என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

பட்டுத் துணிகளை பராமரிக்கும் வழிகள்

1. பட்டுத் துணிகளை சோப்பைப் போட்டு நீண்ட நேரம் ஊற வைக்கக்கூடாது. அலசும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்க வேண்டும். அடித்துத் துவைப்பதும் கூடாது.
2. பட்டுத் துணிகளை துவைத்து உலர்த்தும் போது வெயிலில் உலர்த்தாமல், நிழலில் காற்றில் படும்படி போடுவது நல்லது.
3. பட்டுப்புடவையை இஸ்திரி செய்யும் போது, அதன் மீது சுத்தமான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது புடவையைத் திருப்பி வைத்தோ மிதமான சூட்டில் இஸ்திரி செய்ய வேண்டும்.
4. பட்டுப் புடவைகளை வாஷிங் மிஷினில் போட்டுத் துவைப்பதை விடக் கைகளால் துவைப்பதே நல்லது.
5. பூச்சிகளை விரட்டும் நாப்தலின் உருண்டைகளைப் பட்டுப் புடவையின்  மேல் போட்டு வைக்க கூடாது. பட்டுப் புடவைகள் கெட்டுப் போவதற்கு அது ஒரு காரணமாக அமைகிறது.
6. ஒவ்வொரு முறை உடுத்திய பின்பும் பட்டுப் புடவையை துவைக்க வேண்டும் என்பதில்லை. உடுத்தியப் பின்பு காற்று படும் இடத்தில் புடவையை அவிழ்த்துப் போட்டு விட்டுப் பின்பு இஸ்திரி போட்டால் போதும்.
7. ஒரு படித் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கிளிசரினைக் கலந்து பட்டு துணிகளை அலசி உலர்த்தினால் சுருங்காமல், இழைகள் விலகாமல் இருக்கும்.
8. பட்டுப் புடவையில் எண்ணெய்க்கறை இருந்தால் சந்தனத்தைக் கறையின் மீது தடவி சிறிது நேரம் கழித்து அந்த இடத்தை மட்டும் நீரில் கழுவவும்.

மசாஜ் செய்வதன் நன்மைகள்

1.மசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் வேகம் பெறுகிறது. அப்பகுதிக்கு அதிக சத்துக்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்தத்தின் திறன் அதிகரித்து அதன் பயன் கூடுகிறது.

2. மென்மையான மசாஜ் நரம்புகளின் இறுக்கத்தைக் குறைத்து அவற்றுக்கு இதமளிக்கும். சற்று கடுமையான மசாஜ் தளர்ந்த நரம்புகளைத் தூண்டி அவற்றின் திறனை அதிகரிக்கும்.

3. கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதால் ஜீரண மண்டலம் தூண்டப்பட்டு கழிவுகள் நன்கு வெளியேறும். கல்லீரலின் ஆற்றல் அதிகரிக்கும்.

4.முறையான மசாஜ் இருதய சுமையைக் குறைக்கும்.

5. தசைகளின் இறுக்கத்தை மசாஜ் குறைத்து, தசை வலிகளை நீக்குகிறது. கடுமையான உழைப்பு தசைகளில் கொஞ்சம் கொஞ்சமாக லாக்டிக் அமிலத்தைச் சேர வைக்கிறது. தசைகளிலிருந்து அந்த லாக்டிக் அமிலத்தை மசாஜ் நீக்குகிறது. அதன் மூலம் ஒரு புத்துணர்வையும் சக்தியையும் அளிக்கிறது.

6. மசாஜால் தோலிலுள்ள நுண்துளைகள் திறக்கப்பட்டு வியர்வை மூலம் கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.

மசாஜ் செய்யும் முறை :
கை கால்களிலிருந்து மசாஜை துவங்கவேண்டும். அடுத்து நெஞ்சு, கீழ்வயிறு, பின்புறம், பின்புற இடுப்பு ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்யவேண்டும். பின்புறத்தில் மசாஜ் செய்ய துணியைப் பயன்படுத்தலாம். மசாஜøக்குப் பின் குளிக்கலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் நனைந்த துணியால் உடம்பைத் துடைக்கலாம்.
உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மசாஜ் தலைகீழாக செய்யப்பட வேண்டும். அதாவது தலையில் ஆரம்பித்து காலில் முடிக்கவேண்டும்.
நடை மற்றும் சைக்கிளிங் பயிற்சி குறிப்பிட்ட நாட்களுக்கு தொடர்ந்து செய்யவேண்டும். 

எப்போது மசாஜை தவிர்க்க வேண்டும்?
காய்ச்சலின் போது, கர்ப்பகாலத்தில் கூடாது. வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சனை, கட்டிகள் இருந்தால் கீழ்வயிற்றில் மசாஜ் செய்யக்கூடாது. தோல்வியாதிகள் உள்ளவருக்கு மசாஜ் ஏற்றதல்ல.

நடுத்தர வயது பெண்களின் அழகு பராமரிப்புக்கு.

 
ஒரு பெண், 35 வயதில் அழகின் முழுமையை 
அடைந்து விடுகின்றனர். 35 வயதுக்கு பின்னர்,
சருமபாதுகாப்பு அவசியம் என்கின்றனர் 
அழகுக்கலை நிபுணர்கள்.ஏனென்றால் 
சருமத்தின் செயல்பாடுகள்மெதுவாக குறைய
ஆரம்பிக்கின்றன.இதனால் தோலில் படை, 
தேமல் போன்ற சரும சிக்கல்கள் தோன்றும். 
மேலும் சருமத்தின் மினுமினுப்பும், பளபளப்பும் 
குறைய ஆரம்பிக்கும். கண்களைச் 
சுற்றி கருப்பாக தோன்ற ஆரம்பிக்கும்.சருமத்தில் வருவது
போல்கூந்தலிலும் மாற்றங்கள் ஏற்படும். முடி உதிர்தல், 
முடி முறிதல்,பொடுகுத் தொல்லை, கூந்தல் மினுமினுப்பு 
மற்றும் ஜொலிப்பு குறைதல் ஆகியவை ஏற்படும். 35 
வயது கடந்தவர்கள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை 
பேஷ’யல் செய்து கொள்வது நல்லது.சிலருக்கு சரும 
சுருக்கங்கள் இருக்கும். இதனால் இளமை குறைய
ஆரம்பிக்கும். இதற்கு ''தெர்மோ ஹெர்பல் மாஸ்க்''
போடலாம். இதனால் சருமம் இறுக்கமாகி சுருக்கம் 
நீங்கும். வயதை குறைத்துக்காட்ட நிறைய பேஷ’யல் 
உள்ளது. சருமத்துக்கு தகுந்த பேஷ’யலை 
தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் இளமை உங்கள் 
வசமாகிவிடும். வயதை சரியாக வெளிக்காட்டுவதில் 
முக்கிய பங்கு வகிப்பது கண்கள்தான். கண்களின் 
ஓரத்தில் கீழ்பகுதியில்கேரட் சாற்றில் நனைத்த பஞ்சை, 
ஒத்தி எடுத்தால் சுருக்கம் மறையும். சிலருக்கு 
கண்களின் கீழ் பகுதியில் நீர்க்கட்டு போன்றுவீங்கி இருக்கும். 
இதற்கு காரணம் கொலஸ்ட்ராலே... இதை நீக்க முக்கிய 
மசாஜ் உள்ளது. சிறந்த பியூட்டி பார்லருக்கு சென்று 
மசாஜ் செய்து அதை நீக்கிவிடுவது நல்லது. 35வயதை 
கடக்கும்போது, ஹார்மோன்களில் சில மாற்றங்கள் நிகழும்.
இதனால் கழுத்து பகுதியில் கருப்பு நிறத்தில்திட்டுக்கள் 
போன்றுபரவும். குறிப்பாக பல பெண்கள் தங்களுடைய 
வசதியை... செல்வாக்கை வெளியில் காட்டுவதற்காக
தங்க சங்கிலியை தடிமனாக அணிவார்கள். தங்க 
செயினின் உராய்வால் கறுப்பு நிறம் போன்று ஏற்படும்.
இதற்கு பயறு தூள், எலுமிச்சை சாறு, சர்க்கரை 
ஆகியவற்றை கலந்த கலவையை அந்த இடத்தில் பூசி 
மசாஜ் செய்து கழுவினால் கறுப்பு நிறம் நீங்கும்.
குறிப்பிட்ட வயதுக்குபிறகு சருமத்தில் உள்ள சுரப்பிகள் 
செயல்பாடு குறையும். மினுமினுப்பு குறையும்.இதனால் 
வறட்சி தோன்றி முதுமை எட்டிப் பார்க்கும். 35 வயதை
கடப்பதால் ரத்த அழுத்தம்,நீரிழிவு ஆகியவை ஏற்படுவதால் 
மருந்து சாப்பிடுவோம். இதில் உள்ள ரசாயனங்கள் உடலில்
கலப்பதாலும் வறட்சி ஏற்படும். வாரத்திற்கு ஒருமுறை 
எண்ணை தேய்த்து குளித்து வந்தால் வறட்சியை 
கட்டுப்படுத்தும். படை மற்றும் கரும்புள்ளிகள் இருந்தால்
பியூட்டி பார்லருக்கு சென்று மாற்றி சருமத்தை 
பாதுகாக்கலாம்.வயது செல்லச்செல்ல கால்களின் 
மென்மை குறைந்து கரடுமுரடு தன்மைக்கு மாறி வரும். 
இதற்கு இரவில் தூங்குவதற்கு முன்பாகலேசான சுடுநீரில்
எலுமிச்சை சாறு கலந்து கால்களை மூழ்க வைக்கவும். 
கால்மணி நேரம் கழித்து கால்களை எடுத்து 
பாதங்களை தேய்த்து கழுவினால்மென்மையாகி அழகாக
மாறும். மேலும் உடம்பும் புத்துணர்ச்சி பெறும். அதேபோல்,
கைகளில் சருமம் வறண்டு... நரம்புகள் வெளியே தெரிந்தால் 
இளமையாக தோற்றமளிக்காது. நகம் கூட நிறம்மாறி 
காணப்படும்.இதற்கு தினமும் காலை, இரவு வேளைகளில்
ஆன்டி ஏஜிங் க்ரீம் அல்லது பேபி லோஷன்களை 
பயன்படுத்தி மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் 
அதிகரித்துகைகள் இளமையாகும்35 வயதில் 
தலைமுடிக்கு டை போடுவது அவ்வளவு நல்லதல்ல. 
இப்படி 35 வயதிலேயே கூந்தலுக்கு டை போடும் பழக்கம் 
உள்ளவர்கள், கிட்டத்தட்ட5 வருடங்கள் கழித்து டை போட 
மாட்டார்கள். அதுமட்டுமின்றி, தலைமுடியும் செம்பட்டை 
நிறத்துக்கு மாறிவிடும். 50 வயதுவரை ஹென்னா 
பயன்படுத்தலாம். அப்படியே டை போடும் அவசியம் 
என்றால், டார்க் பிரவுன், பர்கன்டி ஷேட் ஆகிய நிறத்தை
பயன்படுத்தலாம். ஹேர் டையில்
இருக்கும் அமோனியா தலைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். 
ஆதலால்அமோனியா இல்லாத ஹேர்டையை பயன்படுத்துவது
நல்லது. அமோனியா இல்லாத ஹேர் டை தற்போது 
மார்க்கெட்டில் அதிகமாக கிடைக்கின்றன.ஹேர் டை தொடர்ந்து 
பயன்படுத்துபவர்களுக்கு படை தோன்றும் வாய்ப்பு அதிகம். 
ஹேர் டை பயன்படுத்துபவர்கள் மாதம் ஒருமுறை'ஹேர் ஸ்பா'
செய்து கொள்ளவும்.'மாய்சரேஷர்'', காம்பெக்ட், பவுண்டேஷன் 
ஆகிய மூன்றும் கலந்த கிரீம் பயன்படுத்துவது நல்லது.
கண்களுக்கு காஜல் பென்சிலை பயன்படுத்திய பிறகு, 
பீலிகளுக்கு கிரீம் நிறத்தில் ஐ ஷேடோ கொடுக்க வேண்டும்.
உதடுகளுக்கு இளநிறத்தில் லிப்ஸ்டிக் போட வேண்டும். 
இயற்கையாக இருக்கும் நிறம் கெட்டுப் போகாமல் இருக்க
'லிப் பாம்'' பூசிவிட்டு லிப்ஸ்டிக் போடுவது நல்லது. 



வட்டிலப்பம்



தேவையான பொருட்கள்
முட்டை - 4
கருப்பட்டி- 400 கிராம் 
கட்டியான தேங்காய் பால் - 3/4 கப்
ஜெலட்டின் -1 /2 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - 1 /2 தேக்கரண்டி அல்லது   ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி
கஜி - தேவையான அளவு
பிளம்ஸ் தேவையான அளவு   

முட்டை,தேங்காய் பால், இடித்த கருப்பட்டியை போட்டு முட்டை அடிப்பதில் நன்கு அடிக்கவும் பின் அதனை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். குக்கரில் 4- 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதன் மேல் {இடியாப்பம் அவிப்பது போல் இருக்க வேண்டும்} இந்த பாத்திரத்தை வைத்து முட்டை கலவையில் வெனிலா எசன்ஸ் அல்லது ஏலப்பொடி, கஜி தூவி நன்கு இறுக்கமாக மூட வேண்டும். 15 - 20 நிமிடம் வேக விட்டு இறக்கவும். சுவையான வட்டிலப்பம்ரெடி
Related Posts Plugin for WordPress, Blogger...