என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

உதடு

சில ஆண்கள் சிகெரட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும். (தொடர்ந்து சிகெரட் குடிப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பயனில்லை)

தலைமுடிக்கான ஆயில் மசாஜ் செய்வது எப்படி

முதலில் தலையை நன்கு சீவிக் கொள்ளவும். பிறகு தலையின் மேல் பகுதியில் இருந்து வகுடு இருக்கும் பகுதி முழுவதும் எண்ணெயை பஞ்சால் தடவவும்.
ஒவ்வொரு சிறு சிறு பகுதியாக பிரித்து எடுத்து பஞ்சால் எண்ணெயை தொட்டு தலையின் எல்லா பகுதியிலும் படும்படி தடவவும்.
எண்ணெய் முழுவதும் தடவிய பிறகு இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு தலை முழுவதும் anticlockwise-ல் சுற்றவும். அப்போது கையின் விரல்களால் மட்டும் தேய்க்கவும்.
இரண்டு கையின் கட்டைவிரலை தலையின் மேல் பகுதியில் வைத்து எதிர் எதிர் திசையில் வைத்து நகர்த்திக் கொண்டே வரவும்( ஒரு விரல் மேலேயும் மற்றொரு கட்டை விரலை கீழேயும் வைத்து நகர்த்தி மேலிருந்து கீழ் வரை நகர்த்திக் கொண்டே வரவும்).
இதே போல் தலையின் எல்லா பகுதியிலும் செய்யவும். செய்த பிறகு மீண்டும் இரண்டு கையை தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றவும்.
முதலில் தலையின் மேல் புறத்தில், ஒரு கையால் சிறிதளவு முடியை எடுத்து ஒரு விரலில் இருமுறை சுற்றிக் கொண்டு(படத்தில் உள்ளபடி) தலையில் வைத்து சுற்றி அழுத்தி தேய்க்கவும்(clockwise direction). நன்கு உள்ளங்கையை வைத்து தேய்க்கவும். இதே போல் தலை முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக முடியை எடுத்துத் தேய்க்கவும். பிறகு மீண்டும் இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றவும்.
பிறகு தலையில் மேல் பகுதியில் இருந்து இரண்டு கைகளால் கொஞ்சம் கொஞ்சமாக முடியை எடுத்து விரலில் சுற்றி கொண்டு அப்படியே மெதுவாக இழுத்து ஃப்ரஷர்(pressure) கொடுக்கவும். இதே போல் தலை முழுவதும் எல்லா முடியையும் எடுத்து செய்யவும். பிறகு மீண்டும் இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றவும்.
இரண்டு கையையும் ஒன்றாக சேர்த்து(படத்தில் உள்ளவாறு) தலை முழுவதும் விரல் மட்டும் படும்படி அடிக்கவும்.
தலையின் முன்பக்கத்தில் பத்து விரல்களையும் வைத்து விரல்களால் தடவிக் கொண்டே வரவும்.
இதைப் போல் தடவி காது அருகே வந்ததும் அழுத்தவும்(படத்தில் இருப்பது போல்). மீண்டும் இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றவும்.
தலையின் மேல் பகுதியில் ஒரு கையையும் மற்றொரு கையை தலையின் அடிப்பகுதியில் வைத்து அழுத்தி விடவும். அப்படியே எல்லா இடங்களிலும் அழுத்தவும். பிறகு மீண்டும் இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றவும்.
தலையின் முடியை இரண்டு பாகங்களாக பிரித்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாகத்தின் உள்ள முடியை மடித்து சுற்றி anticlockwise- ல் தேய்க்கவும். பிறகு மற்றொரு பாகத்தை அதே போல் anticlockwise-ல் தேய்க்கவும். பிறகு எல்லா முடியையும் ஒன்றாக சேர்த்து சுற்றி anticlockwise-ல் தேய்க்கவும். இறுதியில் இரண்டு கையையும் தலையின் அடிவழியாக விட்டு anticlockwise-ல் சுற்றிய பிறகு தலையை சீவி கொண்டைப் போட்டுக் கொள்ளவும். (ஒவ்வொரு முறையும் தலைமுடியை சீப்பு கொண்டு நன்கு சீவிக் கொள்ளவும்.)
குறைந்தது அரைமணி நேரமாவது தலையில் எண்ணெய் ஊறி இருக்க வேண்டும். அதன் பிறகு ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து தலையை அலசி விடவும்.

முகப்பரு குணமாக

சங்கை பன்னீரில் அரைத்து புசலாம்

தேமல் மறைய

கருஞ்சீரகத்தை எண்ணை விட்டு கருக வருத்து அதனை காடி விட்டு அரைத்து புசி வர தேமல் மறையும்

தழும்பு மறைய

வேப்பம்பட்டை, கியாழத்தை கலக்கி அதில் வரும் நுரையை தடவி வந்தால் தழும்பு விரைவில் மறையும்.

சொரி சிரங்கிற்கு

குப்பை மேனி இலையும் உப்பையும் சேர்த்து அரைத்து மேல்புசாக புசி வந்தால் உடனடியாக குணமாகும்.

தொப்பையை குறைக்க

அன்னாச்சி பழம்
ஓமம்
தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.                                                                                                                                                                         இஞ்சி
தேன்
இஞ்சிசாறு ஒரு டம்ளர் மற்றும் தேன் இரண்டு டம்பளர் இதனை இரண்டையும் நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்புன் மற்றும் மாலை நேரம் ஒரு ஸ்புன் குடித்து வந்தால் இவ்வாறு 40 நாட்கள் செய்ய வேண்டும் பிறகு உங்களுக்கே தெரியும் ஒரு மாற்றம்.

பற்கள் பளிச்சிட

மஞ்சள் நிறத்தை போக்க எலுமிச்சம் பழ சாற்றுடன் உப்பும் கலந்து பற்களை தேய்த்தால் மஞ்சள் நீங்கி உங்கள் பற்கள் பளிச்சிடும்.

தூக்கம்:

சப்போட்டா பழம் தினமும் பகல் பொழுதில் உண்டு வர இரவில் நல்ல தூக்கம் வரும்.

மேனி பளபளப்பு பெற:

ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

முகத்தில் வரும் கட்டிகள் மறைய:

சந்தனம் முகத்தில் அடிக்கடி பூசி காயவிட்டு முகம் கழுவ, கட்டிகள் வராது.

முகம் வளுவளுப்பாக இருக்க:

கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும்இரவு படுக்கைக்குச் செல்லும் முன் தடவ வேண்டும்.

உடல் வளர்ச்சி பெற:

உருளைக்கிழங்கு சிறுவர்களுக்கு நல்ல உணவு அதிகமாக சேர்த்து வர... வளர்ச்சி பெருகும்.

முகம் பளபளக்க:

காலையில் எழுந்ததும் அவரை இலைச்சாறை முகத்தில் தடவி, 1 மணி நேரம் கழித்து குளித்து வர முகம் பளபளப்பாகும்

உடல் நிறம் சிவப்பாக:

  செம்பருத்தி பூவை நீரில்போட்டு அரை மணி நேரம் கழித்து அந்த நீருடன் பூவையும் அரைத்துச் சாப்பிட்டு வர உடல் நிறம் சிவப்பாகும்.

உடல் பலம் பெற:

பப்பாளி பழம் தினமும் சாப்பிடலாம்.

உடல் குளிர்ச்சி பெற:

ரோஜா இதழ்களை இடித்து, சீயக்காயுடன் சேர்த்து தலைக்குத் தேய்க்கலாம்.

மட்டன் பிரியாணி


தேவையானவை: மட்டன் - அரை கிலோ, பாசுமதி அரிசி - இரண்டரை கப், பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 4, பச்சை மிளகாய் - 6, மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - அரை கப், நெய் - கால் கப், புதினா - ஒரு கைப்பிடி, மல்லித்தழை - ஒரு கைப்பிடி, தயிர் - ஒரு கப், உப்பு - 2 டீஸ்பூன். இஞ்சி+பூண்டு விழுது - 4 டீஸ்பூன்.
அரைக்க: பட்டை - 2, ஏலக்காய் - 10, கிராம்பு - 2.
செய்முறை: அரிசியைக் கழுவி, தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவையுங்கள். பெரிய வெங்காயம், தக்காளியை நீளம், நீளமாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்தெடுங்கள்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, நெய் விட்டு மட்டன், புதினா சேர்த்து தண்ணீர் சுண்ட சுண்ட வதக்குங்கள். பிறகு இஞ்சி, பூண்டு விழுதையும் அரைத்த மசாலாவையும் போட்டு, தக்காளி, தயிர், மிளகாய்தூள், உப்பு போட்டுக் கிளறி, மட்டன் வேகும் வரை வேகவிடுங்கள்.
மட்டன் நன்றாக வெந்தபிறகு வென்னீர் 2 டம்ளர் விட்டு, அது நன்றாக கொதிக்கும்போது அரிசியை போட்டுக் கிளறுங்கள். மேலே நிற்கும் தண்ணீர் வற்றி, சாதம் சேர்ந்தாற்போல (உப்புமா போல தளதளவென்ற பதத்தில்) வரும் சமயத்தில் தீயை ‘ஸிம்’மில் வைத்து பிரியாணி பாத்திரத்தை மூடுங்கள். அதன் மேலே வெயிட்டான பொருளைத் தூக்கி வைத்து ‘தம்’ போடுங்கள். ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் வென்னீரை நிரப்பி, பிரியாணி பாத்திரத்தை மூடியிருக்கும் தட்டு மேலே வைத்தும் ‘தம்’ போடலாம்

இறால் பிரியாணி


தேவையானவை: இறால் (உரித்தது) - 300 கிராம், பாசுமதி அரிசி - இரண்டரை கப், பச்சை மிளகாய் - 6, தக்காளி - 6, சின்ன வெங்காயம் - முக்கால் கப், புதினா, மல்லித்தழை - தலா 1 கைப்பிடி, இஞ்சி + பூண்டு விழுது - 3 டீஸ்பூன், தேங்காய்ப்பால் - 2 கப், எலுமிச்சம்பழம் - 1, எண்ணெய்-- -- அரை கப், நெய் - கால் கப், உப்பு - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை - 1, லவங்கம் - 5, ஏலக்காய் - 1, பிரிஞ்சி இலை - சிறிது, சோம்பு - 1 டீஸ்பூன்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு எல்லாவற்றையும் ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை அம்மியில் நசுக்கி வைத்துக்கொள்ளுங்கள். (மிக்ஸியில் போடக்கூடாது). அம்மி இல்லாதவர்கள், பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். தக்காளியை மிக்ஸியில் அடித்து ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்தபிறகு, ஊறவைத்த தாளிக்கும் பொருட்களை தண்ணீரை வடிகட்டிவிட்டுப் போடுங்கள். நன்றாக பொரிந்தபிறகு, நசுக்கிய வெங்காயம், புதினா, மல்லித்தழை போட்டு வதக்குங்கள். பிறகு நெய் விட்டு நன்றாக கிளறிவிட்டு, சுத்தம் செய்த இறாலைப் போட்டு, மஞ்சள்தூள் போட்டு நன்றாக கிளறி, இஞ்சி + பூண்டு விழுது சேர்த்து கிளறி, 2 நிமிடம் மூடி வையுங்கள்.

முட்டை பிரியாணி


தேவையானவை: பாசுமதி அரிசி - அரை கிலோ, முட்டை - 10, தக்காளி - 4, பெரிய வெங்காயம் - 3, கடைந்த தயிர் - 1 கப், எண்ணெய் - அரை கப், நெய் - கால் கப், உப்பு - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி + பூண்டு விழுது - 4 டீஸ்பூன்.
அரைக்க: பட்டை - 2, லவங்கம் - 2, ஏலக்காய் - 6, பச்சை மிளகாய் - 5, புதினா - ஒரு கைப்பிடி, மல்லித்தழை - ஒரு கைப்பிடி.
செய்முறை: அரிசியைக் கழுவி ஊறவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, கால் டீஸ்பூன் உப்பு, அரைத்த மசாலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு துளி சேர்த்து அடித்து வையுங்கள். பிறகு, அடித்த முட்டையை குழிப்பணியார சட்டியில் பணியாரம் போல் சுட்டெடுங்கள் அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலவையை விட்டு, இட்லி போல் வேகவிடுங்கள். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு, வெங்காயம் போட்டு வதக்கி, அரைத்த மசாலா, தக்காளி, தயிர், மஞ்சள் தூள், உப்பு போட்டு சுருள சுருள வதக்கி எண்ணெய் கக்கி வரும் போது, ஒரு கப் வென்னீர் விட்டு தளதளப்பாக இருக்கும் போது முட்டையை போட்டு கிளறி கொதிக்கவிடுங்கள். இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வென்னீர் வைத்து, ஊறவைத்த அரிசியை உப்பு போட்டு, அரைப்பதமாக வேகவிட்டு வடித்து, கொதிக்கும் கலவையில் போட்டு கிளறி முன்பு சொன்ன முறையில் ‘தம்’ போடுங்கள்.

வெஜிடபிள் பிரியாணி


தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, பச்சை மிளகாய் - 2, புளித்த தயிர் - அரை கப், எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி + பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி, உப்பு - தேவையான அளவு, கேரட் - 1, உருளைக்கிழங்கு - 1, பட்டாணி - ஒரு கைப்பிடி.
தாளிக்க: பட்டை - ஒரு துண்டு, லவங்கம் - 3, ஏலக்காய் - 4, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை: அரிசியைக் கழுவி, 3 கப் தண்ணீர் சேர்த்து ஊறவையுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள். தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். உருளைக்கிழங்கை சற்றுப் பெரிய துண்டுகளாகவும் கேரட்டை வட்ட வில்லைகளாகவும் நறுக்குங்கள். குக்கரை சூடாக்கி எண்ணெய், நெய் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்து, உடனே வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வதக்குங்கள்.
பிறகு, நறுக்கிய காய்கறியை அதோடு சேர்த்து பத்து நிமிடம் நன்கு வதக்குங்கள். காய்கறி வதங்கியதும் நறுக்கிய தக்காளி, இஞ்சி + பூண்டு விழுது, புதினா, மல்லித்தழை, தயிர், எலுமிச்சம்பழச் சாறு, தேவையான உப்பு, பச்சை மிளகாய் (முழுதாக) சேர்த்து, 5 நிமிடம் நன்கு கொதிக்கவிடுங்கள். ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் இதில் சேருங்கள். குக்கரை மூடி, வெயிட் போடுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை நன்கு குறைத்து, ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள். சூடான வெஜிடபிள் பிரியாணி ரெடி

வாழைப்பூ அடை


தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை கப், வாழைப்பூ - ஒன்று, காய்ந்த மிளகாய் - 4, பெரிய வெங்காயம் -1, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பை தனித்தனியே அரை மணி நேரம் ஊற வைக்கவும், வாழைப்பூவை ஆய்ந்து உள்ளே இருக்கும் நரம்பை நீக்கி பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவும். ஆறியதும் நன்கு பிழிந்து வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த அரிசியுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பருப்பு வகைகளைத் தனியாக அரைக்கவும். எல்லா மாவையும் கலந்து வெந்த வாழைப்பூவை போட்டு, சிறிது உப்பு சேர்த்து கலக்கவும். கல் காய்ந்ததும் அடைக்கு ஊற்றி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். வெங்காய வாசமும் வாழைப்பூவின் ருசியும் ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும்.

அரிசி அடை

தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி - அரை கப், பச்சரிசி - முக்கால் கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், தேங்காய்த்துருவல் - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விடவும். பிறகு, அரிசியைக் களைந்து மிளகு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இந்த மாவுடன் தேங்காய்ப்பால், துருவிய தேங்காய், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலந்து, கல் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து அடை தட்டி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேக விட்டு எடுக்கவும். எல்லா சட்னிக்கும் ஏற்ற அடை இது.

பனீர் பஜ்ஜி


தேவையானவை: பனீர் - 200 கிராம், கடலை மாவு - 1 கப், மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.
பொடிக்க: சீரகம் - அரை டீஸ்பூன், மிளகு - கால் டீஸ்பூன், கருப்பு உப்பு - கால் டீஸ்பூன்.
செய்முறை: பனீரை சிறு சதுரத் துண்டுகளாக்குங்கள். மாவுடன் எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி இட்லிமாவு பதத்தில் கரையுங்கள். எண்ணெயை காயவைத்து, பனீர் துண்டுகள் ஒவ்வொன்றையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு நன்கு பொரித்தெடுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு பொடித்து சூடான பஜ்ஜியின் மேல் தூவி பரிமாறுங்கள். ருசி அபாரமாக இருக்கும்

வாழைக்காய் பஜ்ஜி


தேவையானவை: வாழைக்காய் - 1, கடலை மாவு - 1 கப், கார்ன்ஃப்ளவர் - 1 டேபிள்ஸ்பூன், சோம்பு தூள் - அரை டீஸ்பூன், பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, ஆப்ப சோடா - சிட்டிகை
செய்முறை: வாழைக்காயின் இரு பக்கங்களிலும் சிறிது தோலை விட்டு விட்டு மீதமுள்ளதை சீவி எடுத்து விடுங்கள். பின் நீளவாக்கில் இரண்டாக வெட்டி, இரு ஓரங்களிலும் சிறிது தோல் இருக்குமாறு விட்டுவிட்டு, மெல்லியதாக நறுக்குங்கள்.
எண்ணெய் நீங்கலாக மாவுடன் மற்றவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு இட்லிமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயை காய வைத்து ஒவ்வொரு துண்டையும் மாவில் நனைத்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்

வெங்காய பஜ்ஜி


தேவையானவை: வெங்காயம் - 3, கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், ஆப்ப சோடா - அரை சிட்டிகை, உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை தோல் நீக்கி மெல்லிய வட்டங்களாக நறுக்குங்கள். எண்ணெய் நீங்கலாக மாவுடன் மற்ற பொருட்களை ஒன்றாக சேருங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, வெங்காய வில்லைகளை மாவில் நன்கு அமிழ்த்தி எடுத்து காயும் எண்ணெயில் போடுங்கள். இருபுறமும் திருப்பி வேகவிட்டெடுங்கள்.
குறிப்புகள்: உங்கள் வீட்டிலேயே பஜ்ஜி மாவைத் தயார் செய்து வைத்துக்கொள்ளலாம். கடலைப்பருப்பு - 2 கப், பச்சரிசி - கால் கப், காய்ந்த மிளகாய் - 8. இவற்றை நன்கு வெயிலில் காயவைத்து, மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன், கால் கப் மைதா, (விருப்பப்பட்டால்) அரை டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவை என்றால் கலர் பவுடர் சேர்க்கலாம். தேவையானபோது, இந்த மாவில் சிறிது எடுத்துக் கரைத்து, வேண்டிய காய்களை சேர்த்து பஜ்ஜி போடலாம். எப்போதுமே, பஜ்ஜிக்கும் பக்கோடாவுக்கும் எண்ணெய் நன்கு ‘சுருக்’கென்று காயவேண்டும். ஆனால், புகைவரும் அளவு காய்ந்துவிடக் கூடாது. எண்ணெய் காயாமல் போட்டால், பஜ்ஜி, பக்கோடா ‘சதசத’வென்று ஆகிவிடும்.

முகம்

ஒரு தக்காளியை மிக்ஸியில் அரைத்து குழைத்து எடுத்து கிண்ணத்தில் போட்டு ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் உரைய வைத்து எடுத்துக்கணும். இந்த ஐஸ் தக்காளியை லைட்டாக முகத்தில் தேய்த்துத் தடவி, சிறிது நேரத்துக்கு பிறகு முகம் கழுவினால் முகத்தில் ஒரு கூடை மூன்லைட்தான்

ஹென்னா

தலைக்கு ஹென்னா போடும்போது வெறும் ஹென்னாவை மட்டும் போட்டால் முடி சாஃப்ட்டாக இருக்காது.

250 கிராம் ஹென்னாவுடன், ஆம்லா பவுடர்-100 கிராம், வெந்தயப் பொடி-50 கிராம், முட்டை-1, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்-2 டீஸ்பூன், தயிர்-½ கப், டீ டிகாஷன்-4 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு-8லிருந்து 10 சொட்டுக்கள் சேர்த்து சிறிது தண்ணீரும் கலந்து முதல் நாள் இரவே ஒரு இரும்புப் பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும். தலை முடியில் லேசாக எண்ணெய் தடவிய பின்னர், கலந்து வைத்த இந்த மிக்ஸை தலை முடியில் முழுவதும் பூசி, ஒரு மணி நேரம் ஊற விடவும். முடியில் கலர் வந்த பின்னர் வாஷ் பண்ணலாம். முடியில் கலர் வராவிட்டால் மேலும் அரை மணி நேரம் விட்டு கலர் வந்த பின்னர் முடியைக் கழுவலாம். இப்படிச் செய்து வந்தால் முடி சாஃப்ட்டாக அழகாக இருக்கும்....

வெள்ளரி விதை ஃபேஸ் பேக்

  தினம் முழுக்க முகத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க இதோ இந்த ஃபேஸ் பேக்கூட உதவும்!

சந்தனம் மற்றும் வெள்ளரி விதைகளை நன்கு அரைத்து முகத்தில் அப்ளை பண்ணுங்கள். பத்து நிமிடம் கழித்து ‘வாஷ்’ செய்துவிடுங்கள். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வர, முகம் பாலிஷ்போட்ட குத்து விளக்கு போல் ஜொலிக்கும். சந்தனமும், வெள்ளரி விதையும் முகத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். இவையிரண்டும் குளிர்ச்சியான பொருட்கள் என்றாலும், வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே அப்ளை செய்வதால் சளிப் பிடிக்காது

கருவளையங்கள் மறைய..

வெள்ளரிக்காயைத் துருவி சாறு எடுத்து, பஞ்சில் நனைத்துக் குளிர வைத்து, கண்களின் மேல் வைத்துக் கொண்டு, இருட்டான அறையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும். அடிக்கடி இப்படிச் செய்துவர, கருவளையங்கள் காணாமல் போகும்.

சரும நிறம் அதிகரிக்க..

ஊற வைத்த கொண்டைக் கடலையைக் கைப்பிடியளவு எடுத்து பால் விட்டு அரைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் காயவிட்டு, பிறகு மஞ்சள் தூளும், எலுமிச்சை சாறும் கலந்த கலவை உபயோகித்துக் கழுவி வந்தால், நிறம் கூடும்.

கழுத்தில் உள்ள கருவளையம் மறைய

சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்படலாம். இதைப் போக்க. கோதுமை மாவில் வெண்ணையைக் கலந்து கழுத்தைச் சுற்றி பூசவும் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தினசரி செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் அகன்றுவிடும்

காதை மிளிர வைப்பது எப்படி?

உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும், 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகிவிடும். முகத்திற்கு பூசும் பேஸ்- பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது.
சிறிது சூடாக்கப்பட்ட நல்ல எண்ணையினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்தும் பளபளவென பளிச்சிடும்.

பொடுகை போக்க வேண்டுமா

ஆன்டி செப்டிக் தன்மை நிரம்பிய மூலிகைகளால் உருவான ஆயுர்வேத எண்ணெயை (அதில் வேப்பிலை, வெந்தயம், துளசி ஆகியவை கலந்தது) முடியின் வேரில் மென்மையாக அழுத்தித் தடவவும்.

அதே ஆன்டிசெப்டிக் எண்ணெயை முழுத் தலையிலும் சிராகத் தடவவும்.

வென்னீரில் டவலை ஊற வைத்து, பிறகு நீரைப் பிழிந்து விடவும். சிராக நீராவி முடிகளுக்குள் செல்லுமாறு அந்த டவலை தலையில் கட்டவும்.

5லிருந்து 10 நிமிடம் வரை அதை உலர விடவும்.                                                      பொடுகு அகற்றுவதற்காக விசேஷமாக தயாரிக்கப்படும் ஒரு கலவை:

ஒரு கப் மருதாணியில் நெல்லிக்காய், சியக்காய், ஒரு தேக்கரண்டி, வெந்தயம், வேப்பிலை, துளசி அரை தேக்கரண்டி எல்லாவற்றையும் பொடியாக கலக்கவும், எல்லாவற்றையும் தயிரில் கலந்து அல்லது பாதி எலுமிச்சை துண்டின் சாறுடன் கலந்து ஒரு கலவையை தயார் செய்து கொள்ளவும். இதை தலை முழுக்கத் தடவி ஒரு மணி நேரம் வரை வைத்திருக்கவும். இப்பொழுது இந்த ஆயுர்வேத ஷாம்புவால் தலையை கழுவிக் கொள்ளவும்.
இதை வாரத்திற்கு ஒரு முறை என 3 மாதங்கள் வரை தடவவும். இதனால் நிச்சயமாக பொடுகு விலகும். இதற்குப் பிறகும் தலையில் பொடுகு ஏற்பட்டால் உங்கள் உடல் கோளாறுதான் இதற்குக் காரணம். எனவே உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.

அழகான உதடுகளுக்கு.

அழகான உதடுகளுக்கு....



Image

முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக
உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு
முறை வெளித்தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர
மாதக் கணக்கில் ஆகும். சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள்
தோலுரிந்தும், வறண்டும் காணப்படுகின்றன
உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்:
தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.

வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.

உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்பட வேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.

மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இப்போது மேட் பினின் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவது தான் உபயோகிக்க வேண்டும்.

தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.

லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம்.

லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.

தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.

கர்ப்ப காலத்தில்

கர்ப்ப காலத்தில் தாய் உடல் எடை எவ்வளவு அதிகரிக்க வேண்டும்?



கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், சரியான அளவு உடல் எடை அதிகரித்தால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைத்து, குழந்தை நன்றாக வளர்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கர்ப்பிணிகளுக்கு உடல் எடை அதிகரிக்க வேண்டுமென டாக்டர்கள் கூறுவர். அதற்காக அதிகளவிலான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதில்லை. அதிக கலோரிகள் தேவை என்பதால் நல்ல சத்தான உணவை சாப்பிடுவதே மிக முக்கியம். அப்போது தான் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ச்சியடையும்.
கர்ப்பமடைவதற்கு முன் எடுத்து கொண்ட கலோரி அளவிலிருந்து, 100 முதல் 300 கலோரி வரையே கர்ப்பமடைந்த பின் பெண்களுக்கு தேவைப்படும்.
பொதுவாக கர்ப்ப காலத்தில் சாதாரண எடையுள்ள, ஒரு பெண்ணின் எடை 12 முதல் 16 கி.கி., வரை அதிகரிக்க வேண்டும்.
குறைந்த உடல் எடை கொண்ட பெண்களின் எடை, கர்ப்ப காலத்தில் 13 முதல் 18 கி.கி., வரை அதிகரிக்க வேண்டும். அதிக உடல் எடை கொண்ட பெண்கள் கர்ப்ப காலத்தில் 7 முதல் 11 கி.கி., வரை உடல் எடை அதிகரிக்க வேண்டும்.
கர்ப்பமடைந்த முதல் மூன்று மாதங்களுக்கு 1 முதல் 2 கி.கி., வரை உடல் அதிகரிக்க வேண்டும். அதன் பின் ஒவ்வொரு வாரமும் அரை கிலோ கிராம் வரை அதிகரித்து கொண்டே வர வேண்டும். அதுவே இரட்டை குழந்தையாக இருந்தால் கர்ப்ப காலத்தில் 16 முதல் 20 கி.கி., வரை உடல் எடை அதிகரிக்க வேண்டும்.
முதல் மூன்று மாதங்களுக்கு பின் ஒவ்வொரு மாதமும் 1 கி.கி., குறைவாக உடல் எடை அதிகரிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் உடல் எடை குறைவது நல்லதா…
கர்ப்ப காலத்தில் உடல் எடை குறைவது நல்லதல்ல. அது கர்ப்பிணிகளையும் அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் பாதிக்கும். ஏனென்றால் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கும், அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற் கும், சத்துக்கள் மிக அவசியம்.
கர்ப்ப காலத்தில் அதிக உடல் எடை காணப்பட்டால் என்ன செய்வது…
கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் இருக்க வேண்டிய உடல் எடையை விட அதிக எடை காணப்பட்டால், அதை குறைக்க முயற்சி செய்ய கூடாது. பல வகையான சத்துள்ள உணவுகளையும் சாப்பிடலாம்.
டாக்டரின் ஆலோசனை பெற்று, நடைபயிற்சி போன்ற சில மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால், மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின்னரே இவற்றை செய்ய வேண்டும்.
உப்புக்கு தடை
கர்ப்ப காலத்தில் அதிகமாக உப்பு சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் தங்களது சாப்பாட்டில் குறைந்த அளவு உப்பு சேர்த்து கொள்வதே நல்லது.
உப்புக்கள் தூவப்பட்ட நொறுக்கு தீனிகளையும் தவிர்க்க வேண்டும்.


கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் உடல் எடை எப்படி மாறுகிறது?
குழந்தை 3.5 கி.கி.,
நஞ்சுக்கொடி 1 முதல் 1.5 கி.கி., வரை
ஆம்னியாட்டிக் திரவம் 1 முதல் 1.5 கி.கி., வரை
மார்பக திசுக்கள் 1 முதல் 1.5 கி.கி., வரை
ரத்த ஓட்டம் 2 கி.கி.,
பிரசவ காலத்திற்கான கொழுப்பு சேமிப்பு மற்றும் 2.5 முதல் 4 கி.கி., வரை
தாய்ப்பால் கொடுத்தல், கர்ப்பப்பை விரிவு 1 முதல் 2 கி.கி., வரை

கழுத்தின் கருமை மறைய

*எலுமிச்சைச் சாறில், தக்காளியை நனைத்து அதை கழுத்தில் கறுமை உள்ள இடங்களில் தேய்த்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

*உருளைக்கிழங்கு சாறு, தக்காளிச் சாறு, சிறிது நுங்கு ஆகியவற்றுடன் கொண்டைக்கடலை மாவு சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து அதை கழுத்தில் தேய்த்து வர கறுமை நீங்கும்.

* கடுகு எண்ணெயை கழுத்தில் தேய்த்து சில மணி நேரங்கள் ஊறவிட்ட பின், வெதுவெதுப்பான நீல் பஞ்சை நனைத்து துடைத்து வர கறுமை நீங்கும்.

*கோதுமை மா, பயத்தமாவு மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன், சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து கழுத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். சில நாட்களில் கறுமை நீங்கும்.

* எலுமிச்சைச் சாறு மற்றும் பாலுடன் சிறிதளவு பார்லி பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து அதை கழுத்தில் கறுமை உள்ள பகுதிகளில் தடவி சிறிது நேரம் கழித்து தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், நாளடைவில் கறுமை மறையும். இதில், பார்லி பொடி கலக்காமல் எலுமிச்சைச் சாறு மற்றும் பால் மட்டும் கலந்தும் தேய்க்கலாம்.

*பாதாம் பருப்பை அரைத்து பாலில் கலந்து கறுமை உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால், சில நாட்களில் கறுமை மறையும்

எண்ணை படிந்த சருமம்

குளிப்பதற்கு 1/2 மணி முன்னதாக எலுமிச்சைச் சாறு 1/2 தேக்கரண்டி, வெள்ளரி சாறு 1/2 தேக்கரண்டி கலந்து முகத்தில் தடவவும்.                                                       எண்ணை படிந்த சருமத்தை சூடான நீரில் அடிக்கடி கழுவும்போது தோலில் உள்ள துவார அடைப்பு நீங்கும். எண்ணையும் கரையும்.                                            எலுமிச்சை சாறும் தண்ணீரும் சம அளவு கலந்து முகத்தில் தடவவும். இளம் சூடான நீரில் கழுவவும்                                                                                                               ஆப்பிள் ஸைடர் வீனிகர் எண்ணை படியும் இடத்தில் தடவினால் நல்லது        மண் பூச்சு உபயோகிக்கவும்.

பொடுகு நீங்க

வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம்.
பேன் தொல்லை நீங்க
வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க
வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும்.
செம்பட்டை மறைய
·முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி
விடவேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை மறையும்

இளநரை நீங்க

(a)நாட்டு மருந்துக் கடைகளில் வேம்பாளம் பட்டை என்று கிடைக்கும். அதை
வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம்.
(b) நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு
எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து
வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு.
கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில்
தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.
(C)சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி
செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம்
தெரியு

கூந்தல் உதிர்வு

தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற
வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக
முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும்
அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து
வந்தாலும் குணம் தெரியும்.

புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு..

புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிக முக்கியம். அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெயும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் ஏதேனும் கலந்து மசாஜ் செய்யலாம். அதனால் அவ்விடங்களில் இரத்த ஒட்டம் அதிகரித்து, ரோம வளர்ச்சியும் அதிகரிக்கும்.

தோல் சுருக்கம்

தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது
நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

தோல் சுருக்கம்

3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி பால், அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.
இவற்றுடன் கால் தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இதனுடன் குளியல் சோப் துண்டுகள் சிறிதளவு சேர்க்கவும். இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து குளிக்கவும்.
வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்து வந்தால், இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிடும்.

மைசூர் பாகு

தேவையான பொருள்கள்:
  • கடலை மாவு – 1 கப்
  • நெய் – 1 1/2 கப்
  • சர்க்கரை – 2
  • ஏலப்பொடி
செய்முறை:

  1. கடலை மாவை நன்கு கட்டியில்லாமல் சலித்து, வெற்று வாணலியில் மிக லேசாக இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் வாணலி அல்லது அடிகனமான உருளியில் சர்க்கரையுடன் 1 கப் தண்ணீர் சேர்த்துக் கரைய விடவும்.
  3. இந்த நேரத்தில் இன்னொரு அடுப்பில் நெய்யை உருக்கி வைத்துக் கொள்ளவும்.
  4. சர்க்கரை முழுவதும் கரைந்து, ஒற்றைக் கம்பிப் பாகு வந்ததும், கடலை மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கொண்டே, கைவிடாமல் கட்டியாகாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  5. எல்லா மாவும் சேர்த்து, கட்டி எதுவும் இல்லாமல் மாவு மொத்தமாக சர்க்கரைக் கலவையில் கலந்ததும், பக்கத்து அடுப்பில் சூடாக, உருகி இருக்கும் நெய்யை(இதன் அடுப்பை சிம்மிலே வைத்து சூடு குறையாமலே வைத்திருக்கவும்.) ஒவ்வொரு கரண்டியாகச் சேர்க்க ஆரம்பிக்கவும்.
  6. நெய்யைச் சேர்க்கும்போதெல்லாம் கலவை சர்ரென பொங்கும்; கைவிடாமல் கிளறவும்.
  7. எல்லா நெய்யும் சேர்த்து முடித்ததும், ஏலப் பொடியும் சேர்த்து, கிளறிக் கொண்டே இருக்கும்போது, நுரை மாதிரி பொங்கி, தானே வெடித்து உடைந்து உடைந்து பொத்தல்கள் வரும். இதுதான் மைசூர்பாகு பதம்.
  8. அடுப்பிலிருந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டவும்; சமப்படுத்தும்போது அழுத்தக் கூடாது.
  9. லேசாக ஆறியதும் வில்லைகள் போடலாம். மேலாக சர்க்கரை தூவி அலங்கரிக்கலாம்.

பால்கோவா

தேவையான பொருள்கள்:
  • பால் - 1 லிட்டர்
  • தயிர் - சிறிதளவு
  • சக்கரை - 100 கிராம்
  • நெய் - 5 தேக்கரண்டி
  • முந்திரி - 5 கிராம்
செய்முறை:
  1. வாய் அகண்ட இரும்பு வாணலியில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். ஒரு கொதி வந்ததும் சிறிது தயிரை பாலில் விடவும்.
  2. பால் பொங்கி வரும்போது ஒரு கரண்டி வைத்து பாலை நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். அடியிலும், ஓரத்திலும் பால் கட்டிவிடக் கூடாது. கிளறிக் கொண்டே இருக்கவும்.
  3. பால் சிறிது சுண்டி மஞ்சள் நிறத்திற்கு வரும்போது சர்க்கரையைத் தூவி கிளறி விடவும்.
  4. முந்திரியை நெய்விட்டு பொறித்து அதனை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து, அந்த பொடியையும் பாலில் போட்டு கிளறி விடவும்.
  5. சர்க்கரை பாலுடன் நன்கு சேர்ந்ததும் பால் சிறிது கெட்டியாகத் துவங்கும். அப்போது 3 தேக்கரண்டி நெய்யை பாலில் விடவும்.
  6. 10 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருக்கவும். பால்கோவா சிறிது தளதளவென்று இருக்கும்போதே இறக்கிவிடவும். நெய் சேர்த்துள்ளதால் பின்பு இது இறுகும். எனவே தளதளவென்று இறக்கினால் பின்பு இறுகி கோவா பதமாக இருக்கும்.
  7. தற்போது ஒரு கிண்ணத்தில் நெய்யை ஊற்றி அதில் சுடான பால்கோவாவை எடுத்து வைத்துக் கொள்ளவும். வேண்டுமென்றால் வறுத்த முந்திரியை அதன் மீது பரப்பி அழகுபடுத்தலாம்

பால் அல்வா

தேவையான பொருட்கள்
  • பால் - 2 கப்
  • சர்க்கரை - முக்கால் கப்
  • நெய் - அரை கப்
  • ரவை - கால் கப்
செய்முறை
  1. ஒரு அடி கனமாக வாணலியில் ரவையைப் போட்டு வறுத்து எடுக்கவும்.
  2. பின்னர் அதே வாணிலியில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
  3. பின்னர் ரவையை சேர்த்து வேக விட்டு, அதில் சர்க்கரை மற்றும் நெய்யை சேர்த்து கிளறவும்.
  4. சர்க்கரை மற்றும் நெய் உருகி பின்னர் அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.
  5. நெய் தடவிய கிண்ணத்தில் அல்வாவை எடுத்து வைக்கவும்.
  6. தேவைப்பட்டால் இறுதியாக பாதாம், பிஸ்தா பருப்புகளை பொடி செய்து சேர்க்கலாம்.
  7. இதனை எல்லோரும் எளிதாக செய்யலாம்.

உருளைக்கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள்
  • உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
  • மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  • சோள மாவு - 1 தேக்கரண்டி
  • அரிசி மாவு - 1 தேக்கரண்டி
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை
  1. உருளைக்கிழங்கை சிறு சிறு (சதுர) துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. நறுக்கிய துண்டுகளை கொதிக்கும் நீரில் போட்டு உடனே எடுக்கவும்.
  3. பின்னர் அதனுடன் சோளமாவு, மிளகாய்தூள், உப்பு, அரிசி மாவு ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து பிசறிக் கொள்ளவும்.
  4. எண்ணெயைக் காயவைத்து பிசறிவைத்த உருளைக்கிழங்கைப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
குறிப்பு

1. பிசறும் போது சிறிது சோம்பு சேர்த்துக் கொண்டால் வாசனையாக இருக்கும்.

இறால் வறுவல்

தேவையான பொருட்கள்:

  • 500 கிராம் இறால்,
  • 1 முட்டை,
  • 2 தேக்கரண்டி மிளகுத்தூள்,
  • 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது,
  • 1 மேசைக்கரண்டி மைதா,
  • தேவைக்கேற்ப உப்பு.
செய்முறை:
  1. இறாலை தோல், குடல், தலை நீக்கி சுத்தமாகக் கழுவவும். அதை தண்ணீர் இல்லாமல் பிழிந்துவைத்துக் கொள்ளவும். அதனுடன் மிளண்த்தூள், முட்டை, மைதா, இஞ்சி பூண்டுவிழுது, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
  2. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் ஊற வைத்த இறாலைஎடுத்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாதவாறு பொன்னிறத்தில் வறுத்து எடுக்கவும்.

இந்திய கோழி கறி

தேவையான பொருட்கள்:

1.
கோழி 1
2.
மல்லி 3 மேசைக்கரண்டி
3.
காய்ந்த மிளகாய் 18
4.
சின்ன ஜீரகம் 1 தேக்கரண்டி
5.
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
6.
பெரிய வெங்காயம் 3
7.
தயிர் 3 மேசைக்கரண்டி
8.
எண்ணெய் 8 மேசைக்கரண்டி
9.
உப்பு தேவையான அளவு

செய்முறை :

1. காய்ந்த மிளகாய், மல்லி, சின்ன ஜீரகம் இவற்றை வறுத்து அரைக்கவும்.

2.
கோழியைப் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

3.
அரைத்த கலவையில் தயிர் , மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
4. வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

5.
எண்ணெய் ஊற்றி கோழித் துண்டுகளை வதக்கவும். எந்த தாளிப்பும் தேவையில்லை.

6.
நல்ல வாசம் வரும் போது, வெட்டிய வெங்காயத்தைப் போட்டு, 1 1/2 குவsளை தண்ணீரை விட்டு வேக விடவும். வட இந்திய கோழி கறி ஆச்சி..

பட்டர் பிஸ்கெட்

தேவையான பொருட்கள்:
மைதா மாவு 2 கப்
சர்க்கரைப்பவுடர் 1-1/2 கப்
டால்டா 1-1/2 கப்
ஏலக்காய்ப்பொடி 1/4 ஸ்பூன்

செய்முறை:

டால்டா, சர்க்கரைப்பொடியை நன்றாக கலந்து கொள்ளவும்.

மைதா மாவை இதில் சிறிதுசிறிதாக சேர்த்து பிசையவும்.

வெடிப்புகள் இல்லாமல் வழவழவென சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்திக் வட்ட வடிவில் செய்து கொள்ளவும். இதனை நெய் தடவிய தட்டில் இடைவெளி விட்டு அடுக்கி 15 நிமிடங்கள் ஓவனில் மிதமான சூட்டில் பேக் செய்யவும்.

பிஸ்கெட் நன்கு உப்பி வரும் போது வெளியே எடுத்து, சற்று ஆற விட்டு, விரலால் லேசாக சமப்படுத்தவும்.

வெண்நிறம் கலந்த பழுப்பு நிறத்தில் பட்டர் பிஸ்கெட் தயார்!.

முகத்தில் சுருக்கங்கள் மறையும்

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

l அழகான முகத்திற்கு

நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

கூந்தல் வளர

*செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக்
கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிதுயம் கலந்து தலையில் தேய்த்து அரை மணி
நேரம் ஊறிக் குளித்தால், தலை “ஜில்’ லென்றிருக்கும். தலை முடி “புசுபுசு’வென
அதிகமாய் ஜொலிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், அரை
அடி கூந்தல், ஆறடி கூந்தலாகி விடும்*
* *

உடல் எடையை குறைக்க

டிப்ஸ் 1: தினமும் குறைந்த்து 8 டம்ளர்கள் நீர் அருந்துவது அவசியம்.

டிப்ஸ் 2: பழச்சாறுகள், கிரீம், காபி அல்லது டீ-யில் சர்க்கரை அனைத்தும் எடையை கூட்டிவிடும்.

டிப்ஸ் 3: எடைக்குறைப்பிற்கு அருமருந்து தண்ணீர்.

டிப்ஸ் 4: ஒரு நாளில் 5 முதல் 6 சிறிய அளவு சாப்பாடு அல்லது ஸ்னாக்ஸ் உட்கொள்ளவும்.

டிப்ஸ் 5: நடப்பதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளவும். தினமும் 45 நிமிடம் நடக்கவும்.

டிப்ஸ் 6: சுரைக்காய், தக்காளி போன்ற காய்கனிகளை அதிகம் உண்ணவும்.

டிப்ஸ் 7: பசி எடுக்கும்போது மட்டும் உணவு உட்கொள்ளவும்.

உடல் பருமனாக

 உடல் பருமனாக எளிதான வழி ஒன்று உள்ளது. அதுதான் கொண்டைக் கடலை எனப்படும் மூக்கடலை.

பச்சை கொண்டைக் கடலையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வர மெலிந்த உடல் பருமனாகும்.

கடுமையான உட‌ற்ப‌யி‌‌ற்‌சிக‌ள் செ‌ய்து உடலை க‌ட்டு‌க்கோ‌ப்பாக வை‌த்‌திரு‌க்கு‌ம் ஆ‌ண்களு‌ம் இதனை சா‌ப்‌பிடுவது ந‌ல்லது.

எண்ணிக்கையாக 10 முதல் 15 கொண்டைக் கடலைகளை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

கருவளையம் நீங்க

தூக்கமின்மை, அனீனியா, பாரம்பரியம், கண்களுக்கு அதிக வேலைப்பளு, டென்ஷன் போன்ற காரணங்களால் கண்ணில் கருவளையம் ஏற்படுகின்றது.இரும்புச் சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். கரட், பீற்றுட்ஜீஸ்,கீரைவகைகளை, பப்பாளி, மாம்பழம்
போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய், உப்புக்கலக்காத எண்ணெய் தலா 1/2 டீஸ்பூன் எடுத்து கண்களின் உள்ளே போய்விடாதபடி சுண்டு விரலால் மெதுவாக மசாஜ் செய்யவும்.

* விட்டமின் ஏ,விட்டமின் கேப்சூல்களில் உள்ள எண்ணெயை கண்களை சுற்றித்தடவி பத்து நிமிடம் போனதும் பஞ்சினால்துடையுங்கள்.

*கற்றாழையின் சோற்றுப்பகுதியை,பன்னீருடன் கலந்து கண்களுக்கடியில் தடவி 10 நிமிடத்துக்கு பிறகு கழுவலாம்.

* விளக்கெண்ணைய்யை கண்களின் மீது தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

முகப் பொலிவிற்கு

1. வெள்ளரிச் சாறு, பன்னீர், எலுமிச்சைச் சாறு மூன்றும் சம அளவு கலந்து முகத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்து முகம் கழுவி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகப்பரு குறையும்; முகம் பொலிவடையும்.

2. 50 மி.லி. பால், சிறிது உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து முகம் கழுவினால் சருமத்தில் உள்ள துவாரங்கள் சுத்தமாகும்.

3. மஞ்சள், கோதுமை மாவு, நல்லெண்ணை சம அளவு கலந்து முகத்தில் தடவினால் ரோமங்கள் உதிர்ந்துவிடும்.

4. ஒரு தேக்கரண்டி உளுந்துடன் 4 பாதாம் பருப்புகளை சேர்த்து தண்ணீரில் ஊற வைத்து அரைக்கவும். முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்துக் கழுவினால் முகம் பொலிவடையும்.

5. ஒரு மேஜைக்கரண்டி பால்பவுடர், ஒரு தோல் நீக்கிய வெள்ளரிக்காய், ஒரு தேக்கரண்டி தயிர் ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு அடித்து, பசையை முகத்தில் தடவவும். 15 - 20 நிமிடம் கழித்து இளம் சூடான நீரில் கழுவினால் முகம் பொலிவடையும்.

6. ஒரு முட்டையை நன்கு அடித்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணை கலந்து உலர்ந்த சருமம் உள்ளவர்கள் முகத்தில் தடவினால், சருமம் மிருதுவாகும்.

7. அரைத் தேக்கரண்டி தேன், அரைத் தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு மற்றும் 3 மேஜைக் கரண்டி தயிருடன் ஒரு முட்டை வெள்ளை சேர்த்து அடிக்கவும். முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து இளம் சூடான நீரில் முகம் கழுவவும்.

8. ஒரு முட்டை மஞ்சள் கரு, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி விட்டமின்-இ எண்ணை மற்றும் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும். பின் இளம் சூடான நீரில் கழுவவும்.

9. ஒரு வாழைப்பழம், ஒரு மேஜைக்கரண்டி தேன், இவையிரண்டையும் நன்கு குழைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும். உலர்ந்த சருமம் மிருதுவாகும்.

10. ஓட்ஸ் மீலை நீரில் நன்கு கலந்து பசை போல் முகத்தில் தடவி உலர விடவும். பின் இளம் சூடான நீரில் கழுவினால் முகம் பொலிவடையும்.

”முடி உதிர்வதை தடுக்க & தலைக் கூந்தலின் முடி வளர்ச்சியை அதிகரிக்க”

முடி உதிர்வது என்பது பெண்களுக்கு மட்டுமேயான பிரச்சனை அல்ல. பல ஆண்களும் இன்று வலுக்கு தலையுடனே வலம் வருகிறார்கள். காலம் கடந்த பின் சூரியன் நமஷ்காரமா என்று அவர்கள் கண்டு கொளவதுமில்லை.


ஏன் இந்த முடி உதிரும் பிரச்சனையை முன்கூட்டியே சரி செய்ய முடியாதா ? என்றால் கண்டிப்பாக கட்டுப்படுத்த முடியும். அதற்கு சற்று நேரம் ஒதுக்கி நம் முடியை பேனிக்காக்க வேண்டும். இவ்வாறு, தன் முடிக்காகவும், முக அழகிற்காகவும் இளம் பெண்கள் சற்று அதிகமாகவே நேரத்தை ஒதுக்கிறார்கள். ஆனாலும், உதிரும் மயிர்களை கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை என்று, வித விதமான எண்ணெய்களை உபயோகிப்பார்கள். அதிலும் , விளம்பரத்தில் வரும் பொருட்களுக்கே முன்னுரிமையும் வழங்குவர். ஆண்கள், ஆனால் அப்படி அதிகப்படியான நேரத்தை தன் முடிக்கு / தலைக்கு ஒதுக்குவதும் இல்லை, தடுக்க வழிமுறையும் தேடுவதும் இல்லை. பின்னர், அதிகப்படியான முடிகள் தன் தலையில் இல்லை என்ற பின்னரே ஒடுவர் என்ன செய்வதென்று.

முடி உதிர்வது என்பது ஒர் பரம்பரை வியாதியும் கூட. இதை நாம், நம் ஊரில் உள்ள ஒரு சில குடும்பத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். தாத்தாவும் வலுக்கு , அப்பனுக்கும் வலுக்கு , இன்று பயனுக்கு பாதி முடிய காணல ...

ஆண்களுக்கு முடி உதிர்வது என்பது, பெரும்பாலும் உச்சம் தலை வலுக்கு அல்லது முன் தலை வலுக்காக சென்று முடியும். ஆனால் பெண்களுக்கு அப்படி வலுக்கு தலை அளவிற்கு செல்வது இல்லை, குறைந்து கொஞ்சமாக இருக்கும் (அதைப் பார்த்து ஒர் நல்ல வார்த்தை சொல்லுவாங்க-**).... சிலர் வெளிப்பார்வையை தடுக்க சவரி முடியைக் கொண்டு கொண்டை போட்டுக் கொள்வர்.
ஆனால் , ஆண்கள் ஆங்கில மருத்துவப்படி தன் தலைகளில் செயற்கை முடிகளை நட்டிக் கொள்கின்றனர். டோப்பாவும் சிலர் பயன் படுத்தி வருகின்றனர் என்றாலும் பெரும்பான்மையானவர் செலவற்ற தொப்பியையே பயன் படுத்தி வருகிறார்கள்.

ஒரு பெண்ணின் அழகை மேலும் கூட்ட இம்முடியும் ஒரு காரணியாகவே அமைந்துள்ளது. அப்படி இரு பாலருக்கும் முக்கியாமான அழகுக் காரணியாய் அமைந்த முடியை இழக்காமல் தடுக்க என்ன செய்யலாம்....

ஆங்கில மருத்துவ முறையில் பல மருந்துகள் வந்தாலும் அதை நம் பெண்கள் விரும்புவதில்லை. பெர்ம்பான்மையானவர் நமது தமிழ் இயற்கை சித்த வைத்திய முறையையே பயன்படுத்தி வருகின்றனர்.

முடி உதிர்வது என்பது ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படிகிறது என்றாலும் அதனை முழுவதுமாக தடுக்க சரியான ஆங்கில மருந்து இன்றளவும் இல்லை.

இங்கே சில சித்த மருத்துவ குறிப்புகளை உங்களின் தலைக் கூந்தல் முடி உதிர்வதனை மெல்ல தடுத்து வளர்க்க எழுதுகிறேன்:

1. முடி வளர : முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும்.

2. சொட்டைத் தலையில் முடி வளர : பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடி வளரும்.

3. வழுக்கைத் தலையில் முடி வளர : கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும், முடியும் வளரும்.

4. முடி இல்லாமல் சொட்டையாக இருக்கும் இடத்தில் முடி வளர நேர்வளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தடவாலாம்.

5. முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க பிஞ்சு ஊமத்தின் காயை அரைத்து பூசினால் புது முடி முளைக்கும்.

முகத்தில் கரும்புள்ளிகளா கவலை வேண்டாம்

முகத்தில் கரும்புள்ளிகளா கவலை வேண்டாம்
முகத்தில் மாசு, மறு, கரும்புள்ளி என்று எதுவும் இல்லாமல் இருந் தாலே முகம் பளபளக்கும். ஒரு வேளை முகப்பருவோ, கரு வளையமோ வந்து விட்டால் அவற்றை எப்படிச் சரி செய்வது? அல்லது தற்காலிகமாக மேக்கப் மூலம் எப்படி மறைப்பது என்று பார்ப்போமா... முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால்...

உங்களுடைய சருமம் ரொம்பவே எண்ணெய்த்தன்மையாக இருந்தால், இந்தக் கரும்புள்ளிகள் அழைக்காமலேயே உங்கள் முகத்தில் வந்து விடும். எப்படிச் சரி செய்வது? ஐஸ் கட்டியை சுத்தமான கைக்குட்டையில் சுற்றி, அதைக் கொண்டு முகத்தை ஒற்றி யெடுங்கள். இப்படிச் செய்தால் முகத்தில் வழி யும் எண்ணெய், கட்டுப்பாட்டில் வரும். சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை தேனுடன் பிசைந்து கரும்புள்ளிகள் மீது தடவி வரவும். லேவண்டர் ஒயிலை தொடர்ந்து அப்ளை செய்து வந்தாலும் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

எப்படி மறைப்பது?

கன்சீலரை சற்று அதிகமாக எடுத்து பிரஷ் ஷின் மூலமாக முகத்தில் தடவி அதன் மீது ட்ரான்ஸுலின்ட் பவுடரை அப்ளை செய்தால், முகத்தில் கரும்புள்ளிகள் இருப்பதே தெரி யாது.

முகத்தில் முகப்பரு மற்றும்

தழும்பு இருந்தால்...


முகப்பருவே ஒரு தொல்லை என்றால், அதைவிட பெருந்தொல்லை அதைக் கிள்ளி விட்டால் வரும் தழும்பு. எப்படிச் சரி செய்வது?

உங்களுடையது எண் ணெய்ப் பசை சருமம் என் றால் தக்காளி ஜூஸ், வெள் ளரி ஜூஸ், தர்பூசணி ஜூஸ் மூன்றிலும் தலா ஒரு டீஸ் பூன் எடுத்துக் கலந்து அதை முகத்தில் தடவி வந்தால், முகப்பருவும் சரியாகிவிடும். அதைக் கிள்ளினால் வரும் தழும்பும் சரியாகிவிடும். உங்களுடையது நோர்மல் சருமம் என்றால் ஒரு டீஸ் பூன் தர்பூசணி ஜூஸ், 4 டீஸ் பூன் ஓட்ஸ் பவுடர், ஒரு டீஸ் பூன் லெமன் ஜூஸ், ஒரு டீஸ்பூன் ஓரேஞ் ஜூஸ் நான் கையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி வாருங்கள் போதும். எப்படி மறைப்பது?

இதற்கும் கன்சீலரை கொஞ்சம் அதிகமாக அப்ளை செய்து, அதன் மீது பிரஷ்ஷால் லேசாக டிரான் ஸுலின்ட் பவுடரை டச் செய்யுங்கள். தழும்பு சற்று ஆழமாக இருந்தால் தொடர்ந்து பேஷியல், ஸ்கிரப்பிங் என்று சரியான இடைவெளியில் செய்து வாருங்கள். முகத்தில் லேசான தீக்காயம் இருந்தால்...

முகத்தில் லேசான தீக்காயம் ஏற்பட்டால், அதற்கு உங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே பெஸ்ட் தீர்வு இருக்கிறது. எப்படிச் சரி செய்வது?

சோற்றுக் கற்றாளையைக் கீறி, அந்த ஜெல்லை அப்படியே தீக்காயத்தின் மீது தடவி வாருங்கள். லேவண்டர் ஒயிலைத் தொடர்ந்து தடவி வந்தால் தீக்காயம் எங்கே என்று தேடி னாலும் கிடைக்காது. தீக்காயத்தினால் ஏற்பட்ட தழும்பு மறைய வேண்டுமென்றால் விட்டமின் ஈ' ஒயிலை அதன் மீது தொடர்ந்து தடவுங்கள். எப்படி மறைப்பது?

இதற்கும் பிரஷ்ஷினால் கன்சீலரை அப்ளை செய்து, அதன் மீது பவுடரை ஸ்பொன்ஜால் தொட்டுத் தடவுங்கள்! உப்பிய கண்களோ, கருவளையமோ இருந்தால்...

எத்தனை அழகான கண்களும் வீங்கி இருந் தாலோ, அதைச் சுற்றி கருவளையம் இருந் தாலோ எடுபடாமல் போய்விடும். எப்படிச் சரி செய்வது?

நேரத்திற்குத் தூங்கினால் கண்கள் வீங்காது. தவிர உருளைக் கிழங்கு மற்றும் வெள் ளரிக்காயை வட்டமாக சீவி அதை கண்களின் மீது 10 நிமிடம் வைத்தால் வீக்கம் மற்றும் கருவளையம் இரண்டுமே சரியாகிவிடும்.

எப்படி மறைப்பது?

உங்கள் ஒரிஜனல் ஸ்கின் கலரை விட லைட் கலரில் கன்சீலரை கண்களைச் சுற்றியுள்ள கரு வளையத்தின் மீது தடவி அதன் மீது உங்க ளின் ஸ்கின் கலர் பவுடர் பவுன்டேஷனை அப்ளை செய்யுங்கள்.

கண்களைச் சுற்றி சுருக்கம் விழுந்தால்...

சட்டென்று வயதைக் கூட்டிக் காட்டிவிடும். இந்தப் பிரச்சினைக்கு என்ன செய்யலாம்?

எப்படிச் சரி செய்வது?

சுருக்கம் உள்ள பகுதிகளில் விட்டமின் ஈ' ஒயிலையோ அல்லது பாதாம் ஒயிலையோ தடவி மென்மையாக மசாஜ் செய்துவிட்டு, பிறகு குளிர்ந்த நீரை கண்கள் மீது மெதுவாக வாரி அடியுங்கள்.

எப்படி மறைப்பது?

மை வைக்கும் இடத்தில் தரமான ஐ ஜெல்' லைத் தடவி பத்து நிமிடம் கழித்து பவுன் டேஷனை அப்ளை செய்யுங்கள். சுருக்கம் தெரியாது.

முடி உதிர்வதை தடுக்க குறிப்பு

Image


முடி உதிர்வதை தடுக்க நாலு டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு அதே அளவு தேங்காய் பாலும் சேர்த்து


தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

வாரத்தில் ஒரு நாள் இதுபோல செய்தால் முடி உதிர்வதை தடுக்கலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...