என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

அலர்ஜி தரும் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி?

அறிகுறிகள் 


1 அலர்ஜி ஏற்பட்டால் குடல், சுவாசம், தோல், ரத்தசெல்கள்
ஆகியவற்றைப் பாதிக்கும். நோய்த்தடுப்பு மண்டலமும்
அலர்ஜியால் பாதிப்புக்குள்ளாகலாம்.

2 சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில்
அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம்.

3 நீங்கள்  உண்ட உணவுப்பொருட்களின் விளைவு , உங்கள்
சரும தோலில் பரிசோதிக்கப்படும்.

4 உணவை வாயில் வைத்தவுடன் கூசும். முகச்சுளிப்பு
கூட ஏற்படும்.

5 குரல்வளையில் ஒருவித மாற்றங்களை உணரலாம்.
வாந்தி ஏற்படும்.

6 சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில்ஒத்துக்கொள்ளாமல் வேலையைக் காட்ட ஆரம்பித்து
விடும். சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்
விளைவை உண்டாக்கும்.

7 சிலருக்கு நினைவு இழப்பும் நிகழ்வதுண்டு.
8 வேர்க்கடலை, பட்டாணிக்கடலை போன்ற பருப்பு
வகைகள்தான் அதிக அலர்ஜியைத் தரக்கூடியவை. இவை இம்யுனோகுளோபின் என்ற ரசாயனத்தைச் சுரந்து
நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்யும்

9 அடிவயிற்று வலி வரலாம். மூச்சுவிடுவதில் தகராறு, பெரு
மூச்சு விடுதல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்

10 உணவு ஒவ்வாமை, மருந்துகள், அலர்ஜி, ஆஸ்துமா, சொறி,
அரிப்பு, சிறு கொப்பளங்கள், வயிற்றுப்பிரட்டல், பேதி, எக்ஸிமா,
ஜலதோஷம், போன்றவையை உண்டாக்கும்.

11 முட்டை, பால், வேர்க்கடலை, சோயா மொச்சை, கோதுமை,
முந்திரிக் கொட்டை, பாதாம்பருப்பு, மீன், நத்தை வகை
போன்ற9 வகை உணவுப் பொருட்கள் 90 சதவீதம் அலர்ஜி
ஏற்படுத்தும் உணவுகளாக நிபுணர்கள் பட்டியலிட்டு
உள்ளார்கள். இவற்றில்வேர்க்கடலை, மீன், நத்தை,
கொட்டை உணவு வகைகளில் அலர்ஜி ஏற்பட்டால் அது
வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும். மற்ற உணவுகள்
தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

1 comment:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...