என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

பெண்களின் முகம் மிருதுவாகவும் அழகாகவும் இருக்க…

ஆரஞ்சுப் பழச்சாற்றில் ஒரு சில துளிகளை ஈரமான பஞ்சின் மேல் பிழிந்து அந்தப் பஞ்சை முகத்தில் தடவிக் கொண்டால் பெண்களின் முகம் மிருதுவாகவும் அழகாகவும் இருக்கும். அடிக்கடி இப்படிச் செய்துவர வேண்டும்.

சிறிது கடலைமாவைப் பால் ஏட்டுடன் குழைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதைத் தினமும் இரவு படுக்கப் போகும் முன் முகத்தில் தடவித் தேய்த்து வாருங்கள். இப்படித் தினமும் செய்வதால் நாளடைவில் பருக்கள் மறைந்துவிடும். கறுப்புப் புள்ளிகள் மறைந்துவிடும்
.
பெண்கள் தங்கள் அழகை அதிகமாக்கிக் கொள்ள வெள்ளரிக்காயை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். வெள்ளரிக்காய்ச் சாறை உடம்பில் தேய்த்துக் கொண்டால் உடல் குளுமையாக இருக்கும். தோல் அழகாக இருக்கும்.

பெண்கள் தினமும் வெள்ளரிக்காய்ச் சாற்றை உடம்பில் தேய்த்துக் கொண்டு அது உலர்ந்ததும் குளித்தால் தோல் மிருதுவாகும். கொஞ்சம் சிவப்பாக மாறும்.
ஆப்பிளை நன்றாக மாவுபோல அரைத்து அதைப் பெண்கள் தங்கள் முகத்தில் லேசாகத் தடவி விட்டுக்கொண்டு கால் மணி நேரம் பொறுத்து முகத்தைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். இப்படிச் சில நாள்களுக்குச் செய்து வந்தால் போதும் முகம் பார்ப்பதற்குப் பளபளப்பாக இருக்கும். அழகாக இருக்கும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...