என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

பால் அல்வா

 

தேவையானப்பொருட்கள்:

பால் - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 1/2 கப்
ரவா - 1/4 கப்

செய்முறை:

மேற்கூறிய அனைத்தையும் ஒரு அடி கனமான
வாணலியில்போட்டு, மிதமான தீயில் வைத்து, கெட்டியாகும்
வரைக் கிளறிக் கொண்டிருக்கவும். அல்வா கெட்டியாகி
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது, இறக்கி விடவும்.
ஒரு கிண்ணத்தில் சிறிது நெய் தடவி அதில் அல்வாவைக்
கொட்டி வைக்கவும்.இதற்கு வாசனைப் பொருட்கள் எதுவும்
சேர்க்க தேவையில்லை.பால் கோவா போன்ற சுவையுடன்
இருக்கும். விருப்பப்பட்டால்,சிறிது பாதாம் அல்லது பிஸ்தாப்
பருப்பை பொடியாக நறுக்கித் தூவி பரிமாறலாம்.


பொட்டுக்கடலை உருண்டை

தேவையானப்பொருட்கள்:

பொட்டுக்கடலை - 3 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10 அல்லது 15

செய்முறை:

பொட்டுக்கடலையையும், சர்க்கரையையும் தனித்தனியாக 
மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்து, சலித்து எடுக்கவும்.
பொட்டுக்கடலை மாவை அளந்து ஒரு பாத்திரத்தில் போடவும். 
பொடித்த சர்க்கரையும் அதே அளவு இருக்க வேண்டும்.
சர்க்கரைப்பொடி கூடவோ, குறையவோ இருந்தால் 
அதற்கேற்றாவாறு சரி செய்து கொள்ளவும். மாவையும், 
சர்க்கரைப்பொடியையும் ஒன்றாகக் கலக்கவும்.
அத்துடன் ஏலக்காய் தூளையும் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது நெய்யை விட்டு சூடானதும், அதில் 
முந்திரிப்பருப்பைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, மாவில் 
போட்டு மீண்டும் நன்றாகக் கலக்கவும்.ஒரு தட்டில்,
நாலைந்துக் கரண்டி பொட்டுக்கடலைமாவு கலவையைப் 
போட்டு, அதில் சிறிது சூடான நெய்யை விட்டுக் கிளறி, 
அதே சூட்டுடன் உருண்டைகளாகப் பிடிக்கவும். இதே போல் 
எல்லா மாவையும் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு,
சூடான நெய் சேர்த்து உருண்டைகளைப் பிடித்தெடுக்கவும்.

முகத்திற்கு ஏற்ற மாதிரி புருவத்தை மாற்ற சில வழிகள்


முகத்துக்கு ஏற்ப, கண்களுக்கு ஏற்ப புருவத்தை ட்ரிம் செய்து 
கொள்ளுங்கள். 


குறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி 
அதிகம் இருக்கட்டும்.


நீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக
இடைவெளி தேவையில்லை.


ஓவல் முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன்
இருந்தால் வசீகரமாக இருக்கும்.


அகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள்.


புருவங்கள் நெருங்கி இருந்தால் முகம் குறுகி, கண்கள்
சிறிதாக தெரியும்.


சதுர முகம் உள்ளவர்கள் பெரிய வளைவாக பிறை வடிவில் 
மாற்றிக் கொள்ளுங்கள். முகம் ஓவல் வடிவமாகத் தெரியும்.


புருவத்தின் முடிவு மிகவும் கீழ் நோக்கி இருந்தால் வயதான 
தோற்றம் தரும். மாற்றிக்கொள்ளுங்கள்.


கருப்பு நிறம், அழகிய முகம் உள்ளவர்கள் புருவத்தை சரி 
செய்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.


வட்ட முகம் உள்ளவர்கள் புருவம் கீழ் நோக்கி வருவதுபோல்
அமைத்துக் கொள்ளவும்.


நீண்ட, ஓவல் முகம் உள்ளவர்கள் சிறிய புருவத்தை அமையுங்கள்.

நிலக்கடலை குக்கீஸ்

தேவையான பொருட்கள்
நிலக்கடலை                -500 கிராம்
ஐசிங் சீணி                    -500 கிராம்
கோதுமை மா              -500 கிராம்
மரக்கறி எண்ணெய்  -2 தேநீர் கப்
வெனிலா எசன்ஸ்     -2 தேக்கரண்டி

செய்முறை
நிலக்கடலை தோலை உரித்து அதனை சுத்தம் செய்து
மிச்சியில் போட்டு பொவுடராக்கிக் கொள்கபின் அதில்
சலித்த ஐசிங் சீணி,கோதுமை மா,வெனிலா எசன்ஸ் போட்டு
கிளறிக்கொள்க பின்னர்அதில்மரக்கறி எண்ணெய்யை சிறிது,
சிறிதாக போட்டு பினைந்துக்கொள்க பின்னர் உங்களுக்கு பிடித்த
வடிவில் வெட்டி அதனை பேக்செய்தால் நிலக்கடலை குக்கீஸ் தயார்.

இளம் வயதில் தோல் சுருக்கம்

இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம்
ஏற்படுகின்றது. இதற்குக் காரணம் "பாஸ்ட் புட் உணவு 
வகைகளை இவர்கள் அதிகம் உண்பதுதான் எனக் 
கூறப்படுகின்றது. இது கட்டாயமாகத் தவிர்க்கப்பட 
வேண்டியது அவசியம். இளமையிலேயே வயதானவர் 
போல் தோற்றத்தை தருகிறது. உணவு விடயத்தில் சிறிது 
கவனம் செலுத்துதல் அவசியம்.

வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேக

வைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு 
வந்தால் உடல் குளுமையாக இருக்கும்.

கறிவேப்பிலையிலுள்ள விட்டமின் ஏ இளமையான 

சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ள பெரிதும் உதவும். 
அடிக்கடி துவையல் செய்து சாப்பிடலாம்  இவை தோல் 
சுருக்கத்தை தவிர்க்கிறது.
.
காய்கறி பழ வகைகளைத் தவறாமல் சாப்பிடுங்கள்.
இயற்கையான காய்கறி, பழ வகைகளில் உள்ள விற்றமின்
மற்றும் சத்துக்கள் தோலில் சுருக்கம் ஏற்படுவதைத்
விர்க்கக் கூடியவை.

நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக 
எடுத்து  உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை 
மாவினால் தேய்த்துக் கழுவுங்கள். இப்படி அடிக்கடி செய்தால் 
தோல் சுருக்கம் வருவதை தவிர்த்துக்கொள்ளலாம்


அலர்ஜி தரும் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி?

அறிகுறிகள் 


1 அலர்ஜி ஏற்பட்டால் குடல், சுவாசம், தோல், ரத்தசெல்கள்
ஆகியவற்றைப் பாதிக்கும். நோய்த்தடுப்பு மண்டலமும்
அலர்ஜியால் பாதிப்புக்குள்ளாகலாம்.

2 சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில்
அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம்.

3 நீங்கள்  உண்ட உணவுப்பொருட்களின் விளைவு , உங்கள்
சரும தோலில் பரிசோதிக்கப்படும்.

4 உணவை வாயில் வைத்தவுடன் கூசும். முகச்சுளிப்பு
கூட ஏற்படும்.

5 குரல்வளையில் ஒருவித மாற்றங்களை உணரலாம்.
வாந்தி ஏற்படும்.

6 சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில்ஒத்துக்கொள்ளாமல் வேலையைக் காட்ட ஆரம்பித்து
விடும். சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்
விளைவை உண்டாக்கும்.

7 சிலருக்கு நினைவு இழப்பும் நிகழ்வதுண்டு.
8 வேர்க்கடலை, பட்டாணிக்கடலை போன்ற பருப்பு
வகைகள்தான் அதிக அலர்ஜியைத் தரக்கூடியவை. இவை இம்யுனோகுளோபின் என்ற ரசாயனத்தைச் சுரந்து
நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்யும்

9 அடிவயிற்று வலி வரலாம். மூச்சுவிடுவதில் தகராறு, பெரு
மூச்சு விடுதல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்

10 உணவு ஒவ்வாமை, மருந்துகள், அலர்ஜி, ஆஸ்துமா, சொறி,
அரிப்பு, சிறு கொப்பளங்கள், வயிற்றுப்பிரட்டல், பேதி, எக்ஸிமா,
ஜலதோஷம், போன்றவையை உண்டாக்கும்.

11 முட்டை, பால், வேர்க்கடலை, சோயா மொச்சை, கோதுமை,
முந்திரிக் கொட்டை, பாதாம்பருப்பு, மீன், நத்தை வகை
போன்ற9 வகை உணவுப் பொருட்கள் 90 சதவீதம் அலர்ஜி
ஏற்படுத்தும் உணவுகளாக நிபுணர்கள் பட்டியலிட்டு
உள்ளார்கள். இவற்றில்வேர்க்கடலை, மீன், நத்தை,
கொட்டை உணவு வகைகளில் அலர்ஜி ஏற்பட்டால் அது
வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும். மற்ற உணவுகள்
தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

மூக்கை பராமரிக்க சில ஆலோசனைகள்

எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை 
மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும்.

மூக்கின் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் 
மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் 
செய்ய வேண்டும். .

ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும்
வரை ஆவி பிடிக்க வேண்டும்.  பிறகு கண்ணாடியைப் 
பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் 
ஹெட் ரிமூவரால் மெதுவாக நீக்கலாம்  வெளியே வேரோடு 
வரும் பிளாக் ஹெட்ஸை டிஷ்யூவால் துடைத்து 
எடுத்துவிடுங்கள்.  இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை 
நன்றாக கழுவினால் போதும். இந்த ட்ரீட்மெண்ட் செய்யும் 
முன்பு முகத்திற்கு ஸ்க்ரப் போடுவதென்றாலும் போடலாம்.
ஆனால் ட்ரீட்மெண்ட் செய்த பிறகு ஸ்க்ரப்பிங் கூடாது.

ரெகுலராக வாரம் ஒரு முறை முகத்தினை ஸ்க்ரப் செய்யும்
போது மூக்கு பகுதியில், பக்கவாட்டில் மசாஜ் செய்தாலே 
ஒயிட் ஹெட்ஸ் வராது.

 மூக்கின் உள்ளே ஒரு சிலருக்கு அதிகமாக முடிகள் இருந்து, 
வெளியில் லேசாக எட்டிப் பார்க்கும். இதுவும் அழகை 
கெடுக்கிற விஷயம்தான்.  புருவத்தை ட்ரிம் செய்ய உதவும்
கத்தரிக்கோலை கொண்டு லேசாக ட்ரிம் செய்துவிடலாம். 
இதற்கென்று பிரத்யேகமான கத்தரிக்கோலும் கடைகளில் 
கிடைக்கும்.

மூக்கிற்கு மேக்கப் போடும்போது சப்பையான மூக்கு 
உள்ளவர்கள் முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் பவுடர் 
அப்ளை செய்த பிறகு, முக நிறத்தைவிட கொஞ்சம் ஒரு 
ஷேடு குறைவான டார்க் நிறத்தில் உள்ள ரூஜை மூக்கின் 
இரு ஓரங்களிலும், அதாவது இரு புருவத்தின் 
ஆரம்பங்களிலிருந்தும் மூக்கு அடிவரை, நேராக கோடு 
போடுவது தடவ வேண்டும். இப்போது நடுபக்கம் மட்டும் 
லைட்டாகவும் ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் 
இருக்கும். சப்பை மூக்கு என்று பார்த்தால் தெரியாது.

சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள் ஒரு பக்கம் மட்டும் இதே போல் டார்க் 
கலரை அப்ளை செய்தால் நன்றாக இருக்கும். பொதுவாக 
இந்த வகை அப்ளிகேஷனை நார்மலான மூக்கு ஷேப் 
உள்ளவர்களும் செய்து கொள்ளலாம். மூக்கு அழகாக தெரியும்.

அழகுக் குறிப்புகள்


முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை
கரு, சர்க்கரை,சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து
பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும்.காய்ந்தவுடன்
மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில்
வரும்.

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து,
பத்து நிமிடம்கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
தினம் இவ்வாறு செய்து வந்தால்
முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி
முகத்தில் தடவினால்சருமத்தில் உள்ள எண்ணெய்ப்
பசை குறையும்.

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக்
கழுவினால் வறண்டசருமம் புதுப் பொலிவடையும்.

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து
உடம்பிற்கு தடவி,பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல்
பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில்
தடவி, 20 நிமிடம்கழித்து கழுவினால், சருமம் மிகவும்
மிருதுவாகும்.

இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி,
அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்
பருப்பு மாவை கலந்து முகத்தில்தடவிக் கொண்டு பத்து
நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம்
சுத்தமாகும். பருக்களினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி
எலுமிச்சை சாற்றைதடவ வேண்டும். தினமும் இவ்வாறு
செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம்அழகு பெறும்.

பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும்
காலையில் ஒரு டம்ளர்வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு
மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்துஅதனுடன் அரை
ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது
நேரம் கழித்துநகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும்,
அழகாகவும் வெட்ட இயலும்.

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி
முட்டையில் கொஞ்சம்சர்க்கரையை கலந்து தலையில்
லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்றவேண்டும்.
இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில்
எலுமிச்சை சாற்றைப் பிழிந்து, தலையில் தேய்த்துக்
குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி
இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.
இதில் சிறிது எடுத்து, பாலில்குழைத்து, முகத்தில் பூசி, 20
நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம்வேர்க்குரு வராமல்,
வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன்
உப்பைப் போட்டு,கண்களை கழுவினால் கண்கள்
பிரகாசமாக இருக்கும்.

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால்,
தொடர்ந்துஅந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து
சோப்பு போட்டு குளிக்கவேண்டும் நாளடைவில் கறுப்பு
நிறம் போய் விடும். தோல் வறண்டும்,சுருக்கமும் இருந்தால்
ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து,
சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ்..



சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், 
நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். 
அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால்,
நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட 
வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது 
நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.

தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து,

அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், 
விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள்

உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் 
ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.

நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு 

பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், 
நகங்கள் உறுதியாகும்.

ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை 

விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ 
வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் 
நன்றாக வளரும்.

நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் 

கல்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். 
எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து 
நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட 
வேண்டும்.

நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவது 

நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அவற்றை 
அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நெயில் 
பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து 
பயன்படுத்துவது நல்லது.

மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை

வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், 
நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் 
பளபளப்பாகும்.

நெயில் பாலீஷ் போடும் போது, பிரஷ் ஷினால், நகத்தின் 

அடிப்பகுதியில் நுனி வரை ஒரே தடவையாக போட 
வேண்டும். அப்போது தான் அவை பளபளப்பாக எவ்வித 
திட்டுக்களும் இன்றி அழகாக காட்சியளிக்கும்.

கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை 

நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், 
நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் 
எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை 
மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். 
மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

இறால் வடை

தேவையான பொருள்கள் :
இறால்                      - 100 கிராம்
வெங்காயம்             - 250 கிராம்
உடைத்த கடலை    - ஓரு கப்
கடலை எண்ணெய் - 400 கிராம்
பச்சை மிளகாய்       - 5
கறிவேப்பிலை        - 1 மேஜைக்கரண்டி
பூண்டு                      - 7 பல்
இஞ்சி                       - சிறிய துண்டு
மஞ்சள் பொடி         - 1/4 தேக்கரண்டி
உப்பு                         -  தேவையான அளவு

செய்முறை :

இறாலை உரித்துக் கழுவிச் சுத்தம் செய்து அதில் 
உப்பையும், மஞ்சள் பொடியையும் கலந்து 1 கோப்பை
தண்ணீரில் வேக வைக்கவும். பின்பு இறாலை,உடைத்த கடலையையும் தனித்தனியாக நன்றாக அரைத்துக் 
கொள்ளவும்.  பின் வெங்காயத்தையும், பச்சை 
மிளகாயையும் பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு, 
சோம்பு ஆகியவற்றை நசுக்கிக் கொள்ளவும்.அடுப்பில் 
வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு, நறுக்கி 
வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கி 
வைத்துள்ள மசாலா ஆகியவற்றை அதில் போட்டு 
சிவக்கும் வரை வதக்கவும். வதக்கிய வெங்காயம், 
அரைத்து வைத்துள்ள இறால், உடைத்த கடலை, 
மீதமுள்ள உப்பு, மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாகப் 
பிசையவும். அடுப்பில் வாணலியை வைத்து, 
எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பிசைந்து 
வைத்துள்ளதை சிறு வடைகளாகத் தட்டி 
எண்ணெயில் போட்டு சிவக்கும் வரை 
பொரித்தெடுக்கவும் இப்போது இறால் வடை தயார்.
Related Posts Plugin for WordPress, Blogger...