கும் 

வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாக்க சில டிப்ஸ்


அசைவ உணவு வகைகளை பிரிட்ஜிக்குள் வைக்கும் போது
அவற்றை தனியாக கவரில் போட்டு வையுங்கள். இத்துடன்
எலுமிச்சம் பழத்தை துண்டுகளாக்கி பிரிட்ஜில்  வைப்பதன்
மூலம் கெட்ட வாடையைத் தவிர்க்கலாம்.


குளிர்சாதனப் பெட்டியில் காய்கறிகளை வைக்கும் போது
அவைகளைத் தனித்தனியே பிளாஸ்டிக் கவர்களில் வைக்க
வேண்டும். எல்லாக் காய்கறிகளும் ஒரே பையில் வைக்கக்
கூடாது.

நீரில் நனைத்த காகிதத்தினால் கீரைகளைச் சுற்றி வைத்தால்
சீக்கிரம் வாடாமல் இருக்கும்.

இஞ்சி தேவைக்கு அதிகமாக இருந்தால் அதை மண்ணில்
புதைத்து வைத்து தண்ணீர் விட்டு வையுங்கள். தேவைப்படும்
போது எடுத்து உபயோகிக்கலாம். இஞ்சி காய்ந்து போகாது.

கோடையில் காய்கறிகள் சீக்கிரமாக காய்ந்து விடும். ஒரு
புதிய மண்பானையில் காய்கறிகளைப் போட்டுக் பானையை
ஈரமுள்ள மணல் மேல் வைத்தால் இரண்டொரு நாள் வரை
காய்கறிகள் புகிதாகவே இருக்கும்.

பாகற்காய் சீக்கிரம் பழுத்துவிடும். இதைத் தவிர்க்க
பாகற்காய்களை இரண்டிரண்டடாக நறுக்கி வைத்து
விடுங்கள்.

கிழங்குகளை மூடி வைக்கக்கூடாது. காற்றாடப் பரப்பி
வைக்க வேண்டும். கிழங்கை உப்புக் கரைத்த நீரில்
பதினைந்து நிமிஷங்கள் ஊற வைத்துவிட்டுப் பிறகு
அடுப்பில் வைத்தால் சீக்கிரம் அது வெந்துவிடும்.

கூடையில் காய்களைப் போட்டுக் ஈரத்துணியினால் மூடி
வைத்திருந்தால் பல நாட்கள் வரை வாடாமல் இருக்கும்.

முதல் நாள் மாலையில் வாங்கிய பூ மறுநாள் காலை
வரையில் வதங்காமல் இருக்க வேண்டுமா? பூவை
ஈரத்துணியில் சுற்றி வைக்காதீர்கள். ஒரு பாத்திரத்தை
நன்றாகக் கழுவிவிட்டு அந்த பாத்திரத்திற்குள் பூவை
வைத்து மூடி வையுங்கள்.பூ வாடாமல் வதங்காமல் நீங்கள்
வைத்த மாதிரியே இருக்கும்

பச்சைப் பட்டாணி மலிவாகக் கிடைக்கும் போது அதை
உரித்து எடுத்து, பிளாஸ்டிக் பையில் போட்டு அதன்
வாயைக் நன்கு இறுக்க கட்டி குளிர்சாதனப் பெட்டியில்
வைத்தால் பல மாதங்கள் வரை பச்சை மாறாமல்
இருக்கும்.

பால் அல்வா

 

தேவையானப்பொருட்கள்:

பால் - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 1/2 கப்
ரவா - 1/4 கப்

செய்முறை:

மேற்கூறிய அனைத்தையும் ஒரு அடி கனமான
வாணலியில்போட்டு, மிதமான தீயில் வைத்து, கெட்டியாகும்
வரைக் கிளறிக் கொண்டிருக்கவும். அல்வா கெட்டியாகி
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது, இறக்கி விடவும்.
ஒரு கிண்ணத்தில் சிறிது நெய் தடவி அதில் அல்வாவைக்
கொட்டி வைக்கவும்.இதற்கு வாசனைப் பொருட்கள் எதுவும்
சேர்க்க தேவையில்லை.பால் கோவா போன்ற சுவையுடன்
இருக்கும். விருப்பப்பட்டால்,சிறிது பாதாம் அல்லது பிஸ்தாப்
பருப்பை பொடியாக நறுக்கித் தூவி பரிமாறலாம்.


பொட்டுக்கடலை உருண்டை

தேவையானப்பொருட்கள்:

பொட்டுக்கடலை - 3 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10 அல்லது 15

செய்முறை:

பொட்டுக்கடலையையும், சர்க்கரையையும் தனித்தனியாக 
மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்து, சலித்து எடுக்கவும்.
பொட்டுக்கடலை மாவை அளந்து ஒரு பாத்திரத்தில் போடவும். 
பொடித்த சர்க்கரையும் அதே அளவு இருக்க வேண்டும்.
சர்க்கரைப்பொடி கூடவோ, குறையவோ இருந்தால் 
அதற்கேற்றாவாறு சரி செய்து கொள்ளவும். மாவையும், 
சர்க்கரைப்பொடியையும் ஒன்றாகக் கலக்கவும்.
அத்துடன் ஏலக்காய் தூளையும் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது நெய்யை விட்டு சூடானதும், அதில் 
முந்திரிப்பருப்பைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, மாவில் 
போட்டு மீண்டும் நன்றாகக் கலக்கவும்.ஒரு தட்டில்,
நாலைந்துக் கரண்டி பொட்டுக்கடலைமாவு கலவையைப் 
போட்டு, அதில் சிறிது சூடான நெய்யை விட்டுக் கிளறி, 
அதே சூட்டுடன் உருண்டைகளாகப் பிடிக்கவும். இதே போல் 
எல்லா மாவையும் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு,
சூடான நெய் சேர்த்து உருண்டைகளைப் பிடித்தெடுக்கவும்.

முகத்திற்கு ஏற்ற மாதிரி புருவத்தை மாற்ற சில வழிகள்


முகத்துக்கு ஏற்ப, கண்களுக்கு ஏற்ப புருவத்தை ட்ரிம் செய்து 
கொள்ளுங்கள். 


குறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி 
அதிகம் இருக்கட்டும்.


நீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக
இடைவெளி தேவையில்லை.


ஓவல் முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன்
இருந்தால் வசீகரமாக இருக்கும்.


அகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள்.


புருவங்கள் நெருங்கி இருந்தால் முகம் குறுகி, கண்கள்
சிறிதாக தெரியும்.


சதுர முகம் உள்ளவர்கள் பெரிய வளைவாக பிறை வடிவில் 
மாற்றிக் கொள்ளுங்கள். முகம் ஓவல் வடிவமாகத் தெரியும்.


புருவத்தின் முடிவு மிகவும் கீழ் நோக்கி இருந்தால் வயதான 
தோற்றம் தரும். மாற்றிக்கொள்ளுங்கள்.


கருப்பு நிறம், அழகிய முகம் உள்ளவர்கள் புருவத்தை சரி 
செய்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.


வட்ட முகம் உள்ளவர்கள் புருவம் கீழ் நோக்கி வருவதுபோல்
அமைத்துக் கொள்ளவும்.


நீண்ட, ஓவல் முகம் உள்ளவர்கள் சிறிய புருவத்தை அமையுங்கள்.

நிலக்கடலை குக்கீஸ்

தேவையான பொருட்கள்
நிலக்கடலை                -500 கிராம்
ஐசிங் சீணி                    -500 கிராம்
கோதுமை மா              -500 கிராம்
மரக்கறி எண்ணெய்  -2 தேநீர் கப்
வெனிலா எசன்ஸ்     -2 தேக்கரண்டி

செய்முறை
நிலக்கடலை தோலை உரித்து அதனை சுத்தம் செய்து
மிச்சியில் போட்டு பொவுடராக்கிக் கொள்கபின் அதில்
சலித்த ஐசிங் சீணி,கோதுமை மா,வெனிலா எசன்ஸ் போட்டு
கிளறிக்கொள்க பின்னர்அதில்மரக்கறி எண்ணெய்யை சிறிது,
சிறிதாக போட்டு பினைந்துக்கொள்க பின்னர் உங்களுக்கு பிடித்த
வடிவில் வெட்டி அதனை பேக்செய்தால் நிலக்கடலை குக்கீஸ் தயார்.

இளம் வயதில் தோல் சுருக்கம்

இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம்
ஏற்படுகின்றது. இதற்குக் காரணம் "பாஸ்ட் புட் உணவு 
வகைகளை இவர்கள் அதிகம் உண்பதுதான் எனக் 
கூறப்படுகின்றது. இது கட்டாயமாகத் தவிர்க்கப்பட 
வேண்டியது அவசியம். இளமையிலேயே வயதானவர் 
போல் தோற்றத்தை தருகிறது. உணவு விடயத்தில் சிறிது 
கவனம் செலுத்துதல் அவசியம்.

வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேக

வைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு 
வந்தால் உடல் குளுமையாக இருக்கும்.

கறிவேப்பிலையிலுள்ள விட்டமின் ஏ இளமையான 

சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ள பெரிதும் உதவும். 
அடிக்கடி துவையல் செய்து சாப்பிடலாம்  இவை தோல் 
சுருக்கத்தை தவிர்க்கிறது.
.
காய்கறி பழ வகைகளைத் தவறாமல் சாப்பிடுங்கள்.
இயற்கையான காய்கறி, பழ வகைகளில் உள்ள விற்றமின்
மற்றும் சத்துக்கள் தோலில் சுருக்கம் ஏற்படுவதைத்
விர்க்கக் கூடியவை.

நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக 
எடுத்து  உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை 
மாவினால் தேய்த்துக் கழுவுங்கள். இப்படி அடிக்கடி செய்தால் 
தோல் சுருக்கம் வருவதை தவிர்த்துக்கொள்ளலாம்


அலர்ஜி தரும் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி?

அறிகுறிகள் 


1 அலர்ஜி ஏற்பட்டால் குடல், சுவாசம், தோல், ரத்தசெல்கள்
ஆகியவற்றைப் பாதிக்கும். நோய்த்தடுப்பு மண்டலமும்
அலர்ஜியால் பாதிப்புக்குள்ளாகலாம்.

2 சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில்
அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம்.

3 நீங்கள்  உண்ட உணவுப்பொருட்களின் விளைவு , உங்கள்
சரும தோலில் பரிசோதிக்கப்படும்.

4 உணவை வாயில் வைத்தவுடன் கூசும். முகச்சுளிப்பு
கூட ஏற்படும்.

5 குரல்வளையில் ஒருவித மாற்றங்களை உணரலாம்.
வாந்தி ஏற்படும்.

6 சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில்ஒத்துக்கொள்ளாமல் வேலையைக் காட்ட ஆரம்பித்து
விடும். சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்
விளைவை உண்டாக்கும்.

7 சிலருக்கு நினைவு இழப்பும் நிகழ்வதுண்டு.
8 வேர்க்கடலை, பட்டாணிக்கடலை போன்ற பருப்பு
வகைகள்தான் அதிக அலர்ஜியைத் தரக்கூடியவை. இவை இம்யுனோகுளோபின் என்ற ரசாயனத்தைச் சுரந்து
நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்யும்

9 அடிவயிற்று வலி வரலாம். மூச்சுவிடுவதில் தகராறு, பெரு
மூச்சு விடுதல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்

10 உணவு ஒவ்வாமை, மருந்துகள், அலர்ஜி, ஆஸ்துமா, சொறி,
அரிப்பு, சிறு கொப்பளங்கள், வயிற்றுப்பிரட்டல், பேதி, எக்ஸிமா,
ஜலதோஷம், போன்றவையை உண்டாக்கும்.

11 முட்டை, பால், வேர்க்கடலை, சோயா மொச்சை, கோதுமை,
முந்திரிக் கொட்டை, பாதாம்பருப்பு, மீன், நத்தை வகை
போன்ற9 வகை உணவுப் பொருட்கள் 90 சதவீதம் அலர்ஜி
ஏற்படுத்தும் உணவுகளாக நிபுணர்கள் பட்டியலிட்டு
உள்ளார்கள். இவற்றில்வேர்க்கடலை, மீன், நத்தை,
கொட்டை உணவு வகைகளில் அலர்ஜி ஏற்பட்டால் அது
வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும். மற்ற உணவுகள்
தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

மூக்கை பராமரிக்க சில ஆலோசனைகள்

எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை 
மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும்.

மூக்கின் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் 
மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் 
செய்ய வேண்டும். .

ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும்
வரை ஆவி பிடிக்க வேண்டும்.  பிறகு கண்ணாடியைப் 
பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் 
ஹெட் ரிமூவரால் மெதுவாக நீக்கலாம்  வெளியே வேரோடு 
வரும் பிளாக் ஹெட்ஸை டிஷ்யூவால் துடைத்து 
எடுத்துவிடுங்கள்.  இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை 
நன்றாக கழுவினால் போதும். இந்த ட்ரீட்மெண்ட் செய்யும் 
முன்பு முகத்திற்கு ஸ்க்ரப் போடுவதென்றாலும் போடலாம்.
ஆனால் ட்ரீட்மெண்ட் செய்த பிறகு ஸ்க்ரப்பிங் கூடாது.

ரெகுலராக வாரம் ஒரு முறை முகத்தினை ஸ்க்ரப் செய்யும்
போது மூக்கு பகுதியில், பக்கவாட்டில் மசாஜ் செய்தாலே 
ஒயிட் ஹெட்ஸ் வராது.

 மூக்கின் உள்ளே ஒரு சிலருக்கு அதிகமாக முடிகள் இருந்து, 
வெளியில் லேசாக எட்டிப் பார்க்கும். இதுவும் அழகை 
கெடுக்கிற விஷயம்தான்.  புருவத்தை ட்ரிம் செய்ய உதவும்
கத்தரிக்கோலை கொண்டு லேசாக ட்ரிம் செய்துவிடலாம். 
இதற்கென்று பிரத்யேகமான கத்தரிக்கோலும் கடைகளில் 
கிடைக்கும்.

மூக்கிற்கு மேக்கப் போடும்போது சப்பையான மூக்கு 
உள்ளவர்கள் முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் பவுடர் 
அப்ளை செய்த பிறகு, முக நிறத்தைவிட கொஞ்சம் ஒரு 
ஷேடு குறைவான டார்க் நிறத்தில் உள்ள ரூஜை மூக்கின் 
இரு ஓரங்களிலும், அதாவது இரு புருவத்தின் 
ஆரம்பங்களிலிருந்தும் மூக்கு அடிவரை, நேராக கோடு 
போடுவது தடவ வேண்டும். இப்போது நடுபக்கம் மட்டும் 
லைட்டாகவும் ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் 
இருக்கும். சப்பை மூக்கு என்று பார்த்தால் தெரியாது.

சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள் ஒரு பக்கம் மட்டும் இதே போல் டார்க் 
கலரை அப்ளை செய்தால் நன்றாக இருக்கும். பொதுவாக 
இந்த வகை அப்ளிகேஷனை நார்மலான மூக்கு ஷேப் 
உள்ளவர்களும் செய்து கொள்ளலாம். மூக்கு அழகாக தெரியும்.

அழகுக் குறிப்புகள்


முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை
கரு, சர்க்கரை,சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து
பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும்.காய்ந்தவுடன்
மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில்
வரும்.

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து,
பத்து நிமிடம்கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
தினம் இவ்வாறு செய்து வந்தால்
முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி
முகத்தில் தடவினால்சருமத்தில் உள்ள எண்ணெய்ப்
பசை குறையும்.

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக்
கழுவினால் வறண்டசருமம் புதுப் பொலிவடையும்.

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து
உடம்பிற்கு தடவி,பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல்
பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில்
தடவி, 20 நிமிடம்கழித்து கழுவினால், சருமம் மிகவும்
மிருதுவாகும்.

இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி,
அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்
பருப்பு மாவை கலந்து முகத்தில்தடவிக் கொண்டு பத்து
நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம்
சுத்தமாகும். பருக்களினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி
எலுமிச்சை சாற்றைதடவ வேண்டும். தினமும் இவ்வாறு
செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம்அழகு பெறும்.

பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும்
காலையில் ஒரு டம்ளர்வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு
மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்துஅதனுடன் அரை
ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது
நேரம் கழித்துநகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும்,
அழகாகவும் வெட்ட இயலும்.

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி
முட்டையில் கொஞ்சம்சர்க்கரையை கலந்து தலையில்
லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்றவேண்டும்.
இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில்
எலுமிச்சை சாற்றைப் பிழிந்து, தலையில் தேய்த்துக்
குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி
இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.
இதில் சிறிது எடுத்து, பாலில்குழைத்து, முகத்தில் பூசி, 20
நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம்வேர்க்குரு வராமல்,
வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன்
உப்பைப் போட்டு,கண்களை கழுவினால் கண்கள்
பிரகாசமாக இருக்கும்.

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால்,
தொடர்ந்துஅந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து
சோப்பு போட்டு குளிக்கவேண்டும் நாளடைவில் கறுப்பு
நிறம் போய் விடும். தோல் வறண்டும்,சுருக்கமும் இருந்தால்
ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து,
சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ்..



சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், 
நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். 
அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால்,
நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட 
வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது 
நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.

தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து,

அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், 
விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள்

உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் 
ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.

நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு 

பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், 
நகங்கள் உறுதியாகும்.

ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை 

விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ 
வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் 
நன்றாக வளரும்.

நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் 

கல்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். 
எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து 
நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட 
வேண்டும்.

நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவது 

நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அவற்றை 
அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நெயில் 
பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து 
பயன்படுத்துவது நல்லது.

மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை

வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், 
நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் 
பளபளப்பாகும்.

நெயில் பாலீஷ் போடும் போது, பிரஷ் ஷினால், நகத்தின் 

அடிப்பகுதியில் நுனி வரை ஒரே தடவையாக போட 
வேண்டும். அப்போது தான் அவை பளபளப்பாக எவ்வித 
திட்டுக்களும் இன்றி அழகாக காட்சியளிக்கும்.

கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை 

நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், 
நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் 
எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை 
மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். 
மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

இறால் வடை

தேவையான பொருள்கள் :
இறால்                      - 100 கிராம்
வெங்காயம்             - 250 கிராம்
உடைத்த கடலை    - ஓரு கப்
கடலை எண்ணெய் - 400 கிராம்
பச்சை மிளகாய்       - 5
கறிவேப்பிலை        - 1 மேஜைக்கரண்டி
பூண்டு                      - 7 பல்
இஞ்சி                       - சிறிய துண்டு
மஞ்சள் பொடி         - 1/4 தேக்கரண்டி
உப்பு                         -  தேவையான அளவு

செய்முறை :

இறாலை உரித்துக் கழுவிச் சுத்தம் செய்து அதில் 
உப்பையும், மஞ்சள் பொடியையும் கலந்து 1 கோப்பை
தண்ணீரில் வேக வைக்கவும். பின்பு இறாலை,உடைத்த கடலையையும் தனித்தனியாக நன்றாக அரைத்துக் 
கொள்ளவும்.  பின் வெங்காயத்தையும், பச்சை 
மிளகாயையும் பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு, 
சோம்பு ஆகியவற்றை நசுக்கிக் கொள்ளவும்.அடுப்பில் 
வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு, நறுக்கி 
வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கி 
வைத்துள்ள மசாலா ஆகியவற்றை அதில் போட்டு 
சிவக்கும் வரை வதக்கவும். வதக்கிய வெங்காயம், 
அரைத்து வைத்துள்ள இறால், உடைத்த கடலை, 
மீதமுள்ள உப்பு, மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாகப் 
பிசையவும். அடுப்பில் வாணலியை வைத்து, 
எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பிசைந்து 
வைத்துள்ளதை சிறு வடைகளாகத் தட்டி 
எண்ணெயில் போட்டு சிவக்கும் வரை 
பொரித்தெடுக்கவும் இப்போது இறால் வடை தயார்.

வாய் துர்நாற்றம் அகல சில வழிகள்


துளசி இலையில் கஷாயம் செய்து அதை வாயில் விட்டுக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் அகலும்.

நாட்டுச் சர்க்கரையைச் சிறிது இஞ்சியுடன் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண் மற்றும்  வாய் துர்நாற்றமும்  அகலும்.

வயிறு மற்றும் குடல் நோய் நிபுணரை சந்தியுங்கள். ஏனெனில், வயிறு தொடர்பான பல பிரச்னைகளால் வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.


மருத்துவரின் ஆலோசனையின் பேரில் "மௌத் வாஷ்" பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு 6 முறையாவது "மௌத் வாஷ்" பயன்படுத்தி வாய்
கொப்பளித்தால், வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும்."

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் உ‌ள்ளவ‌ர்க‌ள் ‌கிரா‌ம்பை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று வ‌ந்தா‌ல் அ‌ந்த தொ‌ல்லை‌யி‌ல் இரு‌ந்து ‌விடுபடலா‌ம்.

எலுமிச்சை பழச்சாறை தண்­ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

வியர்குருவை தடுக்க சில வழிகள்

வெங்காய சாறை வியர்குரு மீது தடவினால் வியர்குரு மறைவதுடன் உடல் குளிர்ச்சி பெறும்.

சந்தனத்தை உடல் முழுவதும் பூசி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்தால் வியர்குரு மறைய தொடங்கும்.

சாதம் வடித்த கஞ்சியை வியர்குரு மீது தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வியர்குரு குணமாகும்

வேப்பிலை ,மஞ்சள் அரைத்து பூச அரிப்புக்கு மிகவும் நல்லது

கற்றாழை பூசி 20 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்

வேப்ப மரத்துபட்டை இடித்து தூளக்கி உடம்பில் பூசி 20 நிமிடம் கழித்து குளிக்க உடம்பு நமச்சல் ,தடிப்பு நீங்கும்

வெள்ளரி, கிர்ணிப்பழம் தொடர்ந்து சாப்பிட்டால் கோடையில் ஏற்படும் “அக்கி அம்மை’வியர்குருபோன்ற நோய் வராது

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை

 

 1தாய்  தந்தை குழந்தை முன் சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும். 

 

2சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.
 

3தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள்.


4குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி 
தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள்.



5உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை 
ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் 
மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.


6குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக்
கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது 
கூடவே கூடாது.

7குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் 
அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை 
இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' 
போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. 
அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது 
வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை 
பாதிக்க வழிவகுக்கும்.


8படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் 
போது, "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக 
விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று 
கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு 
எந்த  வேலையும் உனக்கு  கிடைக்காது. இந்த மார்க் 
வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, 
பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.


9குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில்
இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது
, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு 
போதும் அனுமதிக்காதீர்கள்.

நிறைமாத கர்ப்பிணிகளின் கவனத்திற்கு...


1 நிறைமாதமாக இருக்கும் பெண்கள் அதிகமாக 
சாப்பிடக் கூடாது. அளவோடுதான் சாப்பிட வேண்டும். 
அதிமாகச் சாப்பிடுவதாலும் வயிற்று வலி ஏற்படலாம்.

2
மிகவும் கடினமான காரியங்களில் ஈடுபடக் 
கூடாது. வேலை செய்தாலும் மிகவும் 
சாதாரணமாகவும் அமர்ந்த நிலையில் தான் வேலை
செய்ய வேண்டும்.

3 தண்ணீர் அவ்வப்போது குடித்து வர வேண்டும். 
குளிர்ந்த நீரைப் பருக வேண்டாம். பிரசவ காலத்தில் 
சளி பிடிப்பது பிரச்சினைக்குரியதாக ஆகிவிடும்.

4 இறுக்கமான ஆடைகளை நிச்சயமாக அணியக் 
கூடாது. உங்களது உடல் உறுப்புகளை மிகவும் 
சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
 
5 குதிகால் அதிக உயரம் கொண்ட செருப்புக்களை 
அணியாதீர்கள். அதிகமான நகைகளையும் 
அணிந்திருக்காதீர்கள்.
 

6 வெயிலில் அலைவதோ, மிகவும் கூட்டமான 
இடத்திற்குச் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும்.
 
7
குளிக்கும் போது மார்பகக் காம்புகளில் வரும் 
சிறு பருக்கள் போன்றவற்றை அகற்றிவிட்டு சுடு 
தண்ணீரில் கழுவி விடுங்கள்.
 
8 எப்போதும் ஒருவரது துணையுடன் இருங்கள். 
எங்கே செல்வதாக இருந்தாலும் ஒருவரை துணைக்கு 
அழைத்துச் செல்லுங்கள். வெகு தூரப் பிரயாணத்தை தவிர்த்துவிடுங்கள்.
 
9 உ‌ங்களு‌க்கு கொடு‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம் ‌பிரசவ 

தே‌தி‌க்கு 2 நா‌ட்களு‌க்கு மு‌ன்னரே மரு‌த்துவம
னை‌க்குச‌் செ‌ன்று‌விடு‌ங்க‌ள்.
 
10 பிரசவ தே‌தி வரை வ‌யி‌ற்று வ‌லி இ‌ல்லாம‌ல் 

இரு‌ந்தா‌ல் மருத்துவரை அணுகுங்கள்.
சிலரு‌க்கு ‌பிரசவ வ‌லியே வராம‌ல் இரு‌க்கு‌ம். 

ஆனாலு‌ம் குழ‌ந்தை ச‌ரியான இட‌த்‌தி‌ற்கு வ‌ந்து‌விடு‌ம். 
எனவே மருத்துவரை நாடுகள்.

பீட்ஸா

Pizza - Cooking Recipes in Tamil

தேவையானவை:
மைதா - 500 கிராம்
சீனி  - 4 டீஸ்பூன்
ஈஸ்ட் - 1/2 டீஸ்பூன் (உடன் வெது வெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும்)
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 2டீஸ்பூன்
உப்பு - 2டீஸ்பூன்
செய்முறை:
மைதா மாவில் கலந்துவைத்த ஈஸ்ட், பேக்கிங் பவுடர், வெண்ணெய், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பிறகு சற்று விரிவான பாத்திரம் 8 அங்குல விட்டம் 2 அங்குல உயரம் ஒன்றில் நெய் தடவி, பாத்திரம் கொள்ளும் அளவு மாவு அரை செ.மீ கணம் இருக்கும்படி விரித்து வைக்கவும். வெண்ணெய் தடவி மாவை பேக்கிங் அடுப்பில் வைத்து 350 டிகிரியில் முக்கால் பாகம் வேகும் வரை வைத்து எடுக்கவும்.
பீட்ஸாவினுள் பரப்புவதற்கு தேவையானவை:
தக்காளி - 600கிராம்
குடை மிளகாய் - 2
மிளகாய் சாஸ் - 4டீஸ்பூன்
பூண்டு - 8 பல்
மிளகாய் தூள் - 2டீஸ்பூன்
வெள்ளரிக்காய் - 2
பெரிய வெங்காயம் - 2
சீஸ்  - 100 கிராம்
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பூண்டு, இஞ்சியை நறுக்கிக் கொள்ளவும். தக்காளிப் பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி, தக்காளித்துண்டுகளை போட்டு வதக்கவும். உப்பு, மிளகாய்தூள் போடவும். சாஸ்மாதிரி கெட்டியானவுடன் இறக்கவும். தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காயை வட்டவடிவில் வெட்டி குடை மிளகாயையும் நறுக்கி, சுட்டு வைத்து இருக்கும் முக்கால் பங்கு வெந்த பீட்ஸாவின் உள்ளே வைத்து அடுக்கி, மிளகாய் சாஸ் ஊற்றி சிஸ்ஸை துருவி மேலே தூவிக்கொள்ளவும். வெண்ணெய் 2 டீஸ்பூன் மேலே விட்டு மறுபடியும் 10 நிமிடம் 350 டிகிரி சூட்டில் வேகவைத்து எடுக்கவும். இப்பொழுது

பீட்ரூட்டின் பயன்கள்


பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி 
நீங்கும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில்
தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் 
உற்பத்தியாகும்.


தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாற்றைத் தடவ தீப்புண்
கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட 
இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.

பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை, இரத்த சோகையை
குணப்படுத்தும்.

பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.

பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட 
காயத்தில் பூசிவர புண் ஆறும்.

பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து 
சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர 
அனைத்தும் குணமாகும்.

பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% 
கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும்,
8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, 
மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், 
கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், 
வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் 
போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் 
ஏ அதிகமாக உள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...