என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனிக்க வேண்டியவை

காது குத்தும் இடம் சுத்தமானதாக இருக்கிறதா என்று 
நாம் உறுதிசெய்ய வேண்டும். ஏனென்றால் 
குழந்தைகளின் உடலில் நோய்எதிர்ப்பு சக்தி 
குறைவாகவே காணப்படும்.

காது குத்துவது சரியாக செய்யப்படவில்லை என்றால் 
அது குழந்தைகளுக்குஅதிகமான வலியை ஏற்படுத்தும்.

காது குத்தும் இடத்தை தரமான ஆண்டிசெப்டிக்கை
பயன் படுத்தி கழுவவும்
.
குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல்
தோடுகளை இழுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அது 
அவர்களுக்கு மிகுந்தவலியினை கொடுக்கும்.

காது குத்திய முதல் நான்கிலிருந்து ஐந்து மாதத்திற்கு 
குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல், 
தோடுகளை தொடர்ச்சியாக அணிய வேண்டும்.

காது குத்தும் கருவி சுத்தமானதாக இல்லை என்றால் 
காதுகுத்தப்பட்ட இடத்தில் கிருமிகள் தாக்க அதிக 
வாய்ப்புள்ளது.

அவர்கள் அணியக்கூடிய காதணிகள் தரமானதாக 
இல்லை என்றாலும் இது போன்று கிருமிகள் தாக்க 
வாய்ப்புள்ளது.

உங்கள் குழந்தைக்கு இரும்பு போன்றவற்றினால் 
அலர்ஜி ஏற்படுமானால் அந்த அலர்ஜி, இது போன்ற 
காதணிகள் அணிவதால் உங்கள் குழந்தையை பாதிக்கலாம்.

குழந்தைகளின் காதணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து 
கொள்ளாதீர்கள்.

சில நேரங்களில், காது குத்திய இடத்தில் சிறிய தழும்புகள்
வரவாய்ப்புகள் உள்ளது. இது சில நாட்களில் தானாகவே 
நீங்கிவிடும். ஆனால் இது கூட பலபெரும் பிரச்சனைக்கு 
காரணமாக அமையலாம். பெரும்பாலும் காது குத்தும் 
இடங்களில் கட்டி இருந்தால் இந்த பிரச்சனைகள் 
வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அதனால் காது 
குத்தும் போது கட்டி இருந்தால் அந்த இடத்தை 
தவிர்ப்பது நல்லது.

குழந்தை மருத்துவமனைகளில் இதனை செய்வது நல்லது.

மலபார் மஷ்ரூம் குருமா

மஷ்ரூம்-500 கிராம்
சீரகம் பொடி-2 சிட்டிகை
கரம் மசாலா-1/2 டீஸ்பூன்
சில்லிபொடி-1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை-கொஞ்சம்
மிளகு தூள் -3 சிட்டிகை
எண்ணை  - ஒரு தேக்கரண்டி
தேங்காய் -1/4 கப்
கசகசா-4 ஸ்பூன்
 
எல்லாவற்றையும் சிறியதாக வெட்டிக்கொள்ளவும் ஒரு  
பாத்திரத்தில் எண்ணைய் சூடானதும் அதில்  வெங்காயம்,
போட்டு நன்கு வதக்கவும்நன்கு வதங்கியவுடன்  இஞ்சி 
பூண்டு போட்டு வதக்கவும் தக்காளி போட்டு வதக்கிய 
பின் மஷ்ரூம் போட்டு வதக்கவும் எண்ணைய் மேல் 
வந்தவுடன் எல்லா மசாலாவையும் போட்டு வதக்கவும் 
பின் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அதில் 
அரைத்தகசகசா விழுது போட்டு கொதிக்கவிடவும். 
கிரேவி பதம் வந்தவுடன் கொமல்லி தழை போட்டு 
இறக்கவும் சுவையான மஷ்ரூம் குருமா ரெடி

மலர்களும் மருந்தாகும்


 செம்பருத்திப்பூ
இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.


ரோஜாப்பூ
இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.

அகத்திப்பூ
அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.


முருங்கைப்பூ
ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது.


மல்லிகைப்பூ
கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.


நெல்லிப்பூ
உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.


மகிழம்பூ
மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலைப்பாரம் போன்ற நோய்கள் நீக்கிவிடும்.


இலுப்பைப் பூ
இலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.


ஆவாரம் பூ
ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.


தாழம்பூ
இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.


செம்பருத்திப்பூ
இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.


ரோஜாப்பூ
இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.


வேப்பம்பூ
சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.

கருஞ்செம்பை பூ
இந்தப் பூவையும், நல்லெண்ணையும் சேர்த்துக் காய்ச்சி தொடர்ந்து குளித்து வந்தால் தலையில் ஏற்பட்ட சீதனத்தை கண்டிக்கும். தலை பாரம், தலை வலி, கழுத்து நரம்புவலி போன்றவையும் நீங்கும்.

குங்குமப்பூ
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருவேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.

மாசி கருவாடு சம்பல்

தேவையான பொருட்கள்

மாசி கருவாடு – 1/4 கிலோ
வெங்காயம் – 200 கிராம்
பச்சைமிளகாய் – 4
எலுமிச்சம் பழம் – 1
உப்பு – தேவையான அளவு

செய்முறை
கருவாட்டை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை இடித்து கொள்ளவும். பிறகு வாணலியில் இவற்றை நன்கு வறுத்து, உப்பு, எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும். பிறகு கருவாட்டைச் சேர்த்து நன்கு வறுக்கவும். பின் இறக்கி சூடு ஆறியதும் இவற்றை பொடி செய்தால் மாசி கருவாடு சம்பல் ரெடி.

மிருதுவான குளியல் முறைகள் :

வறண்ட சருமத்திற்கு :
இந்த வறண்ட சருமம் உள்ளவங்களுக்கு எல்லாக் காலங்களும் பிரச்சனைதான். குளித்ததும் எண்ணை அல்லது மாய்ச்சுரைசர் உபயோகப்படுத்தியே ஆகவேண்டும். இனிமே அது பற்றிய கவலை வேண்டாம்! நீங்க குளிக்கிற தண்ணியில பேக்கிங் சோடா கலந்து குளிச்சுப் பாருங்க. பேக்கிங் சோடா ஒரு நல்ல மாய்ச்சுரைசர். அல்லது ரோஸ் ஆயில் ஒரு பத்து சொட்டுகள் கலந்து குளிக்கலாம். இந்த ரோஸ் ஆயில் நம் தோலிற்குத் தேவையான தண்ணீரைக் காயவிடாமல் ஈரப்பதத்துடனே வைத்திருக்க உதவுகிறது. குளித்ததும் நாம் போட்டுக் கொள்கிற வாசனைத் திரவியம் எல்லாம் தேவையில்லை. இதுவே ஒரு சென்ட்தானே.

எண்ணைப் பசை சருமத்திற்கு :
உங்க வீட்டுல ஆரஞ்சுப் பழம், திராட்சைப் பழம் வாங்கி வைச்சது லேசா அழுகிடுச்சா? தூக்கிப் போட்றாதீங்க! குளிக்கிற தண்ணில சிட்ரிக் ஆசிட் அதிகமா உள்ள பழங்களான எலுமிச்சை , ஆரஞ்சு, திராட்சை இவற்றைக் கலந்து குளிச்சுப் பாருங்க. இந்த சிட்ரிக் ஆசிட் பாக்டீரியாக்களைக் கொல்வதோடு, அழுக்கை அகற்றி, தோலில் உள்ள தேவைக்கு அதிகமான எண்ணையையும் உறிஞ்சிக் கொள்கிறது. நல்ல நறுமணமாகவும் இருக்கும். அதனால இனிமே எண்ணைப் பசை சருமத்துக்கு குட்பை சொல்லிட வேண்டியதுதானே!

இறந்த செல்களை அகற்ற :
ஒரு சின்ன பாக்கெட் பால் பௌடரை குளிக்கிற தண்ணீரில் கலந்து குளிக்கவும். பாலில் உள்ள லாக்டிக் ஆசிட் தோலில் உள்ள தேவையற்ற இறந்த செல்களை அகற்றி உங்கள் சருமத்தைக் குழந்தையின் தோலைப் போல மிருதுவாக மாற்றிவிடும்.

உடல் அசௌகரியங்களிலிருந்து விடுபட :
2 டீஸ்பூன் இஞ்சித்தூள் மற்றும் 2 டீஸ்பூன் வறுத்த கடுகு ஆகியவற்றைக் குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், பெண்களுக்கு பீரியட்ஸ் நேரங்களில் வரும் அசௌகரியங்களிலிருந்து விடுபட்டு ஃப்ரெஷ்ஷாக உணரலாம்.

சுகமான உறக்கத்திற்கு :
பல பேர் இதுக்காகத்தான் ரொம்பக் கஷ்டப்படறோம் இல்லையா? கவலைய விடுங்க. படுக்கறதுக்கு முன்னால உங்க பாத்டப்ல ஒரு டீஸ்பூன் லாவண்டர் ஆயிலை கலந்து குளிச்சுட்டுப் படுங்க. மனதை மயக்கும் லாவண்டரின் நறுமணம் உங்களை அழகா தாலாட்டித் தூங்க வைக்கும்.

நச்சுத்தன்மையை அகற்ற :
நாம் வெளியில் செல்லும்போது கண்ணுக்குத் தெரியாத நச்சுத்தன்மை வாய்ந்த எத்தனையோ தூசு கள்கள் நம் சருமத்தில் ஒட்டிக் கொள்கின்றன. இதனால் பல சரும வியாதிகள் வந்துவிடுகின்றன. இதைத் தவிர்க்க, நல்ல வெதுவெதுப்பான நீரில் 250 கிராம் கடல் உப்பு, 500 கிராம் பேக்கிங் சோடா ஆகியவற்றைக் கலந்து தண்ணீர் நன்கு குளிர்ச்சியாகும் வரை ஊற வைக்கவும். பிறகு குளிக்கவும். இந்தக் குளியல் உங்கள் சருமத்தை மிருதுவாக்குவதோடு எல்லாவிதமான நச்சுத் துகள்களையும் நம் தோலிலிருந்து நீக்கிவிடுகிறது. தினமும் இந்த மாதிரி குளிக்க முடியாவிட்டாலும் கிடைக்கும் விடுமுறை நாட்களில் குளிச்சு ரிலாக்ஸா இருங்க.

சித்த மருத்துவ குறிப்புகள்

இரத்த சோகையை போக்க:  பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.


வரட்டு இருமல் தனிய:  எலுமிச்சம் பழச்சாறு தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

இரத்தம் சுத்தமாக:  தினசரி இலந்தை பழம் சாப்பிடுங்கள். இலந்தை பழம் இரத்தத்தை சுத்திகரித்து சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு உண்டாகும். பசியை தூண்டும்

கருப்பை கோளாறு நீங்க:  அரசஇலை கொழுந்து 10 - 20 எடுத்து அரைத்து மோருடன் பருகி வர கருப்பையில் தங்கிய அழுக்குகள், அடைப்புகள், கட்டிகள், கிருமிகள், சதை வளர்ச்சி ஆகியவை தூய்மை அடையும்.

கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது:  தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

சுகப்பிரவசமாக:  ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

குழந்தைகளுக்கு:  குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

குழந்தைகளுக்கு கண் சூடுதனிய:  நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர கண்சூடு குணமாகும்.

 
உடல் சக்தி பெற:  இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.

வெட்டுக்காயம் குணமாக:   நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

காதில் சீழ்வடிதல் குணமாக:  வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.

நெஞ்சுவலி குணமாக:  அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்பழம் இருதயத்தை பலப்படுத்துகிறது.


இரத்த பேதியை குணப்படுத்த:  அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை ஆகியவற்றை சமஅளவு பொடிசெய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீத பேதி குணமாகும்.

பேதி குணமாக:  மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும்.


சீதபேதி குணமாக:  புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிடி சீதபேதி குணமாகும்.

மலச்சிக்கல் சரியாக:  அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

வயிற்று கடுப்பு நீங்க: அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.


வயிற்று நோய் குணமாக:  சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும்.


காது வலி குணமாக:  வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

சிறு நீர் எரிச்சல் குணமாக:  அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

நீரழிவு நோய் குணமாக:  மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 1 கரண்டி வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.

சர்க்கரை வியாதி நீங்க:  கோவை பழம் தினசரி 1 சாப்பிட்டு வர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.


மூட்டுவலி குணமாக:  அத்திப்பாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும்.


நரம்பு தளர்ச்சி நீங்க:  தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த:  வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400 மில்லி, அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி வீதம் ஆறு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

வயிற்றுவலி குணமாக:  குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.

 வயிற்று பூச்சிகள் ஒழிய:  வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு இராது.


 மலச்சிக்கல் தீர:  பேயன் வாழைப்பழம் தோலுடன் பில்லையாக நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்ணெய்யில் ஊற வைக்கவும் போத்தலை அன்றாடம் வெயிலில் வைக்கவும். 3 நாட்கள் ஊறிய பின் தினசரி 1 வில்லை எண்ணெய்யுடன் உட்கொள்ளவும். மலச்சிக்கல் தீரும்

இரத்தத்தை சுத்தப்படுத்த:  இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.


இரத்தம் உறைதல் குணமாக:  நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் உறைவதை தடுக்கலாம்.

சொறி சிரங்கு குணமாக:  கீழாநெல்லி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்க சொறி சிரங்கு குணமாகும்.


சளி மூக்கடைப்பு தீர:  கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.

தலைவலி குணமாக:  குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும்.

 இரத்த கொதிப்பு குணமாக:   அகத்தி கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு ஏற்படாது.


தொண்டை கரகரப்பு நீங்க:  பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.

 குடல்புண் குணமாக:  மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.


தொழுநோய் குணமாக:  கடுக்காய் வேர், பட்டை இலை, பூ உலர்த்தி இடித்து சலித்து காலை, மாலை 1/2 கரண்டி பசும்பாலில் கலந்து உண்டு வர தொழுநோய் குணமாகும்.

சதை போடுவது குறைக்க:  வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் பெருக்கம் குறையும். உடல் அழகு பெறும்.

வாந்தியை நிறுத்த:  துளசி சாறு, கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும்.

பித்த வாந்தியை நிறுத்த:  வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.







 
Related Posts Plugin for WordPress, Blogger...